இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

இந்த தளம் முதுகெலும்பு இல்லாத,பயந்தாங்கொல்லிகளால் புகார் செய்யப்பட்டு கூக்ளி நிர்வாகத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது.ஆனால் உண்மைதான் என்றைக்கும் வெற்றி பெறும்.குறுக்கு புத்தியுள்ளவர்கள் மட்டுமே இந்த மாதிரியான கீழ்தரமான வேலைகள் செய்வார்கள்.

Saturday, June 28, 2008

சௌதி மன்னர் சவ அடக்கம் கண்டு, இத்தாலி பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா? பொய்யா?




 

சௌதி மன்னர் சவ அடக்கம் கண்டு, இத்தாலி பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா? பொய்யா?

தயவு செய்து சந்தேகம் தீர்த்து வையுங்கள், முஸ்லீம்களே!!!


முன்னுரை: சமீப காலமாக தமிழ் முஸ்லீம் அறிஞர்கள், இஸ்லாமுக்காக பல கட்டுரைகளை, கேள்வி பதில் கட்டுரைகளை, இஸ்லாமை தழுவிய மாற்று மத நண்பர்களின் சாட்சிகளை பதித்துக்கொண்டு வருகிறார்கள். இதே போல கிறிஸ்தவர்களும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். பொதுவாக, உலக அளவில் மக்கள் ஒரு மார்க்கத்திலிருந்து வேறு மார்க்கத்திற்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள். கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாமுக்கும், அதே போல இஸ்லாமிலிருந்து கிறிஸ்தவத்திற்கும் மாறிக்கொண்டு இருக்கிறார்கள். முக்கியமாக கவனித்தால், மத நம்பிக்கையிலிருந்து நாத்தீகத்திற்கும் அதிக அளவில் மக்கள் மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.

முக்கியமாக நான் இக்கட்டுரை எழுதுவதின் நோக்கம், "கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறுகிறார்கள்" என்று இஸ்லாமியர்கள் சொல்லும் செய்திகளில் உள்ள உண்மையை அலசுவதாகும். இந்த விஷயத்தில் பார்க்கும் போது, முஸ்லீம் அறிஞர்கள் (கவனிக்கவும், சாதாரண முஸ்லீம்கள் அல்ல, முஸ்லீம் அறிஞர்கள், கட்டுரை எழுதுபவர்கள் போன்றவர்கள்) பொய்யான தகவல்களை சில நேரங்களில் தெரிந்தே கொடுத்துவிடுவது உண்டு. இப்படிப்பட்ட ஒரு விவரத்தைப் பற்றி தெளிவை அல்லது உண்மையை தெரிவிக்கும் படி நான் தமிழ் முஸ்லீம் அறிஞர்களை கேட்டுக்கொள்கிறேன்.

1. பொய்யை உண்மை என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள்:

மக்கள் சின்ன பொய்யை விட பெரிய பொய்யை சீக்கிரத்தில் நம்புவார்கள் என்று சொல்லுவார்கள். அது போல, நம் இஸ்லாமிய தளங்கள் ஆதாரங்கள் எதையுமே காட்டாமல், பெரிய பொய்களை அவிழ்த்து விட்டுள்ளார்கள். இப்படிப்பட்ட ஒருசில பொய்களை கீழேயுள்ள கட்டுரைகளில் படிக்கலாம்:

A) 2500 கிறிஸ்தவ பாதிரிகள் இஸ்லாமை தழுவினார்கள்:

சூடான் நாட்டின் "கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க சர்ச் கவுன்சிலின்" பொதுச் செயலாளர் இஸ்லாமுக்கு மாறினாராம். இவர் மூலமாக இதுவரை (5 ஆண்டுகளுக்குள்) 1,50,000 பேர் இஸ்லாமுக்கு மாறியிருக்கிறார்களாம். இவர்களில் 2500 பேர் கிறிஸ்தவ போதகர்களாம். படிக்கவும்: 2500 கிறிஸ்தவ பாதிரிகள் இஸ்லாமை தழுவினார்ககளா?

இந்த செய்தி உண்மையா என்று கேட்டேன், இன்று வரை பதில் இல்லை.

B) கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா?

கிறிஸ்தவ பாதிரிகள் ஹஜ்செய்தார்கள் என்று கட்டுரை எழுதினார்கள், அப்படியானால், ஆதாரம் எங்கே என்று கேட்டேன், இதுவரை பதில் இல்லை. ஏதோ ஒரு பத்திரிக்கை பெயரை குறிப்பிடுவார்கள்( தமிழ் நாட்டில் உள்ளவர்கள், அந்த பத்திரிக்கைகளில் இச்செய்தி உள்ளதா என்று தேடிபார்க்கமாட்டர்கள் என்று நம்பிக்கையில்), ஆனால், அந்த செய்தி வெளியான தொடுப்பை கொடுக்கமாட்டார்கள். படிக்க:
கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா? நேசமுடன் தளம் வெளியிட்ட செய்தி பொய்யா மெய்யா?

C) ஜீமெயில் படத்தை திருத்தி, இது தான் ஆதாரம் என்றார்கள்:

தங்களுக்கு வாசகர்களிடமிருந்து கேள்விகள் வந்தன என்றுச் சொல்லி, கிறிஸ்தவம் பற்றி கட்டுரைகளை எழுதினார்கள். இவைகள் பொய் என்றுச் சொன்னோம், உடனே, தங்களுக்கு வாசகர்களிடமிருந்து மெயில் வந்ததாகச் சொல்லி, ஜீமெயில் படத்தை திருத்தி அதை ஆதாரமாக பதித்தார்கள். படிக்க: கிறித்துவம் கேள்வி பதில்-2 : எங்கள் மறுப்பு - 2 Fake Gmail e-mail ஆதாரமாக கொடுத்த இது தான் இஸ்லாம் தளம்

2. இப்பொழுது இன்னொரு செய்தி, முஸ்லீம்களிடமிருந்து:

மன்னர் பஹதின் எளிமையான நல்லடக்கத்தினால் இஸ்லாத்தை ஏற்ற பாதிரியார்!


இந்த செய்தியை நான் பொய் என்று திட்டவட்டமாக சொல்லப்போவதில்லை, அதற்கு பதிலாக இந்த செய்திக்கான ஆதாரத்தை தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த செய்தி பல இஸ்லாமிய தமிழ் தளங்களில் பதிக்கப்பட்டுள்ளது.

இப்னுபஷீர், சித்தார் கோட்டை, மஸ்டோகா, ஆதிரை ஐஐசி, தமிழ் முஸ்லீம்.

இத்தாலிய பாதிரியார் இஸ்லாமை தழுவிய விதம்:

சவுதி அரேபியாவின் மன்னராக இருந்த ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் 2005-ல் மரணமடைந்தார். அவரை தலைநகர் ரியாத்தில் உள்ள பொது மையவாடியில் மிக மிக எளிமையான முறையில் அரச குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்த அரிய நிகழ்ச்சி இத்தாலியில் உள்ள பிரபல கிறிஸ்துவ பாதிரியார் ஒருவரை மனமாற்றம் அடையச் செய்தது. அதைத் தொடர்ந்து அவர் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை ஆக 21, 2005 அன்று வெளிவந்த அரப் நியூஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

emphasis mine

3. இந்த செய்திக்காக இஸ்லாமியர்கள் காட்டிய ஆதாரங்கள்:

இந்த செய்திக்காக இஸ்லாமியர்கள் முன்வைக்கும் ஆதாரம், அரப் நியூஸ் என்ற ஆங்கில தளம் ஆகும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், எந்த ஆங்கில செய்தித் தளத்தை இவர்கள் குறிப்பிட்டார்களோ, அந்த தளத்தில் இச்செய்தி வெளிவந்த தொடுப்பையும் இவர்கள் தரவில்லை. எந்த கட்டுரையை மொழிபெயர்த்தார்களோ அதன் தொடுப்பை கொடுத்து இருக்கலாம், அதையும் இவர்கள் தரவில்லை. மூல தொடுப்பை கொடுக்காமல் கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிடும் கலாச்சாரத்தை என்னவென்றுச் சொல்ல.

இனி இச்செய்தி உண்மையா அல்லது பொய்யா என்பதை அலசுவோம்

4. எளிமையான சவஅடக்கத்தை கண்டு ஒரு கிறிஸ்தவ பாதிரியார் இஸ்லாமை தழுவ வாய்ப்பு இல்லையா?

ஒரு மனிதன் ஒரு மதத்தை ஏற்றுக்கொள்வதற்கு எந்த ஒரு நற்செயலும் காரணமாக இருக்கலாம், ஒரு அரசரின் சவ அடக்கம், மிகவும் எளிமையாக நடைப்பெறுவதைக் கண்டு மக்கள் ஆச்சரியப்பட வாய்ப்பு உள்ளது. இங்கு என் சந்தேகம், என்னவென்றால், இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சி உண்மையா என்பதாகும்? மன்னர் மரித்தது உண்மை தான், மன்னரின் சவ அடக்கம் மிகவும் எளிமையான முறையில் நடந்தது உண்மை தான் ( மன்னர் உயிரோடு இருக்கும் போது எப்படி ஆடம்பரமாக வாழ்ந்தார் என்பது வேறு விஷயம்). ஆனால், இந்த எளிமையான சவ அடக்கத்தைக் கண்டு, கிறிஸ்தவ பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா?

இச்செய்தி:

உண்மையாகவும் இருக்கலாம்

அல்லது

பொய்யாகவும், முஸ்லீம்களின் கட்டுக்கதையாகவும் இருக்கலாம்.


என் கருத்துப்படி, இச்செய்தியில் கொடுக்கப்பட்ட விவரங்களின் படி, இது உண்மையாக இருக்க குறைவான வாய்ப்பு உள்ளது. ஆனால், பொய்யாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக நான் காண்கின்றேன்.

நான் ஏன் இப்படி முடிவு செய்யவேண்டி வந்தது என்பதற்கான காரணங்களை இங்கே தருகிறேன். ஒருவேளை என் கணிப்பு தவறாக இருக்குமானால், அதை தெரிவித்தால், இச்செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில் இக்கட்டுரையை என் தளத்திலிருந்து எடுத்துவிடுகிறேன்.

1. முதலாவதாக, ஆங்கில மூல தொடுப்பையும் முஸ்லீம்கள் தராமல் ஏன் கட்டுரை எழுதுகின்றார்கள்.

நீங்கள் சொல்ல வந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், இக்கட்டுரையை பதித்தவர்களில் ஒருவராவது ஆங்கில தொடுப்பை கொடுத்து இருக்கலாம்.

இக்கட்டுரையின் ஆங்கில தொடுப்பை நான் தருகிறேன்.

Moved by Simplicity of Royal Funeral, Priest Embraces Islam

P.K. Abdul Ghafour, Arab News

... அதைத் தொடர்ந்து அவர் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை ஆக 21, 2005 அன்று வெளிவந்த அரப் நியூஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. ...

Source: http://www.arabnews.com/?page=1§ion=0&article=68768&d=21&m=8&y=2005

2. மொழிபெயர்க்கும் போது, விட்டு விட்ட முக்கியமான விவரம்:

இஸ்லாமியர்கள் இக்கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் போது, தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ கீழ் கண்ட விவரங்களை மொழிபெயர்க்கவில்லை.

"Al-Riyadh Arabic daily reported without mentioning his name."
"ரியாத் நகரில் வெளியாகும் அரபி தின‌ பத்திரிக்கை அவரின் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்தது"


அதாவது, அரப்நியூஸ் என்ற தளத்தில் வெளியான இந்த செய்தி, "Al-Riyadh Arabic daily " பத்திரிக்கையின் மூல தொடுப்பு இல்லாமல், பெயர் இல்லாமல், நாள் இல்லாமல் வெளிவந்துள்ளது. இந்த விவரத்தை ரியாத் நகரில் வெளிவரும் அரபி செய்தித்தாள் வெளியிட்டதாம். இந்த அரப்நியூஸ் தளம் வேறு எந்த ஆதாரத்தையும் தராமல், ஒரே வரியில் தன் ஆதாரத்தை முன்வைத்து விட்டது. சரி, நம் இஸ்லாமியர்கள் அதையாவது மொழிபெயர்த்தார்களா என்று கேட்டால், அதையும் இவர்கள் செய்யவில்லை.

இப்போது நம் சந்தேகங்கள்:

1. ஏன் அரப்நியூஸ் தளம் தான் வெளியிட்ட செய்தி, ரியாதில் தினமும் வெளிவரும் அரபி தினபத்திரிக்கையில் எந்த நாள், எந்த தேதியில் வெளிவந்தது என்று குறிப்பிடவில்லை? இந்த அரப்நியூஸ் தள நிர்வாகிகளுக்கு இச்செய்தி ஒரு பொய்யான செய்தி என்று தெரியுமா?

2. "Al-Riyadh Arabic daily" என்பது ஒரு பத்திரிக்கையின் பெயரா? அல்லது "இந்தியாவில் தமிழில் வெளிவரும் ஒரு பத்திரிக்கையில் வெளியானது" என்று சரியான ஆதாரமே இல்லாமல் சொல்வது போல ஒரு பொதுவான விவரமா?

3. பிரபல கிறிஸ்துவ பாதிரியார் (a well-known Christian priest) என்பதன் பொருள் என்ன?

தமிழில் "பிரபல கிறிஸ்தவ பாதிரியார்" என்றும் ஆங்கிலத்தில் "A Well-Known Christian Priest" என்றும் எழுதிவிட்டு, அவர் இஸ்லாமை தழுவியது, ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு குடிசையில் நடந்த நிகழ்ச்சி போல ஆதாரமே சொல்லாமல் எழுதினால் எப்படி சகோதரரே? என் சந்தேகம் வலுவானதாக மாறியதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

ஒரு பிரபலமான கிறிஸ்தவ பாதிரியார் இஸ்லாமை தழுவினார் என்பது ஒன்றும் ஒரு சாதாரண விஷயமல்லவே! மட்டுமல்ல, அவர் இஸ்லாமுக்கு மாறியிப்பாரானால், வேறு ஏதாவது பத்திரிக்கையில் அச்செய்தி வந்திருக்குமே, இப்படி இஸ்லாமியர் அல்லாத பத்திரிக்கையில் வந்ததாக என் கண்ணில் படவில்லை, தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்.

அப்படியில்லையானால், இந்த பிரபலமானவர் இன்னும் தன் கிறிஸ்தவ சபையையே நடத்திக்கொண்டு, இயேசுவைப் பற்றி சுவிசேஷம் சொல்லிக்கொண்டு இருக்கிறாரா? ஒரு பிரபல பாதிரியார் இஸ்லாமுக்கு மாறியிருந்தால், அந்த சபைக்கு முதலாவது தெரியும், அவர் சபையை நடத்தமாட்டார், இந்த விஷயம் குறைந்தபட்சம் இத்தாலியில் அவர் வாழ்ந்த நகரில், ஒரு செய்தியாக செய்தித்தாள்களில் வெளிவந்து இருக்கும். இந்த இணைய காலத்தில், இணையத்திலும் உலாவரும்.

