தினத்தந்தி பத்திரிக்கையின் தவறான நிதானிப்பு
இஸ்லாமாபாத், ஜுன்.4-
பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களிடம் தலீபான்கள் மதவரி என்ற பெயரால் கட்டாய வரி வசூல் செய்து வருகிறார்கள். இதுபோல அந்த நாட்டில் உள்ள இன்னொரு தீவிரவாத இயக்கமான லஸ்கர்-இ-இஸ்லாம் என்ற அமைப்பு பிற மதத்தினரிடம் கட்டாய வரி வசூல் செய்கிறது.
கைபர் கணவாய் பகுதியில் பழங்குடி இன மக்கள் வசிக்கும் இடத்தில் இந்த அமைப்பு செல்வாக்குடன் திகழ்கிறது. இந்த அமைப்பை கடந்த ஆண்டு அரசாங்கம் தடை செய்து உள்ளது. இந்த அமைப்பு பிற மதத்தினரிடம் மதவரியாக ஆண்டுக்கு ரூ.1000 வசூலித்து வருகிறது.
இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய சமூகத்தினர் இந்த மதவரியை செலுத்துவதற்கு சம்மதித்து உள்ளனர். இந்த அமைப்பின் தலைவர் மங்கள் பாக் கை சந்தித்த சீக்கிய தூதுக்குழு இந்த வரியை செலுத்த சம்மதித்து உள்ளது. வரி செலுத்தினால், அவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு ஏற்கிறோம் என்று மங்கள் பாக் உறுதி அளித்தார். பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றோர் ஆகியோருக்கு இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=491944&disdate=6/4/2009






Comment Form under post in blogger/blogspot