சில முஸ்லீம்கள் "அவரது உயிருக்கு ஆபத்து வரும் என்பதால் தான், அவர் பெயர் மற்றும் இதர விவரங்கள் வெளியிடவில்லை" என்று சொல்லக்கூடும். இது பலவீனமான வாதம் ஏனென்றால், அவர் தழுவியது இஸ்லாமை, அப்படியானால், அவருக்கு பாதுகாப்பு நிச்சயமாக இஸ்லாமியர்களே தருவார்கள், இன்னும் ஒரு விவரம் என்னவென்றால், எந்த கிறிஸ்தவனும் அவரை கொல்லமாட்டான், அப்படி கொல்லும்படி எங்களுக்கு எங்கள் தேவன் கட்டளை கொடுக்கவும் இல்லை, அதாவது ஒரு கிறிஸ்தவர் முஸ்லீமாக மாறினால் அவரை கொல்லுங்கள் என்று இத்தாலியில் இப்படி ஒரு சட்டமும் இல்லை. விஷயம் இப்படி இருக்கும் போது, எப்படி ஆபத்து வரும்? இது நம்பும்படி இல்லை.

4. ஆதாரத்திற்காக இணையத்தில் என் தேடல்:

இக்கட்டுரையை எழுதுவதற்கு முன்பாக, இணையத்தில் இதற்கு யாரவது பதில் அளித்து இருப்பார்கள் என்று தேடிப்பார்த்ததில், ஏமாற்றம் தான் மிஞ்சியது.

ஆனால், ஒரு கத்தோலிக்க போரமில் (http://forums.catholic.com/showthread.php?t=70876 ) ஒரு இஸ்லாமிய உறுப்பினர் இதே கட்டுரையை பதித்து இருந்தார்கள். அதற்கு ஆதாரம் என்ன‌? என்று அத்தளத்தில் கேட்கப்பட்டு இருந்தது, இதற்கு அக்கட்டுரையை பதித்த இஸ்லாமியர், தான் அந்த செய்தியை வெளியிட்ட அரப்நியூஸ் தளத்திற்கு மெயில் அனுப்பி, இன்னும் விவரங்களை சேகரித்து, பதிப்பதாக சொல்லியிருந்தார்கள்.

Re: Priest Embraces Islam B/c Of Fahd's Funeral

The story was taken from www.arabnews.com, which is run by Saudi Research & Publishing Co., a Saudi based English-language daily newspaper. It is a well established news outlet and is distributed around the world. It seems they took the story from ar-Riyadh, which is an arabic newspaper.

As for why theres no name, perhaps he didnt wanna be named for fear or to avoid public attention.

Anyhow, i dont mind looking into the story myself, i will write to the writer of the article and ask if he could provide more sources for the story. If he replies, ill post the sources. …..

I think it is fair for those reading this thread to doubt the story. Although what i know from that source is that they are credible, i cannot find anymore sources other than them. And since this is regarding a conversion, it is important there be no shadow of a doubt the story is true.

thanks for all your replies.

Source : http://forums.catholic.com/showthread.php?t=70876

அதே போல, ஒரு கிறிஸ்தவ சகோதரர், வாடிகன் ஏசியாநியூஸ்(AsiaNews, Vatican) செய்தித்தாள் நிறுவத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, அப்படி யாரும் மாறவில்லை என்று சொன்னதாக தெரிவித்துள்ளார். (உண்மையிலேயே இத்தாலி பாதிரியார் இஸ்லாமுக்கு மாறினார் என்பதை ஆதாரத்துடன் நிருபித்தால், இந்த சகோதரருக்கு மெயில் அனுப்பி இவரது செய்தியின் நம்பகத்தன்மையை நான் அறிந்துக்கொள்வேன்). இதையும் படிக்கவும்.

I have received a mail from the Director of Asianews, Vatican.

According his reports no priest embraced to Islam recently from Italy.

If any one has any link with the priest`s name please provide. If you don`t have his name and clear address please don`t.

Source Page 2: http://forums.catholic.com/showthread.php?t=70876&page=2

இந்த கத்தோலிக்க இணையத்தில் இப்பதிவுகள் பதிக்கப்பட்டது கடைசியாக செப்டம்பர் மாதம் 2005ம் ஆண்டு ஆகும்(மன்னர் காலமானவது 2005 ஆகஸ்ட் மாதமாகும்.) ஆனால், இதுவரை எந்த தகவலும் அந்த இஸ்லாமிய உறுப்பினர் பதித்ததாக தகவல் இல்லை.

5. தமிழ் முஸ்லீம்களிடம் நான் கேட்க விரும்புவது?

இந்த ஒரு செய்தியை பல தளங்களில் பதித்து உள்ளீர்கள், உங்களில் யாராவது அந்த அரப்நியூஸ் செய்தித்தாள் தளத்திற்கு மெயில் அனுப்பி, விவரங்களை தெரிந்துக்கொண்டு பதித்தால், நீங்கள் சொன்னது உண்மை என்று நிருபிக்கப்படும். இந்த வேலையை நாங்கள் ஏன் செய்யப்போகிறோம், நீ தான் செய்யனும் என்று என்னிடம் கேட்கவேண்டாம், ஏனென்றால், செய்தியை ஆதாரம் இல்லாமல் வெளியிட்டது நீங்கள், எனவே, ஆதாரத்தை சேகரிக்கும் வேலையும் உங்களுடையது தான். ரியாதில் உள்ள உங்கள் நண்பர்களை தொடர்பு கொண்டு அந்த "ரியாத் தினசெய்தித்தாள்" பற்றி தெரிந்துக்கொண்டு விவரங்களை சேகரித்து தெரிவியுங்கள். இப்படி நீங்கள் செய்தால், உங்கள் நம்பகத்தன்மை, நேர்மை வெளிப்படும், இஸ்லாமுக்காக நீங்கள் படும் பாடுகள் அனைத்திற்கும் உபயோகம் என்பது இருக்கும்.

நீங்கள் இந்த விவரங்களை தரவில்லையானால், பல பொய்களில் இதுவும் ஒரு பொய் என்று எல்லா மக்களுக்கும் தெரிந்துவிடும். உங்கள் தளங்களில் உள்ள கட்டுரைகளின் நம்பகத்தன்மை என்னவென்று எல்லாருக்கும் தெரிந்துவிடும்.

முடிவுரை: இதுவரை நான் சொன்ன விவரங்களில் ஏதாவது குறைகள் இருக்குமானால், அல்லது இதற்கு யாராவது பதில் சொல்ல விரும்பினால், எனக்கு தெரிவியுங்கள் ( isa.koran (at) gmail (dot) com ). அல்லது பின்னூட்டம் இடுங்கள். கடைசியாக நான் சொல்லவிரும்புவது இது தான், நீங்கள் சொன்ன விவரம் உண்மையாக இருக்குமானால், உங்களால் நிச்சயமாக ஆதாரங்களை சேகரிக்கமுடியும். எனக்கு வந்த இந்த சந்தேகம் தீர்க்கப்படலாம்.

என் சந்தேகத்தை மட்டுமே முன்வைத்தேன், ஒருவேளை உண்மையாகவே இத்தாலிய பாதிரியார் இஸ்லாமுக்கு மாறியிருக்கலாம், ஆனால், ஆதாரம் எங்கே என்று தான் கேட்கிறேன். இச்செய்தி பொய்யாக இருக்கலாம் என்று நம்புவதற்கு அதிகமாக வாய்ப்புக்கள் இருப்பதால் தான் நான் கேட்கிறேன், உங்களை அவமானப்படுத்த அல்ல.

(பின்குறிப்பு: யாராவது ஒரு பொய்யான மெயிலை தயார் செய்து, இது எங்களுக்கு அரப்நியூஸ் தள நிர்வாகத்திலிருந்து வந்தது என்றுச் சொல்லி, மறுபடியும் பொய்யான தகவலை பதித்தால், அதுவும் வெளிவர அதிக நாட்கள் பிடிக்காது என்பதையும் என் அருமை தமிழ் இஸ்லாமிய அறிஞர்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்).

ரோமர் 1:18 சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.



 

 

Monday, June 23, 2008

அறிஞர் அண்ணாவும் இஸ்லாமும்: ஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய அமைதி கடிதம்





அறிஞர் அண்ணாவும் இஸ்லாமும்: ஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய அமைதி கடிதம்
 
இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று அறிஞர் அண்ணா சொன்னதாக ஒரு கட்டுரையை படித்தேன், அதை அப்படியே கீழே தருகிறேன். பிறகு இக்கட்டுரையின் கீழே "ஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய கடிதம் தரப்பட்டுள்ளது", அதையும் படியுங்கள். இதை படிக்கின்ற உங்கள் கையிலேயே முடிவை விட்டுவிடுகின்றேன்.

வாளால் வளர்ந்ததா இஸ்லாம்? அறிஞர் அண்ணா


பலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலைநீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்கருத்துக்களையும் உணரவேண்டும்.சிலர் பலாப்பழத்தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள்.

அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம். ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம்.இஸ்லாம் எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்திருக்கிறது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்.பிற மதங்களிலே அற்புதங்கள் அதிகம்; அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்திலே அடிப்படை உண்மைகள் அதிகம் அற்புதங்கள் குறைவாகவேயுள்ளன. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது; இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு.இந்தியாவில் முகலாயர் ஆட்சியும் மற்ற முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியும் இருந்தபோது முஸ்லிம்கள் ஒரு கோடிபேர் கூட இருக்கவில்லை. அந்த அரசுகளெல்லாம் மறைந்த பிறகே பத்து கோடி மக்களாகப் பெருகினார்கள்."ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ன நன்னெறி பரவியிருந்த நாட்டிலே இடையிலே அக்கருத்துக்களெல்லாம் மறந்திருந்த நிலையில் இஸ்லாம் அக்கருத்துக்களையே வலியுறுத்தவும், 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இஸ்லாம் பரவிற்று.தொட்டிலிலே படுத்துறங்கும் குழந்தையைத் தட்டி எழுப்பிய உடனே தாயை எப்படி கட்டியணைத்துக் கொள்கிறதோ அவ்வாறே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன.


Source: http://adirai-iic.blogspot.com/2008/06/blog-post_21.html

----------------------------------------------------------------------

ஓமன் நாட்டு அரசனுக்கு முகமது அனுப்பிய கடிதம்

முகமது ஓமன் நாட்டு அரசன் "ஜாஃபர்" மற்றும் அவர் சகோதரன் "அப்து அல் ஜலாந்தி" என்பவருக்கும் ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தை முகமதுவின் தூதுவர் "Amr bin al-'As al-Sahmi and Abu Zaid al-Ansari" கொண்டுச் சென்றார்.

இன்று இஸ்லாமியர்கள் மேடைகளில், வெப்தளங்களில், மற்றும் தொலைக்காட்சி மற்றும் இதர சாதனங்கள் மூலமாக இஸ்லாமை பரப்பிக்கொண்டு வருகின்றனர். அவர்கள் இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும், இன்னும் இதர மக்களையும் இஸ்லாம் பக்கம் ஈர்க்க முன்வைக்கும் வாதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



1. இஸ்லாம என்றால் அமைதி என்று பொருள்:

2. இஸ்லாமில் கட்டாயமில்லை:

3. இஸ்லாம் வாள் மூலம் பரப்பப்பட்டது என்று சொல்லும் செய்தி பொய்யானது.

4. நபி (முகமது) அவர்கள் செய்த போர்கள் அனைத்தும், தற்காப்புக்காக செய்தவை. தாமாக அவர் என்றுமே சண்டையிட்டது இல்லை.

5. ஜிஹாத் என்றால், தற்காப்புக்காக நமக்கு ஆபத்து வரும் போது செய்யும் சண்டையே தவிர, நாமாக சண்டையிடுவது இல்லை.

6. முகமது அவர்கள் யாரிடமும் வீணாக சண்டையிட்டது இல்லை. அவரைப்போல நல்லவர் உலகில் வேறு யாருமில்லை.


இப்படி பல செய்திகளை இஸ்லாமியர்கள், முன்வைப்பார்கள்.

ஆனால், ஓமன் நாட்டு அரசருக்கு முகமது என்ன எழுதினார் என்று பாருங்கள்.

ஓமன் நாட்டு அரசருக்கு முகமது எழுதின கடிதம்

"Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God's Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom."

ஓமன் நாட்டு அரசருக்கு முகமது எழுதின கடிதம் - தமிழாக்கம்

நேர்வழியில் நடப்பவன் மீது சாந்தி உண்டாகட்டும்! இஸ்லாமிற்கு நான் உங்களை அழைக்கிறேன். என் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் சேதமாகாமல் இருப்பீர்கள். நான் மனித இனத்திற்காக வந்த இறைவனின் தூதுவன்(தீர்க்கதரிசி) ஆவேன், தீமை செய்பவர்கள் மீது இறைவனின் வார்த்தையை காட்டுவதற்காக வந்தேன். எனவே, நீங்கள் இஸ்லாமை அங்கீகரித்தால், என் வலிமையை(POWER) உனக்குத் தருவேன். ஆனால், நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்தால், உன் வலிமை(POWER) அழிக்கப்படும். என் குதிரைகள் உன் நாட்டின் நிலத்தில் பாளயமிறங்கும், என் தீர்க்கதரிசனம் உன் நாட்டின் மீது வெற்றிக்கொள்ளும்.


Photograph of the Arabic original and the English text as it is on display at Sohar Fort, Sultanate of Oman


சமத்துவம், சகோரத்துவம் பேசும் இஸ்லாமிய நண்பர்களே,கீழ்கண்ட கேள்விகள் உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்:

1. இக்கடிதம் யார், யாருக்கு எழுதியது?

2. இக்கடிதம் எழுதுவதற்கு முன்பாக முகமதுவிற்கு "இந்த நாட்டு அரசனால் ஆபத்து ஏதாவது இருந்ததா?"

3. இக்கடிதத்தில் முகமது மிகவும் நிதானமாக பேசுவதைக்கண்டீர்களா?

4. அதே நிதானத்தோடு அந்த நாடு அழிக்கப்படும் என்று சொல்வதை கவனித்தீர்களா?

5. இதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் என்ன பதில் சொல்வார்கள்?

6. தன் நாட்டில் இருந்துக்கொண்டு, முகமதுவிற்கு எந்த பயமுறுத்தலோ அச்சுருத்தலோ செய்யாமல் இருக்கின்ற அரசனுக்கு, இஸ்லாம், அல்லா, முகமது விடுக்கும் "அழைப்பு" எப்படி இருக்கிறது என்றுப் பார்த்தீர்களா?

7. முகமது இஸ்லாமின் நன்னடத்தையைக் காட்டி அந்த அரசனை இஸ்லாமிற்கு அழைக்கிறாரா? அல்லது அழித்துவிடுவேன் என்று பயமுறுத்தி அழைகிறாரா?

9. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிக படைபலம் உள்ள அரசனாக இருந்தால், முகமதுவோடு சண்டையிட்டுயிருப்பான், குறைந்த படைபலம் உள்ளவனாக இருந்தால், "இஸ்லாமை ஏற்றுக்கொண்டு" முகமதுவின் "ஜகாத்" கொடுத்துக்கொண்டு இருந்திருப்பான்.

10. கொன்றுவிடுவேன் என்று பயமுறுத்தி கொண்டுவரும் "பக்தி", "நமாஜ்" அல்லது "தொழுகை" உண்மையானதாக இருக்குமா? இதைத் தான் உண்மை தெய்வம் எதிர்பார்க்குமா?

11. இஸ்லாமில் கட்டாயமில்ல, இஸ்லாம் அமைதியான மதம், இஸ்லாம் கத்திமுனையில் பரப்பப்பட்டது இல்லை என்று சொல்லிக்கொள்கிறீர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் ?

12. இது தான் இஸ்லாம் காட்டும், முகமது காட்டும் வழியா?

கீழ் கண்ட வசங்களை சொன்னது யார் என்றுத் தெரியுமா உங்களுக்கு?

மத்தேயு 10:14 எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.
லூக்கா 9:5 உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்றார்.
அப்போஸ்தல நடபடிகள் 13:51 இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள்.


இயேசு தன் செய்திகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் ஊரை விட்டு வரும் போது, காலில் படிந்த துசியைக்கூட உதறிவிட்டு வரும்படிச் சொன்னார், அவர்களை சபிக்கவேண்டாமென்றுச் சொன்னார். சீடர்களும் அப்படியே செய்தார்கள். ஆனால், முகமதுவோ தன் செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லையானால், போர் செய்வேன், நாட்டை பிடிப்பேன், உன் வலிமையை அற்றுப்போகப்பண்ணுவேன் என்றுச் சொல்கிறார்.

இயேசு அஹிம்சை மூலமாக தன் செய்தியை தெரிவித்தார். முகமதுவோ "ஹிம்சை" மூலகாம தன் செய்தியைச் சொன்னார். ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகள் வேண்டுமானால், வெவ்வேறு குணங்களை கொண்டிருக்கலாம், ஆனால், ஒரு இறைவன் அனுப்பியவர்கள் வெவ்வேறு கோட்பாடுகள் கொண்டு தன் செய்திகளைச் சொல்லமாட்டார்கள்.

இதில் யாராவது ஒருவர் தான் உண்மையாக இருக்கமுடியும்? இயேசு அல்லது முகமது ? முகமது சொன்னதை பின்பற்றிக்கொண்டு, இயேசுவைக் கூட அதே இறைவன் தான் அனுப்பினான் என்றுச் சொல்வது அறிவுடமையாகுமா? சிந்தியுங்கள்.

எனவே, கிறிஸ்துவின் பாதையில், அமைதியின் பாதையில், உண்மையின் பாதையில் வரும் படி நான் உங்களை அழைக்கிறேன். இன்று நீங்கள் எடுக்கும் முடிவு, உங்கள் வாழ்வில் ஒரு வித்தியாசத்தைக் கொண்டுவரும், நிம்மதியைக்கொண்டுவரும். இயேசுவை உங்கள் உள்ளத்தில் வரும் படி அழையுங்கள், அது போதும். உங்கள் மீது சாந்தி, சமாதானம் உண்டாகட்டும்.

1) Image Source:  http://www.answering-islam.de/Main/Muhammad/oman.gif
 
 

அபுமுஹை வாதம் தவறு-பி.ஜெய்னூல் ஆபிதீன்

அபுமுஹை அவர்கள் எழுதிய நான்கு கட்டுரைகளுன் வாதத்தை பிரபல இஸ்லாமிய அறிஞர்  பி.ஜெய்னூல் ஆபிதீன் அவர்கள் மறுக்கிறார்.
 
அபுமுஹை வாதம்
 
 
 
 
 
 
இந்த இரண்டு பேர்களின் கட்டுரைகளை படித்து இஸ்லாமை புரிந்து கொண்டவர்கள்.
 
 

Wednesday, June 18, 2008

பொய்யும்,புணை சுருட்டுமான பிரச்சாரங்கள் - உங்கள் பார்வைக்கு வெளிச்சத்தில்

இஸ்லாமியர்கள் இதுநாள் வரை குரானில் எந்த கலப்படமும் இல்லை.குரான் முழுமையாக பாதுகாக்கப்பட்டது.அதை அல்லாவே பாதுகாத்தான் என்றெல்லாம் எல்லாருடைய காதிலும் பூ சுற்றி வந்ததை நாம் அறிவோம்.
 
தற்பொழுது இந்த புளுக்குக்கு முடிவு வந்து விட்டது.ஆம் தமிழ் நாட்டின் இஸ்லாமிய அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஏகத்துவம் என்ற பத்திரிக்கையில் ஏப்பரல் மாதம் எழுதியுள்ள கட்டுரையில் குரானில் கலப்படம் இருந்ததாகவும்.அதை நீக்க இவருக்கு அல்லா அருள் புரிந்ததாகவும் சொல்லியுள்ளார்.இது எதோ தமிழ் நாட்டில் மட்டும் உருவான கலப்படம் அல்ல இஸ்லாம் உருவான சவுதி அரேபியாவிலேயே இந்த குரான் கலப்படம் இருந்ததாக அவர் சொல்கிறார்.
 
 
 
ஏகத்துவம் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையின் பகுதி கீழே
 
 
கலப்படமின்மை

வணக்கங்களில் பித்

த் கூடாது ன்று தத்துவார்த்தமாகச் சொன்ன போது, மக்கள் மிகக் கடுமையாக தை திர்த்தனர். ன்று தே மக்கள் செயல்பாட்டு டிப்படையில் பார்க்கும் போது தை எற்றுச் செயல்படவும் அரம்பிக்கின்றனர். ல்ஹம்துலில்லாஹ்.

 

ஆவ்வாறு வணக்கங்களில் கலந்து விட்ட கலப்படங்களைக் களைந்து விட்டோம். அனால் குர்அனில்

ள்ள கலப்படங்களை நாம் துவரைக் களையவில்லை. குர்அனில் கலப்படமா? ன்று கொதிப்புடனும், ச்சரியத்துடனும் நீங்கள் ங்கு கேள்வி ழுப்பலாம். தற்கான விடை கீழே டம் பெற்றுள்ளது. தமிழகம் மட்டுமல்ல! சவூதியின் வெளியீடுகளில் கூட ந்தச் சேர்மானங்கள் டம் பெறத் தவறவில்லை.

 

ந்தச் சேர்மானங்களைக் களைவதற்கு ல்லாஹ் ஒர் ரிய வாய்ப்பை வழங்கினான். து தான் ந்தத் தமிழாக்கமாகும்.

 

1. மன்ஜில்

2. ருகூவுக்கள்

3. ஸஜ்தா

டையாளங்கள்

4. நிறுத்தல் குறியீடுகள்.

5. வேண்டாத அய்வுகள்

6. மக்கீ, மதனீ

7. குர்அனை முடிக்கும் துஆ

 

மேற்கண்ட

ந்தச் சேர்மானங்களை நீக்கி வெளியிட்டிருப்பதன் மூலம் ஆந்த தர்ஜுமா தனிச் சிறப்பைப் பெறுகின்றது. ல்லாஹ்வைப் பயந்து, லகத்தில் யாருக்கும் பயப்படாமல் ரு தூய வடிவைக் கையாண்டதற்காக து கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

 

குர்அன் மொழியாக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றியதுடன் மட்டுமின்றி, குர்அனில்
ருந்த ந்தக் கலப்படங்களை மக்களிடம் டையாளம் காட்டி, ப்புறப்படுத்தியதும் தவ்ஹீது ஜமாத் செய்த சாதனைகளில் ன்று ன்றால் மிகையாகாது.
 
 
ஏகத்துவம் ,ஏப்ரல் 2008:http://www.onlinepj.com/
 
 
 
 
இந்த கட்டுரையை படித்த உங்களுக்கு கண்டிப்பாக இவகளின் போலி முகங்கள் வெளிப்பட்டிருகும்.
 
 
இந்த நிலையில் தமிழ் உலக மக்கள் இந்த  போலியான  இஸ்லாமிய பிரச்சாரங்களை உதறித்தள்ளுவது மட்டும் அல்ல அவர்களின் பொய்யும், புணை சுருட்டுமான எழுத்துக்களை எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டிக்கொள்ளுகிறோம்.

Tuesday, June 17, 2008

பைபிள் மீது முஸ்லீம்களின் குற்றச்சாட்டு அம்பலம் - இஸ்லாமிய நபிகளும், பாவங்களும் - 2




இஸ்லாமிய நபிகளும், பாவங்களும் - 2

(பைபிள் மீது முஸ்லீம்களின் குற்றச்சாட்டு அம்பளம்)


தமிழ் கிறிஸ்தவர்களின் முன்னுரை: தமிழ் முஸ்லீம்கள் கடந்த சில மாதங்களாக பைபிளுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அவைகளில் முக்கியமானது:

பைபிள் நபிகளை(தீர்க்கதரிசிகளை)ப் பற்றி தரம் குறைவாக விவரிக்கிறது என்ற குற்றச்சாட்டாகும்.

முக்கியமாக தாவீது உரியாவை கொன்று அவன் மனைவியை தன் மனைவியாக்கிக் கொண்ட நிகழ்ச்சி தவறானது, இப்படி அவர் செய்யவில்லை. பைபிள் தவறாக இப்படிச் சொல்கிறது. அல்லாவின் நபிகள் இப்படி அநியாயமாக ஒரு பெண்ணின் மீது மோகம் கொண்டு கொலை எல்லாம் செய்யமாட்டார்கள் என்று பலவாறு குற்றம் சாட்டுகிறார்கள்.

உரியாவின் மனைவியாகிய பெத்செபாளுக்கும் தாவீதுக்கும் பிறந்தவர் தான் சாலொமோன் என்று பைபிள் கூறுகிறது. ஆனால், இதற்கு உயர் மட்ட இஸ்லாமிய அறிஞர்கள் முதற்கொண்டு, சராசரி சாதாரண முஸ்லீம் வரை அனைவரும் பைபிளை இந்த விஷயத்தில் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால்:

1. தாவீது உரியாவின் மனைவி மீது மோகம் கொண்டார் என்றும்,

2. தாவீது உரியாவை திட்டமிட்டு கொன்றார் என்றும்,

3. தாவீதின் பாவத்தை அல்லா அவருக்கு உணர்த்தினார் என்றும்,

4. பிறகு தாவீது தன் பாவத்திற்காக அல்லாவிடம் பாவ மன்னிப்பு கோரினார் என்றும்

குர்‍ஆனின் வசனங்களும், இஸ்லாமிய பாரம்பரியமாகிய ஹதீஸ்களும், ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்களும், குர்‍ஆனுக்கு உரை எழுதிய இஸ்லாமிய அறிஞர்களும் ஏக மனதாக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை மட்டும் நம் தமிழ் முஸ்லீம்கள் மறைக்கிறார்கள் அல்லது இவர்களுக்கு இதைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

நாம் முதல் பாகமாக, "இஸ்லாமிய நபிகளும், பாவங்களும் - 1" என்ற கட்டுரையை வெளியிட்டோம், இப்போது இரண்டாம் பாகமாக, தாவீது உரியாவை கொன்று அவன் மனைவியை எடுத்துக்கொண்ட விவரங்களை குர்‍ஆன் மற்றும் இஸ்லாமிய மூலங்களிலிருந்து அலசுவோம்.

பிஜே அவர்கள் முதல் புத்தம் புதிய இஸ்லாமிய தளங்கள் வரை அனைவரும் பைபிள் மீது இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இவர்கள் எல்லாருக்கும் எங்கள் பதிலாக இக்கட்டுரையை முன்வைக்கின்றோம்.

இஸ்லாமிய நபிகளும், பாவங்களும் பாகம் - 1ஐ படிக்க இங்கு சொடுக்கவும்

பாகம் 2 தொடர்கிறது...


இஸ்லாமிய நபிகளும், பாவங்களும் - 2

(பைபிள் மீது முஸ்லீம்களின் குற்றச்சாட்டு அம்பளம்)


Islam and the Sins of the Prophets By Sam Shamoun

கடைசி எடுத்துக்காட்டாக தாவீது மற்றும் பெத்செபாளைப் பற்றி சிந்திக்கப்போகிறோம். குர்‍ஆனிலே இந்த நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட சில மறைமுக குறிப்புக்கள் உள்ளன.

தாவீதை சந்தித்த இரண்டு வழக்காளிகள் பற்றி குர்‍ஆன் வசனங்கள் - குர்‍ஆன் 38:21-24,30


அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள் (தாவூது இறைவணக்கத்திற்காக அமைத்திருந்த) மிஹ்ராபின் சுவரைத் தாண்டி - (38:21)

தாவூதிடம் நுழைந்த போது அவர்; அவர்களைக் கண்டு திடுக்குற்றார்; அப்போது அவர்கள் கூறினார்கள்; "பயப்படாதீர்! நாங்களிருவரும் வழக்காளிகள்; எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார்;; எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்! எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!" (38:22)

(அவர்களில் ஒருவர் கூறினார்;) "நிச்சயமாக இவர் என்னுடைய சகோதரர்; இவரிடம் தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருக்கின்றன் ஆனால் என்னிடம் ஒரே ஓர் ஆடுதான் இருக்கிறது அவர் அதனையும் தனக்குக் கொடுத்துவிட வேண்டுமெனச் சொல்லி, வாதத்தில் என்னை மிகைத்து விட்டார்." (38:23)

(அதற்கு தாவூது;) "உமமுடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்யசமாக அவர் உம்மீது அநியாயம் செய்து விட்டார்; நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்; ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர இத்தகையவர் சிலரே" என்று கூறினார்; இதற்குள்; "நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்" என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக்குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார். (38:24)

இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம்; சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர். (38:30)

இந்த கதை நமக்கு 2 சாமுவேல் 12:1 லிருந்து 14ம் வசனம் வரை உள்ள நிகழ்ச்சியை நியாபகப்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் நாத்தான் என்பவர் தாவீது செய்த தவறை "ஒரு பணக்காரன் எப்படி தன் அயலகத்தானுடைய ஆட்டை ஏமாற்றி எடுத்துக்கொண்டார் என்று உவமையாக" சொல்லி வெளிப்படுத்தினார். ஆனால், குர்‍ஆன் மற்றும் பைபிள் சொல்லும் விவரங்கள் இரண்டிற்கும் உள்ள ஒரே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், நாத்தான் சொன்ன ஒரு உவமைக்கதையை குர்‍ஆன் ஒரு சரித்திர நிகழ்வாக மாற்றி சொல்லியுள்ளது!

இது குர்‍ஆனின் ஆசிரியருக்கு எது சரித்திர நிகழ்ச்சி என்பதை பகுத்தறியும் ஞானம் இல்லை என்பதை காட்டும் இன்னொரு அத்தாட்சியாகும்: மேலும் அறிய படிக்கவும்:

Quran External Contradictions
Quran's History Compressions

பொதுவாக, இரண்டு பேர் அரச சபைக்குச் சென்று தங்கள் பிரச்சனையை அரசரிடம் சொல்லி தீர்த்துக்கொள்ளும்படி முடிவு செய்தால் அதற்கு முன்பு பல முறை சிந்தித்துப்பார்ப்பார்கள். முக்கியமாக வழக்காடுபவர்கள் இரண்டு பேர் இருந்தால், நிச்சயமாக பல முறை யோசிப்பார்கள். ஒரு ஏழை, அரசர் தனிமையில் இருக்கும் போது, தன்னை ஏமாற்றிய பணக்காரனை தன்னோடு கூட‌ அரசரிடம் முதல் விசாரணைக்கு அழைத்துச் செல்லமுடியுமா என்பது கற்பனை செய்து பார்ப்பதும் கடினமே. அவ்வளவு ஏன், பொதுவாக அரசர் மக்களுக்கு முன்பாக அரச சபையில் இருக்கும் போதும் கூட அழைத்துச் செல்லமுடியாது. நிஜ உலக நிகழ்வுகளை நாம் கவனிக்கும் போது, ஏமாற்றப்பட்டவன் அல்லது நஷ்டமடைந்தவன் அரசரிடம் சென்று தன் வழக்கை முதலாவது சொல்லுவான். அதன் பிறகு தான் காவல் துறையினர் அல்லது அரச காவலாளிகள் சென்று குற்றம் இழைத்தவனை அரச நீதிமன்றத்திற்கு அழைத்துவருவார்கள். ஆனால், குர்‍ஆன் சொல்லும் நிகழ்ச்சியை கண்ணோக்கினால், இப்படி நடந்ததாக நிச்சயமாக தெரியவில்லை. ஒரு சரியான பகுத்தறிவுடன் நாம் இதை அனுகினால், பைபிள் சொல்லும் நிகழ்ச்சியே மிகவும் சரியானதாகவும்,மற்றும் உண்மையானதாகவும் இருக்கமுடியும் என்பதை நாம் கவனிக்கமுடியும். இந்த நிகழ்ச்சி பற்றிய மேலதிக விவரங்கள் இந்த கட்டுரையில் "I am ALL the Prophets" விவாதிக்கப்பட்டுள்ளது.

1. அல்-தபரி(Al-Tabari) சரித்திர நூலிலிருந்து ஆதாரம்:

இந்த நிகழ்ச்சியை மேலும் தொடர்ந்து பார்ப்போம். இதை படிக்கும் உங்களுக்கு இது ஆச்சரியமாக கூட‌ இருக்கலாம். இஸ்லாமிய ஆரம்ப கால அறிஞர்கள் குர்‍ஆன் சொல்லும் இந்த கதை "தாவீதையும், பெத்செபாளையும்" பற்றிய நிகழ்ச்சியை குறிக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருந்தது இல்லை. கீழே கொடுப்பட்ட விவரங்கள் அல்-தபரி(Al-Tabari) என்ற சரித்திர நூலிலிருந்து எடுத்தது:

ஒரு நாள், தாவீது தன் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுக்கு இறைவனிடம் எவ்வளவு மதிப்பு இருந்ததோ அது போல மதிப்பு தனக்கும் தேவை என்று தன் இறைவனிடம் வேண்டிக்கொண்டார். இறைவன் எப்படி முற்பிதாக்களை சோதித்தாரோ மற்றும் பிறகு அவர்களுக்கு எப்படி கிருபை பொழிந்தாரோ அது போல, தன்னை சோதித்து, நல்ல பலனை தனக்கு அருளும்படி தாவீது இறைவனிடம் வேண்டிக்கொண்டார்.

முஹம்மத் பி. அல்ஹுசைன் அஹமத் பி. அல்முஃபட்டல் அஸ்பத் சொல்கிறார்:

அல்‍-சுத்தி கூறுகிறார், தாவீது தன் நேரத்தை மூன்று பாகங்களாக(நாட்களாக) பிரிந்திருந்தார். முதல் நாளை தன் மக்களோடு கழிப்பார், அடுத்த நாளை தன் இறைவனின் பாதத்தில் கழிப்பதற்கு ஒதுக்குவார், மற்றும் மூன்றாம் நாளை தன் மனைவிகளோடு கழிப்பதற்கு ஒதுக்குவார், அந்த சமயத்தில் அவருக்கு 99 மனைவிகள் இருந்தார்கள். அவர் புத்தகங்களில் படித்தார், ஆபிரகாமின், ஈசாக்கின் மற்றும் யாக்கோபின் விசேஷித்த தன்மையை அவர் கண்டுக்கொண்டார். இவைகளை அவர் படித்து கண்டுபிடித்த பிறகு, அவர்: "ஓ இறைவா! என் முற்பிதாக்கள் நல்ல நிலையை பெற்று இருந்தார்கள், அவர்களுக்கு இருந்த அதே நிலையை எனக்கும் அருளுங்கள்" என்று வேண்டிக்கொண்டார்.

பிறகு இறைவன் அவருக்கு அறிவித்தார்(Inspired him): "உன் முற்பிதாக்கள் பல விதங்களில் கடினமாக சோதிக்கப்பட்டார்கள், ஆனால் இதுவரை இப்படி நீ சோதிக்கப்படவில்லை. ஆபிரகாம் தன் மகனை பலி கொடுக்கும்படி சோதிக்கப்பட்டார், ஈசாக்கு தன் கண்பார்வையை இழந்தார், மற்றும் யாக்கோபு தன் மகனாகிய யோசேப்பிற்காக மிகவும் அதிக துக்கத்தை அனுபவித்தார். ஆனால், நீ இப்படிப்பட்ட எந்த சோதனையையும் இன்னும் அனுபவிக்கவில்லை" என்றார். அதற்கு தாவீது: "ஓ இறைவா! அவர்களை சோதித்து அவர்களுக்கு நீங்கள் எதை கொடுத்தீர்களோ, அதே போல என்னையும் சோதித்து எனக்கும் நன்மையை கொடுங்கள்" என்று வேண்டிக்கொண்டார்.

இறைவன் தாவீதுக்கு
"நீ சோதிக்கப்படப் போகிறாய், எனவே, நீ உன்னை காத்துக்கொள்" என்றார். இறைவன் விரும்பும் நேரம்வரும் வரை தாவீது காத்துக்கொண்டு இருந்தார். பிறகு சாத்தான் ஒரு பொன் புறாவின் உருவத்தில் வந்தான். தாவீது நின்றுக்கொண்டு தொழுதுக்கொண்டு இருக்கும் போது, அப்புறா அவர் பாதத்தின் அருகே வந்து அமர்ந்தது. இந்த செய்தியை சொல்பவர் தொடர்ந்துச் சொன்னார். தாவீது தன் கைகளால் அந்தப் புறாவை பிடிக்க முயன்றார், ஆனால், அது உடனே விலகிச்சென்றது. அவர் அதை தொடர்ந்துச் சென்றார், ஆனால், அப்புறா தூரமாகச் சென்று ஒரு மேற்கூறையில் நின்றது. அந்த புறா எங்கு நின்றது என்று தெரிந்துக்கொள்ள அவர் அதை தொடர்ந்துச் சென்றார்.

அங்கே ஒரு பெண் தன் வீட்டின் மேற் கூறையில் குளிப்பதை தாவீது கண்டார், அந்தப் பெண் மிகுந்த அழகுடையவளாக காணப்பட்டாள். அந்தப்பெண் திரும்பும் போது, தாவீதைக் காண நேரிட்டது, அவள் தன் தலைமுடியினால் தன் உடல் முழுவதையும் மூடிக்கொண்டாள். அதனால், அப்பெண்ணின் மீது, தாவீதின் ஆசை அதிகரித்தது.

தாவீது அந்த பெண்ணைப்பற்றிய விவரங்களை கேட்டனுப்பினார், அவளுடைய கணவன் இன்ன இன்ன இடத்தில் போருக்கு சென்றுள்ளார் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது. உரியாவை[Sam- Arabic, Ahriya/Awriya] ஒரு குறிப்பிட்ட எதிரி படைகளுக்கு முன்பாக அனுப்பும்படி அந்த யுத்த களத்தில் உள்ள தளபதிக்கு தாவீது ஒரு கட்டளையை எழுதி அனுப்பினார். தளபதி உரியாவை அப்படியே அனுப்பினார், ஆனால், அந்த எதிரிகளின் மீது உரியா வெற்றிக்கொண்டான். தளபதி உரியாவின் வெற்றியைப் பற்றி தாவீதுக்கு செய்தி அனுப்பினார். மறுபடியும் தாவீது, முன்பை விட பலசாலிகளான ஒரு குறிப்பிட்ட எதிரிகளுக்கு முன்பாக உரியாவை நிறுத்தும்படி சொல்லியனுப்பினார். தளபதியும் அப்படியே செய்தார், இந்த முறையும் உரியா அந்த எதிரிகள் மீது வெற்றிப்பெற்றார். இந்த இரண்டம் வெற்றியைப் பற்றி தளபதி மறுபடியும் எழுதி அனுப்பினார்.
தாவீது மறுபடியும் ஒரு குறிப்பிட்ட எதிரிகளுக்கு முன்பாக உரியாவை அனுப்பும்படி செய்தி அனுப்பினார். தளபதியும் அப்படியே செய்தார், இந்த மூன்றாம் முறை உரியா யுத்தத்தில் கொலை செய்யப்பட்டார்.

தாவீது உரியாவின் மனைவியை திருமணம் செய்துக்கொண்டார். அந்தப் பெண் தாவீதோடு வந்து சேர்ந்து சில நாட்களே ஆனபோது, இறைவனால் மனித வடிவில் அனுப்பப்பட்ட இரண்டு தூதர்கள், தாவீதை சந்திக்க வேண்டுமென்று அனுமதி கோரினார்கள். ஆனால், அந்த நாள் தாவீது இறைவனை தொழுதுக்கொள்ளும் நாள் என்பதால், காவலாளிகள் அவர்களை உள்ளே விடவில்லை. எனவே, அந்த இரண்டு பேரும் தாவீது இருக்கும் தனிமையான அறையின் உள்ளே ஆச்சரியமான விதத்தில் நுழைந்தார்கள். தாவீது தொழுதுக்கொண்டு இருந்ததால், இவர்கள் உள்ளே வந்தது பற்றி அறியவில்லை. ஆனால், திடீரென்று அவர்கள் தனக்கு முன்பாக உட்கார்ந்து இருப்பதைக் கண்டு திடுக்குற்றார்; அப்போது அவர்கள் கூறினார்கள்; "பயப்படாதீர்! நாங்களிருவரும் வழக்காளிகள்; எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார்;; எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்!" இதன் பொருள் தவறாக செயல்படாதீர் என்பதாகும். மற்றும் "எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!" தாவீது "உங்கள் வழக்கு என்ன என்று கேட்டார்", அதற்கு ஒருவன் "
இவர் என் சகோதரர், இவரிடம் தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருக்கின்றன, ஆனால் என்னிடம் ஒரு ஆடு மட்டும் தான் உள்ளது. இவர் தன்னிடம் உள்ள ஆடுகளின் எண்ணிக்கை நூறு ஆகவேண்டும் என்பதற்காக‌, என்னிடம் உள்ள அந்த ஒரு ஆட்டையும் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்" என்றார்.

தாவீது மற்றவனைப் பார்த்து, "இதற்கு உன் பதில் என்ன?" என்றுக் கேட்டார். அதற்கு அவன், "என்னிடம் 99 ஆடுகள் இருக்கின்றன, இந்த என் சகோதரனிடம் ஒரு ஆடு இருக்கின்றது, என்னிடம் உள்ள ஆடுகளின் எண்ணிக்கை 100 ஆக வேண்டும் என்பதற்காக, இவனிடம் உள்ளதை நான் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்" என்றான். அதற்கு தாவீது, "உன் சகோதரன் தன் ஆட்டை உனக்கு கொடுக்க விரும்பவில்லையானாலும், நீ அதை எடுத்துக்கொள்வாயா?" என்று கேட்டார். அதற்கு அவன், "ஆம், அவன் விரும்பவில்லையானாலும் நான் எடுத்துக்கொள்வேன்!" என்றான். தாவீது "அப்படியானால், அதை நீ எடுத்துக்கொள்ள நாங்கள் உன்னை அனுமதிக்கமாட்டோம்" என்றார். அதற்கு அவன் பதிலாக "உங்களால் அதை தடுக்க முடியாது" என்றான். தாவீது "நீ அதை எடுத்துக்கொள்ள முயற்சி செய்தால், உன்னை அங்கும் இங்குமாக அடிப்போம்" என்றார். [அஸ்பத் "அங்கும் இங்கும்" என்பதற்கு "உன் மூக்கிலும், நெற்றியிலும் அடிப்போம்" என்று பொருள் கூறுகிறார்.]
அதன் பிறகு அந்த மனிதன் "ஓ தாவீதே, அங்கும் இங்கும் அடி வாங்க நீ அதிகமாக தகுதியானவன், ஏனென்றால், உனக்கு 99 மனைவிகள் இருக்கிறார்கள், ஆனால் உரியாவிற்கு ஒரே ஒரு மனைவி உண்டு. ஆனால், அவன் போர்க்களத்தில் மரிக்கும் வரை நீ தொடர்ந்து செயல்பட்டு, அவன் மரித்த பிறகு அவன் மனைவியை திருமணம் செய்துக்கொண்டாய்" என்றான்.

தாவீது திரும்பி பார்க்கும் போது, தன் அறையில் யாரையும் காணவில்லை. பிறகு அவர் என்ன நடந்தது என்று புரிந்துக்கொண்டார், மற்றும் தான் எப்படி சோதிக்கப்பட்டார் என்பதையும் அறிந்துக்கொண்டார். அவர் தாழவிழுந்து அழுதார். அவர் அப்படி விழுந்துக்கிடந்து 40 நாட்கள் அளவும் அழுதுக்கொண்டு இருந்தார். ஒரு சில முக்கியமான தேவையின் போது மட்டும் தன் தலையை மேலே உயர்த்தினார், பிறகு மறுபடியும் விழுந்துகிடந்து அழுதுக்கொண்டே இருந்தார். அவர் தொழுதுக்கொண்டார், எதுவரைக்கும் என்றால், தன் கண்ணீரினால் மண் நனைந்து புல் முளைக்கும் நாட்கள் அளவிற்கு தொழுதுக்கொண்டார்.

நாற்பது நாட்கள் கடந்த பிறகு, இறைவன் அவருக்கு வெளிப்படுத்தினார்(Inspired), "ஓ தாவீதே, உன் தலையை மேலே எழுப்பு, நான் உன்னை மன்னித்து விட்டேன்." தாவீது சொன்னார், "ஓ இறைவா! நீ என்னை மன்னித்தாய் என்று நான் எப்படி அறிந்துக்கொள்வேன், ஏனென்றால், நீ யாருக்கும் நியாயத்தீர்ப்பில் தயவு தாட்சனை காட்டாத நீதிபதி அல்லவா? நியாயத்தீர்ப்பு நாளிலே உரியா தன் வலது அல்லது இடது கையிலே தன் தலையை வைத்துக்கொண்டு உனக்கு முன்பாக நிற்கும் போது, அவனுடைய கழுத்து நரம்புகளிலிருந்து இரத்தம் பீறிட்டுக்கொண்டு வெளியே வந்து உன் சிங்காசனத்தின் முன்பு விழும்போது, அவன் "ஓ இறைவா!, இந்த மனிதன் என்னை ஏன் கொலை செய்வித்தான்? என்று கேளுங்கள்" என்று கேட்பானே?" என்றார். இறைவன் மறுபடியும் தாவீதுக்கு வெளிப்படுத்தினார், "ஒரு வேளை நீ சொன்னது போலவே நடக்குமானால், நான் உரியாவை அழைத்து, உனக்காக எனக்கு ஒரு வெகுமதியாக கொடுக்கச்சொல்வேன், பிறகு அவன் உன்னை எனக்கு கொடுப்பான் மற்றும் அதற்கு பதிலாக நான் உரியாவிற்கு சொர்க்கத்தைக் கொடுப்பேன்." பிறகு தாவீது, "ஓ இறைவா! நீ என்னை மன்னித்துவிட்டாய் என்று இப்போது நான் அறிந்துக்கொண்டேன்" என்றார். அதன் பிறகு தான் மரிக்கும் நாள் வரை தாவீது வெட்கத்தினால், தன் கண்களை வானத்திற்கு நேரே ஏறெடுத்துப் பார்க்கவில்லை.

அலிப் ஷஹல் எனக்கு அறிவித்தார் – அல்-வலித் பி முஸ்லீம்- அப்த் அல்-ரஹ்மான் பி யாஜிப் பி ஜபீர் - அட அல்குரசானி:

தாவீது தான் செய்த பாவத்தை மறக்காமல் இருப்பதற்காக, அதை தன் கையின் உள்ளங்கையில் எழுதிவைத்துக்கொண்டார். எப்போதெல்லாம், அதை அவர் அதை பார்ப்பாரோ, அவரது கைகள் நடுக்கம் காணும்.

(The History of Al-Tabari, Volume III, The Children of Israel, trans. William M. Brunner [State University of New York Press, Alban 1991], pp. 144-146; bold emphasis ours - see the below Addendum for more of Al-Tabari)

அல் டபரியின் இந்த நிகழ்ச்சிப் பற்றி இன்னும் அறிய, இக்கட்டுரையின் கடைசியில் கொடுக்கப்பட்ட "பின் குறிப்புக்களை - Addendum " படிக்கவும்.

2. முஹம்மத் இபின் அப்த் அல்லா அல் கிசை கீழ் கணட விவரங்களைச் சொல்கிறார்:

தாவீது அந்த பறவையின் அழகில் மயங்கினார் மற்றும் அதன் அழகை விவரிக்க இயலாத ஒன்றாக கண்டார். அவர் தனக்குள், "இது நிச்சயமாக சொர்க்கத்தின் பறவைகளில் ஒன்றாக இருக்கவேண்டும்" என்று சொல்லிக்கொண்டார். அவர் கையினால் அதை பிடிக்க முயன்றார், ஆனால், அது கையில் சிக்காமல் பறந்துவிட்டது. தன் மாளிகையின்(Tower) அருகே இருந்த ஒரு குளத்தின் பக்கத்தில் இருந்த ஒரு மரம் வரை அந்த பறவை பறந்துச்சென்று, பிறகு மறைந்துவிட்டது. அவர் அந்த பறவையை தேடிக்கொண்டு இருக்கும் போது, அந்த குளத்தின் பக்கத்தில் உள்ள ஒரு மரத்தில் அதைக்கண்டார், சாதாரணமாக இஸ்ரவேல் பெண்கள் அந்த குளத்தில் குளிப்பது வழக்கம். தாவீது அந்த பக்கமாக வரும் போது, ஒரு பெண் தன் மேல் தண்ணீர் ஊற்றி குளிக்கும் சத்தத்தை அவர் கேட்டார். அந்தப்பெண் குளிப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அந்தப்பெண் மிகவும் அழகுள்ளவள், அவளின் பெயர், பெத்ஷெபா என்பதாகும். அவள் ஹன்னானின் மகனான உரியாவின் மனைவி மற்றும் அவள் ஜோஷுவாவின் மகளாவாள். அந்த வருடமே அவளுக்கு திருமணமாகி இருந்தது, இன்னும் அவள் கர்ப்பமாகவில்லை. தாவீதின் சொந்தக்காரனான ஜருயாவின் மகனான நாபாலின் தலைமையின் கீழ் இப்பெண்ணின் கணவன் உரியா போர்க்களத்தில் இருந்தான், அவன் அங்கு கொல்ல‌ப்பட்டான். (தாவீது தன் இனத்தானான நாபாலிடம் உரியாவை யுத்தகளத்தில் முன்வரிசையில் நிறுத்தும்படி கட்டளையிட்டு சொல்லியனுப்பியதாகவும், நாபாலும் அப்படியே செய்ததாகவும், உரியா மரித்தவுடன், தாவீது உரியாவின் மனைவி பெத்செபாளை திருமணம் செய்துக்கொண்டதாகவும், அறிவிக்கப்பட்டது)

இறைவன் காபிரியேல் மற்றும் மிகாவேல் என்ற தூதர்களை அழகான உருவத்துடன் பூமிக்குச் சென்று, தாவீது செய்த பாவத்தை(Transgression) அவருக்கு தெரிவிக்கும்படி கட்டளையிட்டார். "இறைவா! வரம்பு மீறி தீமை செய்பவர்களை மன்னிக்காமல் இரும், மற்றும் ஒடுக்குகிறவர்களின் கைகளிலிருந்து ஒடுக்கப்படுபவர்களை பாதுகாத்தருளும்" என்று சொல்லி தொழுதுக்கொண்டு இருக்கும் போது, இரண்டு தூதர்கள் மாளிகையின் மேற்கூறையிலிருந்து மனித வடிவில் இறங்கி வந்தனர். அவர்கள் வழக்காளிகளாக சொல்லிக்கொண்டு வந்தனர், அவர்களில் ஒருவர் வலுவானவர், இன்னொருவர் பலவீனமானவர், இவர்கள் தாவீதுக்கு முன்பாக நின்றனர். தாவீது அவர்களை கண்டவுடன் மிகவும் நடுக்கமுற்றார் மற்றும் தன் கையில் இருந்த சங்கீத புத்தகத்தை(Book of Psalms) நழுவவிட்டார் மற்றும் பயத்துடன் காணப்பட்டார்.

அவர்கள், "சட்டத்தை மீறுகிறவர்கள் மீது கடுமையாக இருப்பரே, பயப்படாதீர், மற்றும் நாங்கள் சொல்வதை கேட்பீராக, நாங்கள் வெகு தூரமுள்ள இடத்திலிருந்து வந்துள்ளோம் என்றுச் சொன்னார்கள்.", அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள் (தாவூது இறைவணக்கத்திற்காக அமைத்திருந்த) மிஹ்ராபின் சுவரைத் தாண்டி - …. தாவூதிடம் நுழைந்த போது அவர்; அவர்களைக் கண்டு திடுக்குற்றார்; ….(38:21,22)

தாவீது தன் நியாயத்தீர்ப்பு அளிக்கும் ஆசனத்தில் உட்கார்ந்துக்கொண்டு, உங்கள் வழக்கு என்ன? என்று கேட்டார்.

காபிரியேல், "ஓ இறைவனின் தீர்க்கதரிசியே, இவர் என் சகோதரர், இவரிடம் 99 ஆடுகள் இருக்கின்றன, அவைகள் வெண்மையான வண்ணமுடையவைகள் மற்றும் கொழுத்த ஆடுகளும் கூட‌, பல முறை அவைகள் குட்டிகளையும் பெற்றுள்ளன; எனக்கு ஒரே ஒரு ஆடு மட்டும் உள்ளது: என் சகோதரர் என்னிடம், "உன்னிடம் உள்ள அந்த ஒரு ஆட்டை எனக்கு கொடுத்துவிடு" என்று கேட்கிறார், இதனால் அவர் என்னிடம் தொடர்ந்து வழக்காடிக்கொண்டு இருக்கிறார்( பார்க்க குர்‍ஆன் 38:24) என்றார். இதைப்பற்றி என் இறைவனிடம் நான் முறையிட்டேன், நீங்கள் பூமியில் அவரது பிரதிநிதியாக இருப்பதால், உங்களிடம் போகும்படிக்கு நாங்கள் அனுப்பப்பட்டோம்.

தாவீதின் கோபம் அதிகரித்தது மற்றும் அவர் "உன் சகோதரர் தன்னிடம் ஆடுகள் இருந்தும் உன்னுடையை ஆடுகளை கேட்பதால், அவர் தவறு செய்கிறார், ஒன்றாக சேர்ந்து வியாபாரம் செய்யும் மனிதர்கள் இப்படி ஒருவருக்கு ஒருவர் தீமை செய்வதுண்டு, அது போலத்தான் உன் சகோதரர் உனக்கு எதிரான தீமையை புரிந்துள்ளார்" என்றார் (பார்க்க குர்‍ஆன் 38:25)

மிகாவேல் பேசினார், "ஓ இறைவனின் தீர்க்கதரிசியே, நீங்கள் சரியான முடிவை(தீர்ப்பை) சொல்லவில்லை, ஏனென்றால், அவன் தன் கூட்டாளியாக இல்லாதவனுக்கு தீமை செய்யலாம் அல்லவா?"

இந்த வார்த்தகளைக் கேட்டு, தாவீது கோபத்தால் கொதித்தார், தன் கையில் ஒரு தடியை எடுத்துக்கொண்டு, "இந்த தடியால் உன்னை அடிப்பேன்" என்றார்.

தாவீதின் கையிலுள்ள தடியானது, "ஓ தாவீதே, இது தான் நீ சட்டத்தை மீறுபவர்களுக்கு அளிக்கும் தண்டனையாக இருக்குமானால், நீ ஒரு சட்டத்தை மீறியவன் தான்" என்று கத்தியது.

மிகாவேல் தூதன் புன்னகைத்து இப்படியாகச் சொன்னார், "என்னை விட தடியடி வாங்க நீர் அதிக தகுதியானவர், நீர் முதல் வழக்காளியின் வாதத்தை கேட்டு, பிரதிவாதியின் வாதத்தை கேட்காமலேயே தீர்ப்பு சொல்லியுள்ளீர்". இப்படியாகச் சொல்லி அவர்கள் இருவரும் எப்படி உள்ளே வந்தார்களோ அதே வண்ணமாக கூறையை தாண்டி மேலே எழும்பி சென்றுவிட்டனர். "நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்" என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக்குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார். ( பார்க்க குர்-ஆன் 38:24) " அவர் வேதனையோடு தன்னை தாழ்த்தி நாற்பது நாட்கள் அப்படியே விழுந்துகிடந்தார். தன் முகத்தின் சதை தொங்கும் அளவிற்கும், தன் கண்ணீரினால் பூமியில் புல் முளைக்கும் அளவிற்கும் அவர் அப்படியே விழுந்துகிடந்தார். இதைக்கண்டு தேவத்தூதர்கள் இறைவனிடம், "எங்கள் இறைவனே, உன்னுடைய தீர்க்கதரிசியும், மற்றும் பூமியில் உம் பிரதிநிதியாகவும் இருக்கின்ற இவர், எங்கள் கண்கள் கலங்கும்படி செய்கிறார், அவருடைய வரம்புமீறுதலைப் மன்னித்து, அவரின் பிதாவாகிய ஆதாமுடைய பின் மாற்றத்தை நீ மன்னித்த வண்ணமாக இவரது பின்மாற்றத்தையும் மன்னிப்பாயாக" என்று வருந்திக்கேட்டுக்கொண்டனர்.

"பேசாமல் இருங்கள்!" இறைவன் சொன்னார், "நான் இரக்கத்திலும் இரக்கமுள்ளவனாக இருக்கிறேன், என்னை தொழுதுக்கொள்பவர்களுக்காக என் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன, மற்றும் தன் தவறுக்காக மனஸ்தாபப்படுகிறவர்களின் மனஸ்தாபத்தை நான் அங்கீகரிப்பவனாக இருக்கிறேன்". (Tales of the Prophets (Qisas al-anbiya), translated by Wheeler M. Thacktson Jr. [Great Books of the Islamic World, Inc., 1997; Distributed by Kazi Publications, Chicago Il.], pp. 282-284)

3. குர்‍ஆன் 38:23-24 மற்றும் 26ம் வசனத்திற்கு இபின் அப்பாஸ் சொன்னதாக உள்ள உரை(Commentary):

(ஒரு ஆடு) என்றால் ஒரு மனைவி; (மற்றும் அவர் சொன்னார்: என்னிடம் கொடுத்துவிடு, மற்றும் அவன் தன் வார்த்தைகளால் வசப்படுத்தினான்) தாவீது உரியாவிற்கு என்ன செய்தார் என்பதை அவருக்கு புரியவைக்கவேண்டும் என்பதற்காக இவர்கள் இப்படி சொன்னார்கள். (Tanwîr al-Miqbâs min Tafsîr Ibn 'Abbâs; source; bold and underline emphasis ours)

தாவீது கூறினார்: அவனுக்கு அனேக ஆடுகள் இருந்தும், உன்னுடைய ஆட்டை அவர் கேட்டது மிகவும் தவறானது. இப்படித்தான் பல கூட்டாளிகள் மற்றும் சகோதரர்கள் ஒருவருக்கு எதிராக இன்னொருவர் வரம்புமீறி நடக்கிறார்கள். அல்லாவிற்கு பயந்து நன்மை செய்பவர்கள் மிகக்குறைவே. அவ்விருவர்கள் எங்கே இருந்து வந்தார்களோ அங்கேயே சென்று விட்டார்கள், தான் செய்த பாவத்திற்காக நாம் தான் அவரை சோதித்தோம் என்பதை தாவீது அப்போது உணர்ந்துக்கொண்டார். மற்றும் தாவீது தான் செய்த பாவத்திற்காக பாவ மன்னிப்பை தன் இறைவனிடம் கோரினார். அவர் சாஸ்டாங்கமாக விழுந்து தன் பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு தொழுதுக்கொண்டார். அவர் செய்த செயலுக்காக மனம் வருந்தினார் . (Source; bold and underline emphasis ours)

((மற்றும் அவருக்கு இவ்விதமாக சொல்லப்பட்டது): ஓ தாவீதே! கவனியும்! உம்மை நாம் பூமியில் பிரதிநிதியாக ஆக்கினோம்) உம்மை நாம் இஸ்ரவேல் நாட்டு மக்களுக்கு ஒரு தீர்க்கதரிசியாக‌ இராஜாவாக நியமித்தோம்.(எனவே, மனிதர்களுக்கு சரியான முறையில் தீர்ப்பு வழங்கவும்) மக்களுக்கு நியாயமான தீர்ப்பு வழங்கவும்,( மற்றும் ஆசையை பின்பற்றவேண்டாம்) எப்படியென்றால்,
உரியாவின் மனைவியினிடத்தில் நீர் கொண்ட ஆசையைப்போல செய்யாதிரும். உரியா தாவீதின் உறவினனாக இருந்தார். (அல்லாவின் வழியிலிருந்து உம்மை விலகச்செய்வதாக இருந்தது) அல்லாவிற்கு கீழ்படியாதவாறு செய்தது. (கவனியுங்கள், யார் யாரெல்லாம் அல்லாவிற்கு) கீழ்படிவதை விட்டுவிட்டு தூரமாகச் செல்கிறார்களோ, நியாயத்தீர்ப்பு நாளை மறக்கிறார்களோ, அவர்களுக்கு பயங்கரமான ஆபத்து காத்துக்கொண்து இருக்கிறது (Source; bold and underline emphasis ours)

இதே மூலத்தொடுப்பு குர்-ஆன் 33:38ஐ குறித்து கீழ்கண்டவாறு கூறுகிறது:

[தமிழ் மொழியாக்க குறிப்பு: குர்-ஆன் 33:38 ல் சொல்லப்பட்ட நிகழ்ச்சி, முகமது தன் வளர்ப்பு மகனின் மனைவியை, தன் வளர்ப்பு மகன் விவாகரத்து செய்த பின்னர், திருமணம் செய்துக்கொண்ட நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்கிறது. வாசகர்களுக்கு சரியாக உரை புரியவேண்டும் என்பதற்காக, இவ்வசனம் இங்கு தரப்படுகிறது,ஆங்கில மூல கட்டுரையில் இந்த பத்தி இல்லை. குர்-ஆன் 33:38 நபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர் நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை இதற்கு முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும் - இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும்.]

(இதில் விமர்சிப்பதற்கு எதுவும் இல்லை) இதில் நபி அவர்கள் எந்த பாவமும் செய்யவில்லை, குற்றமும் செய்யவில்லை, இந்த திருமணம் அல்லாவின் அங்கீகாரத்தால் நடக்கிறது. முகமதுவிற்கு (அவர் மீது சாந்தி உண்டாவதாக) முன்பு வாழ்ந்தவர்களுக்கும் அல்லா இப்படியே கட்டளையிட்டுள்ளான். இந்த வசனத்தில் "முன்பு வாழ்ந்தவர்கள்" என்றுச் சொல்வது, தாவீது உரியாவின் மனைவியை திருமணம் செய்த நிகழ்ச்சியை குறிக்கும். மட்டுமல்ல, இது பல்கிஸ் என்ற பெண்ணோடு சாலோமோன் செய்த திருமணத்தை குறிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும். (Source; bold and underline emphasis ours)

4. குர்-ஆன் 38:22 மற்றும் 24ம் வசனம் பற்றி "இரண்டு ஜலால்கள் - Two Jalals " என்றுச் சொல்லக்கூடிய இரண்டு இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய உரையின் படி:

அவர்கள் தாவீது இருந்த அறைக்குள் நுழைந்தவுடன், தாவீது அவர்களைக்கண்டு திடுக்குற்றார். அவர்கள் சொன்னார்கள், "பயப்படாதீர், நாங்கள் இரண்டு வழக்காளிகள் (சிலர் "இரண்டு குழுக்கள்" என்று இதற்கு பொருள் சொல்கிறார்கள், ஏனென்றால், இந்த இடத்தில் பன்மையில் வினைச்சொல் வருவதனால், [of the verb dakhalū,], சிலர் இது இந்த இருவரை மட்டுமே குறிக்கும் என்றுச் சொல்கிறார்கள், அல்-காசிம் என்பவர் "ஒருவர் அல்லது அதற்கு மேலான நபர்களைக் குறிக்கும்" என்கிறார். இவர்கள் இருவரும் வழக்காளிகளாக உருவம் மாற்றி வந்த இரண்டு தூதர்களாவார்கள். குறிப்பிடப்பட்ட வழக்கு இவ்விரண்டு பேர்களின் இடையில் தான் நடந்தது, அதுவும் உண்மையாக அல்ல, தாவீது(அவர் மீது சாந்தி உண்டாவதாக) செய்த செயலைப் பற்றி எச்சரிக்கை செய்வதற்காக இவ்வழக்கு உருவாக்கப்பட்டது. அவர் தனக்கு 99 மனைவிகள் இருந்தும், ஒரே ஒரு மனைவியுள்ள ஒருவரின் மனைவியின் மீது ஆசைக்கொண்டார். அவர்(தாவீது) அப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். எங்களில் ஒருவர் மற்றவருக்கு எதிராக செயல்படுகிறார், எனவே, வரம்பைமீறாமல் எங்களுக்கு நீதி வழங்கவும், அநீதி இழைக்காமல், நேரான பாதையை எங்களுக்கு காட்டாவும். (Source; bold and underline emphasis ours)

அவர் கூறினார், "தன்னுடைய ஆடுகளோது சேர்த்துக்கொள்ள உன்னுடைய ஆட்டையும் அவர் கேட்டு அவர் தவறு செய்துவிட்டார். உண்மையில் கூட்டாளிகளில் பலர் ஒருவருக்கு எதிராக ஒருவர் செயல்படுகிறார்கள், நம்பிக்கைக் கொண்டு நல்ல செயல்கள் செய்யும் சிலரைத் தவிர, ஆனால் இப்படிப்பட்டவர்கள் சிலரே(mā emphasises the 'fewness')" . இந்த இரண்டு தூதர்களும் வானத்திற்கு எடுத்துக்கொண்டுச் செல்லும்போது, ஒருவர் மற்றவரிடம், "இவர் தனக்கு தானே நியாயத்தீர்ப்பை(Judgement) வருவித்துக்கொண்டார்" என்றுச் சொன்னார். தாவீது தன் தவறுப் பற்றி அப்போது உணர்ந்தார். இறைவன் ஒருவனே உயர்த்தப்படுவானாக, இறைவன் சொன்னார்: "அந்த பெண்ணைப்பற்றிய பரிட்சையை நாம் தான் தாவீதுக்கு வைத்தோம் என்று தாவீது நினைத்தார். அதனால், அவர் தன் இறைவனிடம் தாழவிழுந்து, மன்னிப்பைத் தேடினார் மற்றும் அவர் தொழுதுக்கொண்டு தன் தவறுக்காக மனம் வருந்தி வேண்டிக்கொண்டார். (Source; bold and underline emphasis ours)

5. தாவீது மற்றும் அந்த இரண்டு வழக்காளிகளின் நிகழ்ச்சியைப் பற்றி முஹம்மத் அசத் உடைய உரை:

"எங்களிடம் உள்ள மிகவும் பழமையான மூல ஆதாரங்களின் படி, நாங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சி, குர்‍ஆன் வசனங்கள் 21 லிருந்து 26 வரை உள்ள தர்மசங்கடமான நிகழ்ச்சியாகும். இந்த வசனங்கள் எழுப்பும் கேள்வி என்னவென்றால், இறைவன் தெரிந்தெடுக்கும் நபர்கள் முக்கியமாக நபிகள்(தீர்க்கதரிசிகள்), இறைவன் தாவீதுக்கு அளித்தது போல, இவர்களுக்கு ஞானத்தையும் நியாயம் தீர்க்க தேவையான அறிவையும் அளித்துள்ளார்.இப்படிப்பட்ட நபிகள் பாவம் செய்யமுடியுமா அல்லது ஒரு முறையாவது இவர்கள் பாவம் செய்துள்ளார்களா என்ற கேள்வியாகும். இதை வேறு வகையில் சொல்லவேண்டுமானால், சாதாரண மனிதர்கள் இயற்கையாக பாவ சுபாவம் என்ற குறைபாடு உள்ளவர்களாக இருப்பது போல, நபிகள்(தீர்க்கதரிசிகள்) கூட இயற்கையான பாவ சுபாவ குறைபாடுகள் உள்ளவர்கள் தானா? அல்லது இவர்கள் "ஒரு முறையும் பாவம் செய்யாமல் இருக்கும் – (Masum) " குணத்தை இறைவனிடமிருந்து பெற்றவர்களாக இருப்பார்களா?

"இஸ்லாமின் ஆரம்ப காலத்திலிருந்து அதிகார பூர்வமாக சொல்லப்பட்ட செய்திகளின் அடிப்படையில் பார்க்கும் போது, இந்த நிகழ்ச்சி மேலே சொல்லப்பட்ட கோட்பாட்டிற்கு(நபிகள் பாவம் செய்யமாட்டார்கள் என்ற கோட்பாட்டிற்கு) முரண்படுகிறது. அதிகார பூர்வமாக அறிவித்த நபர்களில் டபரி, பஹாவி மற்றும் நபித்தோழ‌ர்களாகிய அப்துல்லா இபின் அப்பாஸ், அனாஸ் இபின் மாலிக் போன்றாவர்கள் ஆவார்கள். இவர்கள் மட்டுமல்லாமல், நபித்தோஷர்களின் அடுத்த நேரடி தொடர்புடையவர்கள் கூட இதே நிகழ்ச்சியைச் சொல்கிறார்கள். நபிகள் என்பவர்கள் இயற்கையாகவே பாவம் செய்யமாட்டார்கள், அவர்கள் பரிசுத்தமானவர்கள் மற்றும் அவர்களின் உள்ளத்தில் நடக்கும் போராட்டத்தினால், அவர்கள் பாவமின்மை என்ற நிலையை அடைந்தார்கள் என்று காலப்போக்கில் இஸ்லாமிய அறிஞர்கள் சொந்தமாக உருவாக்கிய கோட்பாட்டுற்கு முரண்பட்டதாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நாம் பார்த்தால், நபிகளுக்கு இதனால் ஆன்மீக வலிமை கிடைக்குமே ஒழிய இது அவர்கள் பிறப்பிலிருந்து வந்த தகுதி அல்ல.

டபரி மற்றும் இஸ்லாமிய ஆரம்பகாலத்தில் உரை எழுதியவர்களின் அறிவிப்பின் படி,
தாவீது தன் வீட்டு கூறையிலிருந்து தற்செயலாக பார்க்க நேரிட்ட ஒரு அழகான பெண்ணின் மிது காதல் கொண்டார். அவளின் விவரங்களைச் சேகரித்த போது, அவள் தன்னிடம் இராணுவத்தில் பணிபுரியும் ஒரு இராணுவ வீரனாகிய உரியாவின் மனைவி என்று தெரியவந்தது. அப்பெண்ணின் மீது கொண்ட ஆசை தாவீதை மேற்கொண்டதால், தாவீது தன் தளபதியிடம், இந்த உரியாவை போர் நடக்குமிடத்தில் ஒரு குறிப்பிட்ட முன்வரிசையில் நின்று போரிட நிறுத்தி, அதன் மூலம் உரியா நிச்சயமாக மரணத்தை அடையவேண்டும் என்று கட்டளை பிரப்பித்தார். தாவீதின் கட்டளை அப்படியே நிறைவேற்றப்பட்டபோது, உரியா மரித்தார், தாவீது உரியாவின் மனைவியை திருமணம் செய்துக்கொண்டார் (இந்த பெண் தான் சாலோமோனின் தாயானாள்). இந்த நிகழ்ச்சி பைபிளின் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட நிகழ்ச்சிக்கு பெரும்பான்மையாக பொருந்துகிறது(2 சாமுவேல் 11ம் அதிகாரம்). இந்த பெண்ணின் பெயர் பெத்சேபாள் என்று பைபிள் கூறுகிறது. உரியாவின் மரணத்திற்கு முன்பே, தாவீது அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தார் என்று பைபிள் சொல்கிறது(வசனம் 4,5). இந்த குற்றச்சாட்டை முஸ்லீம்கள் அங்கீகரிப்பதில்லை, அதாவது கணவன் உயிரோடு இருக்கும் போது, அவன் மனைவியோடு விபச்சாரம் செய்வ‌து மிகப்பெரிய குற்றமாகும்: நான்காவது காலிபாவாகிய அலி இபின் அபிதலிப் கூற்றுப்படி(quoted by Zamakhshari on the authority of Sa'id ibn al- Mussayyab): "யாராவது தாவீதின் நிகழ்ச்சியை கதை சொல்பவர்கள் போல சொன்னார்களானால், நான் அப்படிப்பட்டவனுக்கு 160 சவுக்கு அடிகளை அடிப்பேன், ஏனென்றால், இது தான் நபிகள் அவதூறு செய்தார்கள் என்றுச் சொல்பவர்களுக்கு ஏற்ற தண்டனையாகும்(இது ஒரு சாதாரண மனிதன் மீது ஆதாரம் இல்லாமல் விபச்சாரம் செய்தார் என்று குற்றம் சுமத்துபவனுக்கு குர்‍ஆன் 24:4ன் படி 80 சவுக்கு அடிகள் தரப்படும் தண்டனையை குறிக்கிறது.) (Asad, Message of the Qur'an [Dar Al-Andalus Limited 3 Library Ramp, Gibraltar rpt. 1993], pp. 696-697, fn. 22)

இதுவரை நாம் பார்த்த விவரங்களிலிருந்து முக்கியமாக நாம் அறிவது என்னவென்றால், பெத்செபாளோடு உறவு கொள்வதற்கு முன்பாக தாவீது உரியாவை கொன்றார் என்பதாகும். தாவீது வேண்டுமென்றே திட்டம் தீட்டி உரியாவின் மனைவியை அடையவேண்டுமென்ற ஆசையினால், உரியாவை கொன்றார். ஆனால், பரிசுத்த பைபிளின் விவரங்களின் படி, தாவீது உரியாவை கொள்வதற்கு முன்பாகவே உரியாவின் மனைவியை கர்ப்பமாக்கினார். தாவீது தன் முந்தைய திட்டங்கள் ஒன்றும் பயனளிக்க வில்லை என்பதால் தான் கடைசியாக உரியாவை கொன்றார் என்று பைபிள் கூறுகிறது. உரியாவின் மனைவி தன் மூலம் தான் கர்ப்பமானாள் என்பதை மறைப்பதற்காக, முதலில் அரசனாகிய தாவீது உரியாவிற்கு அதிகமாக திராட்சை ரசம் குடிக்கக்கொடுத்து, நீ வீட்டிற்குச் சென்று உன் மனைவியோடு சந்தேஷமாக இரு என்று சொல்லி திட்டம் தீட்டினார், ஆனால், அது பயனளிக்கவில்லை என்பதால், உரியாவை கொன்றார் என்று பைபிள் சொல்கிறது (இந்த நிகழ்ச்சி பற்றிய முழுவிவரங்கள் 2 சாமுவேல் 11 மற்றும் 12ம் அதிகாரங்களில் காணலாம்)

குர்‍ஆன் மற்றும் ஹதீஸ்களைப் போல அல்லாமல், பைபிள் தேவனின் வெளிப்பாடாக இருப்பதால், இந்த நிகழ்ச்சியைப் பற்றி மிகவும் தெளிவாகவும் மற்றும் நடந்தது நடந்தது போலவும் சொல்கிறது. குர்‍ஆன் மற்றும் பைபிள் சொல்லும் விதத்தில் உள்ள வித்தியாசத்தை விடுத்து நாம் கவனித்தோமானால், தாவீதின் நடத்தையில் இருந்த பாவத் தன்மையை வெளிப்படுத்துகின்றன.
தாவீது உரியாவை அவன் மனைவியோடு உறவு கொண்டபிறகு கொன்றாரோ அல்லது அதற்கு முன்பு கொன்றாரோ, ஒன்று மட்டும் நிச்சயம், அதாவது, இறைவனின் பார்வையில் தாவீது பாவம் செய்த குற்றத்தை செய்தவராகிறார், அதாவது திருமணமான ஒரு பெண்ணின் மீது மோகம் கொண்டு அவர் இறைவனின் பார்வையில் பாவம் செய்தவராகிறார் (மத்தேயு 5:27-28, 31-32)

ஆக, தாவீது குற்றம் இழைத்து இருந்தும், இஸ்லாமியர்கள் அவர் குற்றம் செய்யாதவராக இருக்கிறார் என்று சொல்கிறார்கள். மற்றவனின் மனைவியை அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்த ஒரு திட்டமிட்ட கொலை (Premeditated Murder) என்பது மிகப் பெரிய பாவமாகும்.

அஸத் அவர்களின் கூற்றுப்படி, இந்த கதையை சொல்பவனுக்கு சவுக்கடி கொடுக்கப்படவேண்டும் என்று அலி உறுதி எடுத்தார் அல்லவா என்று இஸ்லாமியர்கள் இப்போது வாதம் புரிவார்கள். அதாவது ஆரம்பகால முஸ்லீம்கள் இந்த கதையை மறுத்தார்கள் அல்லவா என்று கூறுவார்கள். ஆனால், ஒன்றை கவனிக்கவேண்டும், அஸத் அவர்களின் கூற்றுப்படி, அலி இக்கதையை முழுவதுமாக தள்ளிவிடவில்லை, அதற்கு மாறாக "கதை கூறுகிறவர்கள் – Story-tellers" சொல்பவர்கள் போல இந்நிகழ்ச்சியை சொன்னால் தான் அவர் சவுக்கடி கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார் என்பதை கவனிக்கவேண்டும்.

சிலர் இந்த ஹதீஸ்கள் விவரங்கள் அனைத்தும் சரியானது அல்ல என்றுச் சொல்லி தள்ளிவிடுவார்கள். இப்படி யாராவது சொல்வார்களானால், அவர்களிடம் நாங்கள் இரண்டு கேள்விகளை கேட்கவிரும்புகிறோம்:

1. தன்னிடம் வந்த இரண்டு வழக்காளிகளைச் சந்தித்த பின்னர், தாவீது பாவ மன்னிப்பு வேண்டி இறைவனிடம் வேண்ட காரணமென்ன? அந்த இரு வழக்காளிகளின் கதை எப்படி தாவீது தான் ஒரு பாவி என்பதை இறைவன் முன்பு அங்கீகரிக்கும் படி செய்தது?
(What was the reason for David repenting after his encounter with two disputants? How does their story affect David's moral standing before God?)

2. சாலொமோன் தாவீதின் குமாரன் என்று குர்‍ஆன் அங்கீகரிக்கின்றது, அப்படியானால், சலொமோனின் தாய் யார்?
(Since the Quran agrees that Solomon is David's son, who then is Solomon's mother?)

பரிசுத்த பைபிள் இவ்விதமாக கூறுகிறது:

"பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடே சயனித்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பேரிட்டான்; அவனிடத்தில் கர்த்தர் அன்பாயிருந்தார். அவர் தீர்க்கதரிசியாகிய நாத்தானை அனுப்ப, அவன் கர்த்தரின் நிமித்தம் அவனுக்கு யெதிதியா என்று பேரிட்டான்." (2 சாமுவேல் 12: 24-25)

சாலொமோன் தாவீதின் குமாரன் என்பதை குர்‍ஆன் அங்கீகரிப்பதால், பைபிள் சொல்வது போல, சாலொமோனின் தாய் பெத்செபாள் தான் என்பதை குர்‍ஆன் அங்கீகரித்தே ஆகவேண்டும், வேறு எந்த ஒரு வாய்ப்பும் குர்‍ஆனுக்கு இல்லை. ஒருவேளை இதனை தவிற்க‌ முஸ்லீம்கள் சலொமோனுக்கு தாய் என்பவள் இல்லவே இல்லை என்று சொல்லக்கூடும்! பெத்செபாள் சலொமோனின் தாய் இல்லை என்று் முஸ்லீம்கள் சொல்வார்கள் அல்லது பெத்செபாளும் தாவீதும் சட்டபூர்வமாகவே நியாயமான முறையின் படி தான் திருமணம் செய்துக்கொண்டார்கள், பிறகு பிறந்தவர் தான் சலொமோன் என்று சொல்லக்கூடும். ஆனால், ஒரு வேளை இப்படி முஸ்லீம்கள் சொன்னாலும், இன்னும் முதலாவது கேள்வி பதில் தரப்படாமல் அப்படியே உள்ளது.

இதுவரை நாம் கண்ட விவரங்கள் குர்‍ஆன் முழுமையானது அல்ல என்றும் மற்றும் சரியான விவரங்களை குர்‍ஆன் கொண்டு இருக்கவில்லை என்பதையும் நமக்கு நிருபிக்கின்றது (These factors prove that the Quran is an incomplete and imperfect record.)

இதுவரை மேலே நாம் கண்ட விவரங்கள் ஒரு உண்மைய மட்டும் தெளிவாக எடுத்துரைக்கின்றது. தாவீது பெத்செபாளோடு உடலுறவு கொண்டார் மற்றும் உரியாவை கொல்ல கட்டளை பிறப்பித்தார் என்பதை ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள் நம்பினார்கள் என்பது தெளிவு.

முஸ்லீம்களின் வாதங்களுக்கான நம்முடைய பரிசீலனை இதோடு முடிவடைகிறது. மகா வல்லமையுள்ள தேவனும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தில், நித்திய மகிமையோடு உயிர்த்தெழுந்த நம் ஆண்டவரின் ஊழியத்தில் அடியேன். அவருக்கே என்றேன்றும் மகிமை உண்டாவதாக, ஆமென். வாரும் இயேசு கிறிஸ்துவே, வாரும். எங்கள் உயிர்ந்தெழுந்த இயேசுவே உங்களை நாங்கள் நேசிக்கின்றோம்.


பின்குறிப்பு - ADDENDUM: அல் டபரி சரித்திர நூலிலிருந்து மீதமுள்ள விவரங்களை இந்த தொடுப்பை சொடுக்கி(Sins of Prophets - David - ADDENDUM) ஆங்கில கட்டுரையின் கடைசியில் உள்ள பின்குறிப்பை படித்துக்கொள்ளவும். நீண்ட கட்டுரையாக இருப்பதால் பின்குறிப்பை தவிர்க்கிறேன்.

Source: Sins of Prophet - David

ஆசிரியர் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்:

1. இஸ்லாமும், நபிகளின் பாவங்களும் பாகம் - 1

2. மாற்கு 16ன் சவால் ( The Challenge of Mark 16)


Isa Koran Home Page Back - Sam Shamoun Articles
setstats1
 

Friday, June 13, 2008

ஈரான்: மதம் மாறிய பத்து கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

டெஹ்ரான், 28 மே . ஈரானின் தெற்கு ஷிராஸ் பட்டணத்தில் சமீப மாதங்களில் இஸ்லாமிலிருந்து கிறிஸ்தவத்திற்கு மதம் மாறினவர்கள் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூடார்ஸ் என்ற செய்தித் தொடர்பாளர் கூறும் பொழுது, இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து இதுவரை 35 க்கும் மேற்பட்ட ஈரானிய மதம்மாறிய கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கூடார்ஸே ஐக்கிய அரபு நாட்டின் ஒரு அகதியாயிருக்கிறார்.

புதிய மஜ்லிஸ் அல்லது ஈரானிய பாராளமன்றம் முதன் முறையாக கடந்த செவ்வாய்கிழமை கூடினது. அரசாங்கத்தால் பரிந்துரை செய்யப்பட்ட தண்டனை விதிகளை மறுசீரமைப்பு செய்வதைக் குறித்து வரும் வாரங்களில் விவாதிக்கும்படி கூடுகிறார்கள்.

இந்த புதிய சட்டத்தின் கீழ் ஒரு இஸ்லாமிய தகப்பனுக்கு பிறந்த ஒருவர் இஸ்லாமைத் துறந்து வேறு விசுவாசத்திற்கு மாறினால் அவருக்கு மரண தண்டனை வழங்கலாம்.


கடந்த காலங்களில் அதிக அளவிலான கிறிஸ்தவர்களையும், பகாயி மதத்தை பின்பற்றுகிறவர்களையும் தூக்கலிட்டிருந்தாலும், தற்போது இந்த சட்டம் ஈரானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

 
 
Iran: Ten Christian converts arrested



Tehran, 28 May (AKI) - Ten Iranians who converted from Islam to Christianity in recent months have been arrested in the southern city of Shiraz.

According to Goodarz, a spokesperson for the Iranian converts, more than 35 of them have been arrested since the beginning of the year. Goodarz himself has taken refuge in Dubai, in the United Arab Emirates.

The new Majlis or Iranian parliament which met for the first time on Tuesday will be discussing in the coming weeks proposed laws presented by the government to reform the penal code.

Under the new law, anyone born to a Muslim father who decides to renounce Islam and convert to another faith, faces the death penalty.

The punishment is currently absent from the Iranian penal code even though in the past, dozens of Christian converts and followers of the Bahai faith have been hanged
 
 

Thursday, June 5, 2008

இந்த சமுதாயத்தின் முதலைக் கண்ணீரும்,ஜெய்பூரில் சிதறிய உயிகளும்

 
 
 
ஒரு மாமியார் மருமகளின் கொடுமை தாங்காமல் கிணற்றில் விழப்போனாளாம்.  அதைக்கண்ட மருமகள் ஓடி வந்து "அத்தை, அப்படியே விழுந்துடாதீங்க. உங்க புடவையை கழட்டி வெச்சிட்டு குதிங்க.  உங்க நினைவா அந்த பட்டுப்புடவை இருக்கட்டும்.  இல்ல, அதை புடவை வீணாயிடும்!" என்று சொன்னாளாம்.

 

இந்த பழைய ஜோக் இந்த நேரத்தில் நினைவு வருகிறது.

 

துயர நேரத்தில் இந்த ஜோக்கா!  மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு பல ஆண்டுகளுக்குப் பின்னால் இந்தியாவில் இப்படி ஒரு பேரிழப்புடன் ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு.   அதில் சிதறிய மனித உடல் காட்சிகளும்,  எழுந்த ஓலங்களும் நம் நெஞ்சத்தில் நெருப்பாய் சுடுகின்றன.

 

இந்த அவலம் ஏன் தொடர்கிறது? இந்த அராஜகம் ஏன் நடக்கிறது? இதற்கு தீர்வுதான் என்ன என்று ஒவ்வொரு இந்தியனும் கேள்வி எழுப்புகிறான்.  ஒவ்வொரு இந்தியனும் தன்னையும் எல்லோரையும் கேட்கும் கேள்வி இதுதான்.

 

ஆனால், இந்த குண்டுவெடிப்பிற்கான நம் சகோதர முஸ்லிம்களின் எதிர்வினையைப் பார்க்கும்போது ஆத்திரமாய் இருக்கிறது.   இவர்களின் பசப்பலிலும்,  பாசாங்கிலும் இவர்களின் உண்மை மனநிலை வெளிப்படுகிறது.

 

இவர்கள் என்ன செய்ய வேண்டும்?  தொடரும் இந்த குண்டுவெடிப்புகள்,  இஸ்லாத்தின் பேரால் நடக்கும் தீவிரவாத செயல்கள்,  மானாவாரியாக மடியும் மனித உயிர்கள் இவற்றின் அடிப்படை காரணிகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை பரிந்துரைந்திருக்க வேண்டாமா?  ஆனால், இதை எதிர்பார்த்தால் நமக்கு பெருத்த ஏமாற்றமே கிடைக்கிறது.

 

இஸ்லாமிய சமுதாயத்தின் மிகப்பெரும் இழுக்காக மாறிக்கொண்டிருக்கும் இந்த ஜிகாதி சக்திகளை முறியடிக்கும் ஒரு சமுதாய ஆர்வமும், அறைகூவலும், சுய-பரிசோதனையும் நான் இஸ்லாமிய சமுதாயத்திடம் அறவே காணவில்லை.

 

மாறாக, இந்திய இஸ்லாமியர்கள் இந்த ஈன நிலையை இல்லை என்று மறுக்கப் பார்க்கிறார்கள்.

 

இந்தியர்கள் எக்கேடு கெட்டாலும் போதும், நாம் இதில் மாட்டாமல் இருக்க வேண்டும் என்பதே இவர்களின் தலையாய கவலையாய் தெரிகிறது.  இஸ்லாமியர்கள் என்ற பேருக்கு களங்கம் வரக்கூடாதே என்றுதான் இவர்களின் முழு முயற்சியாகவும் இருக்கிறது.

 

அதனால், தொடரும் குண்டு வெடிப்புகள் அனைத்திலும் தவராமல் தென்படும் இஸ்லாமிய ஜிகாதி அமைப்புகளின் தொடர்புகள் என்னும் முழு பூசணியை கவளம் சோத்தில் மறைக்க பெரும்பாடு படுகிறார்கள்.

 

இந்த முயற்சிகள் குண்டுவெடிப்புக்கு உடனேயே ஆரம்பித்தன.  குண்டுவெடிப்பு துயர சம்பவம் நிகழ்ந்ததும் ராஜஸ்தான் இஸ்லாமிய போரம் "இறந்தவர்களில் முஸ்லிம்களும் உண்டு" என்று அறிக்கை வெளியிட்டு சதவீத கணக்கு போட்டார்கள்.

 

எதில்தான் இட ஒதுக்கீடு கணக்கு போடுவது என்று ஒரு மனசாட்சி வேண்டாமா?

 

பொது இடங்களில் நடக்கும் தீவிரவாத செயல்களில் எல்லா இனங்களும் பாகுபாடின்றி இந்தியர்கள் என்ற முறையில் பாதிக்கப்படுகிறார்கள்.  இதில் இஸ்லாமிய சதவீதத்தை தலைப்பு செய்தியாக இவர்கள் பிரகடன படுத்துவதன் உள்நோக்கம் இந்த தீவிரவாத சக்திகள் இஸ்லாமியர்களுக்கு கூட எதிரானவை என்று சாதிக்க முயலுவதுதான்.

 

ஆனால், உண்மையில் இந்த ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு திட்டத்தில் முஸ்லிம்கள் பெருவாரியாக பழகும் இடங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவே துப்பறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

மாறாக பொது இடங்களில் கணிசமான வியாபார அமைப்புகள் இஸ்லாமியர்கள் கையில் இருக்கின்றன.  புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஹவா மகல் இடத்தில் 50% கடைகள் இஸ்லாமியர்களுடையவை.  ஜொகான் பஜாரில் 35% வியாபார தளங்கள் இஸ்லாமியர்களுடையவை.  இப்படி இருக்கும்போது இஸ்லாமியர்களும் இந்த குண்டுவெடிப்பில் மடிவதில் என்ன வியப்பு இருக்க முடியும்?  இப்படி இஸ்லாமியர்களை பாதிக்கப்பட்டவர்களாக சித்தரிக்கப்படுவதன் முக்கிய நோக்கம் இந்த குண்டுவெடிப்புக்கு அந்த சமுதாயத்தின் பொறுப்பை கை கழுவுவதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?

 

இந்த குண்டுவெடிப்பின் நோக்கமாக இந்திய முஜாஹிதின் அமைப்பு விடுத்திருக்கும் செய்திகள் இந்த குண்டுவெடிப்பின் நோக்கமே ஒரு இஸ்லாமிய ஜிகாத் என்பது தெளிவாகிறது.

 

இந்த குண்டுவெடிப்பின் நோக்கம் "இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் இந்தியாவில் காப்பது" என்று அந்த ஜிகாதி அமைப்பு பிரகணப்படுத்தி உள்ளது.  அந்த அமைப்பு குறிப்பிடும் பிரச்சனைகளும் (குஜராத் முதலியன) இந்திய சார்புள்ளவை. இதனால், இந்த குண்டு வெடிப்பில் இந்திய இஸ்லாமிய சமுதாயத்தினர் சிலர் பங்கு இருக்கலாம் என்று விசாரிக்கப்படும் என்பது எல்லோருக்கும் தெரிகிறது.

 

இதனால் இஸ்லாமியர்கள் அவமானப்படுகிறார்கள்.  குர்ஆன் பெயரைச்சொல்லி நடந்த குண்டுவெடிப்பால் இவர்கள் அவமானப்படவில்லை. (அந்த ஜிகாதி அமைப்பு தங்கள் நடவடிக்கைக்கு குர்ஆன், ஹதீத், முகம்மது நபி அவர்களின் ஆதாரங்களைக் குறித்துள்ளது)  ஆனால்,  விசாரணைக்காக சில இஸ்லாமியர்களை அணுகினால் அது இவர்களுக்கு அவமானமாக இருக்கிறதாம்

 

இது குறித்து இஸ்லாமியர்கள் அவமானப்பட்டு அதை உண்மையில் தவிர்க்க வேண்டுமானால் அவர்கள் தங்கள் சமுதாய கட்டமைப்புகளில் ஊடுருவிய இந்த ஜிகாதி சக்திகளை எப்படி அடையாளம் கண்டு வேரறுப்பது என்பது குறித்து ஆலோசிக்கவேண்டும்.  இந்த ஜிகாதி சக்திகளுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கும் பெரும்பான்மை இஸ்லாமிய சமுதாயத்தை எப்படி மேம்படுத்துவது என்று ஆலோசிக்க வேண்டும்.  ஆனால், வருத்தம்படும் விதமாக, இது குறித்து இஸ்லாமியர்களின் ஒரு கட்டுரை, பேச்சு, பரிந்துரை என்று எதையும் நாம் காணவில்லை.

 

மாறாக,  எல்லா குண்டுவெடிப்புகளிலும் எடுத்த அதே வழிமுறையாக, இந்த முறையும் இஸ்லாமியர்கள், குண்டுவெடிப்புக்கு உடனே, "விசாரணையில் இஸ்லாமிய சமுதாயத்தை இழுக்க கூடாது" என்று எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட ஆரம்பித்துவிட்டார்கள்.

 

 

இதனால் தடை இல்லாத விசாரணை நடம்பெறாமல் போனாலோ, விசாரணை தடம் திரும்பினாலோ,  உண்மையான தீவிரவாதிகள் தப்பினாலோ அதனால் இவர்களுக்கு சிறிதும் கவலை இல்லை!

 

ஜமாத்-ஏ-இஸ்லாமி-ஹிந்த் (JIH) கைதான முஸ்லிம் இளைஞர்கள் அப்பாவிகள் என்று இப்போதே தீர்ப்பு சொல்லி விட்டது. அதற்கான ஆதாரம் அவர்கள் இஸ்லாமியர்கள் என்பது மட்டும்தான்!  இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் அப்பாவிகள், தொடமுடியாதவர்கள் என்பது இவர்கள் வாதம்.

 

இதற்கு முந்தைய பல தீவிரவாத குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் இஸ்லாமிய அமைப்புகள் கோரசாக அய்யோ, முஸ்லிம்களை விசாரிக்கிறார்களே என்று கூச்சல் போட்டார்கள்.   பிரதமர் மன்மோகன்சிங் கிடம் முறையிட்டார்கள்.  மலேகான் முதலான குண்டுவெடிப்புகளில் மனித உரிமை அமைப்புகள் வாயிலாகவும் பல தடைகளை ஏற்படுத்தினார்கள். ஊடகங்களிலும் தடங்கல் இல்லாத விசாரணைக்கு தங்களின் எதிர்ப்பை இடை விடாமல் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

 

இதைத்தான் நான் முதலில் சொன்ன கதையோடு ஒப்பிடுகிறேன்.  மாமியார் செத்தாலும் பட்டுப்புடவை கெடாமல் இருந்தால் சரி என்கிற மருமகள் போல,  எத்தனை இந்தியர்கள் மடிந்தாலும் என் பேர் மட்டும் மாட்டாமல் இருந்தால் சரி என்ற ஒரு தேச விரோத, ஏன் மனித விரோத,  அணுகுமுறை இந்திய இஸ்லாமியர்களிடம் இருக்கிறது.

 

இதோடு நம் இந்திய இஸ்லாமியர்கள் நின்ற பாடில்லை!

 

இதற்கு ஒரு படி மேலே போய் இந்த குண்டு வெடிப்புக்கு காரணங்களையும்,  காரணமானவர்களையும் அவர்கள் தங்கள் கற்பனையில் கண்டுபிடித்து அறிவித்து விட்டார்கள்.

 

இவ்வளவு சுலபமாக இவர்கள் இந்த வழக்கை தீர்த்து விட்டது குறித்து மகிழ்ச்சி அடையாதீர்கள்.   ஏனென்றால்,  எல்லா இஸ்லாமிய தீவிரவாதத்திற்கும் இதே தீர்ப்புதான் இவர்களிடத்தில்.

 

அகில இந்திய இஸ்லாமிய தனிச்சட்ட அமைப்பின் தலைவர் இல்யாஸ் இந்த குண்டுவெடிப்பு அகில உலக சதி என்று தீர்ப்பு சொல்லி விட்டார்.  அவர் "உலகளாவிய   இஸ்லாமிய விரோத சக்திகள் முஸ்லிம்களின் பேரைக்கெடுக்க இந்துத் தீவிரவாதிகளுடன் சேர்ந்து இந்த குண்டுவெடிப்பு செய்தார்கள்" என்கிறார்.

 

"It seems some international agencies hell-bent on tarnishing the image of Islam and Muslims are conniving with Hindu extremist groups to carry out such attacks so that the entire community could be put in the dock."

 

 

"இஸ்லாமிய தீவிரவாதம்" என்கிற வரிகளை சொல்லக்கூடாது, பேசக்கூடாது என்று தீவிரமாக எதிர்க்கும் இந்த இஸ்லாமியர்கள் அதே சமயம் "இந்து தீவிரவாதம்" என்ற வரிகளை கூசாமல் பேசுவதும், எழுதுவதும் எப்படிப்பட்ட இரட்டை வேடம் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.  

 

விசாரணையைத் திசை திருப்பும் முயற்சிகளில் இதைவிட அபத்தமான ஒரு வழியை நான் அறிந்ததில்லை!

 

உலகெங்கிலும் நடக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு அந்தெந்த ஊருக்கு ஏற்றாற்போல அமெரிக்கா, இஸ்ரயில் என்று காரணம் சொல்லி இந்த பிரச்சனையை பைசல் செய்துவிடும் இஸ்லாமிய அமைப்புகள், இந்தியாவில்  தீவிரவாதத்துக்கு அம்மாதிரி காரணிகள் ஏதும் இல்லாததால் இந்து-தீவிரவாதிகள் இதைச்செய்து இவர்கள் பெயரைக் கெடுக்கிறார்கள் என்கிறார்கள்.

 

மாறாக, இந்த குண்டுவெடிப்புக்கு காரணம் ஏற்ற இந்திய முஜாஹிதின் அமைப்பு விடுத்த அறிக்கையே இவர்களின் திசை திருப்பலை பொய் என்று தெளிவாக்குகிறது. முஜாஹிதின் விடுத்த ஈ-மெயில் செய்தி இந்த குண்டுவெடிப்புக்கான காரணத்தை தெளிவாக சொல்கிறது.  குர்ஆனின் வரிகளை ஆதாரமாக்கி இவர்கள் இந்த குண்டுவெடிப்பை நடத்தி இருப்பது வெளிப்படை.

 

இஸ்லாமிய தீவிரவாதம் இல்லை என்று சொல்லும் மற்ற திம்மி முஸ்லிம்களை இந்த ஜிகாதி அமைப்பே நாய்கள் என்று இழிவுபடுத்துகிறது.

 

இதனால், இந்த தீவிரவாதத்தின் அடிப்படை ஊற்று எங்கு இருக்கிறது என்று தெளிவாகிறது.

 

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நம் தமிழ்நாட்டில் தமுமுக ஏமாற்று அறிக்கையே வெளியிட்டிருக்கிறது.

 

இந்த குண்டுவெடிப்பின் எதிரொலியாக தமுமுக விடுத்த அறிக்கையில் இந்த தீவிரவாதிகளை தூக்கில் போடவேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறார்கள்.  

 

 அடாடா, என்ன நியாயமான குமுறல் என்று ஒரு கணம் மகிழ்ந்து விடாதீர்கள்.  இதே தமுமுக தான் முகம்மது அப்ஸலின் தூக்குதண்டனையை ரத்து செய்ய தீவிரமாக போராடியது.  இந்தியாவில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் அப்ஸலின் தூக்கு தண்டனையை எதிர்த்தன.

 

சுப்ரீம் கோர்ட்டால் "சமுதாயத்திற்கு களங்கம் மற்றும் அச்சுறுத்தல்" என்று அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட ஒரு தீவிரவாதியின் தூக்கு தண்டனையை அவன் இஸ்லாமியன் என்ற ஒரே காரணத்திற்காக எதிர்த்து விட்டு (அதன் பின்னர் வந்த மற்ற தூக்கு தண்டனைகளை நிறுத்த இவர்கள் போராடவில்லை!),  இப்போது இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்தியர்களின் உள்ளம் பதறிக்கொண்டிருக்கும்போது "தூக்கில் போடு" என்று அறிக்கை விடுவது கடைந்தெடுத்த இரட்டை வேடம்.

 

முதலில் ஒடும் திருடன் பின்னால் தன்னை பிடிக்க துரத்துவர்களிடமிருந்து தப்பிக்க "திருடன் பிடி பிடி" என்று கத்திக்கொண்டு ஓடுவான் இல்லையா அதுதான் இவர்களின் அறிக்கை.

 

அப்படி தீவிரவாதத்தை கண்டிப்பதாக அறிக்கை விடும் இந்திய இஸ்லாமிய அமைப்புகள் எல்லாம் அதே அறிக்கைகளில் தீவிரவாதத்துக்கு நியாயம் கற்பிக்கும் வரிகளை தவறாமல் சேர்ப்பது வழக்கம்.  இதனால் இந்த அறிக்கைகள் தீவிரவாதத்திற்கு சப்பைகட்டாகவே முடியும். 

 

அதுபோலவே,  தமுமுகவும் இதுவரை நடந்த குண்டுவெடிப்பில் கைதானவர்கள் அப்பாவிகள் என்றும் அவர்களை விடுதலை செய்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்திருந்தால் இப்படி குண்டுகள் வெடிக்காது என்றும் கண்டுபிடித்து அந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறது.   அதாவது, 'இந்து தீவிரவாதிகளை' கண்டுபிடித்து தூக்கில் போட வேண்டும்.  அப்போது குண்டுவெடிக்காது.  அப்படியே வெடித்தாலும்,  மீதமுள்ள இந்துக்களையும் தூக்கில் போடவேண்டும்.  அதாவது,  இந்தியாவில் இந்துக்கள் இருக்கும்வரை குண்டுவெடிக்கும்.  இதுதான் இவர்கள் சொல்ல வருவது.

 

இந்த ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பின் காரணம் வெளிப்படை.   அதை அந்த குண்டுவெடித்த அமைப்பே தெளிவுபடுத்தியிருக்கிறது.  ஆனால், இந்த உண்மையை உணர மறுத்து முக்காடு போட்டு கண்ணை மூடி முதலைக்கண்ணீர் விடும் நம் இஸ்லாமிய சகோதரர்கள் திருந்தினால் தீவிரவாதம் மடியும், இஸ்லாமிய சமுதாயம் தழைக்கும்.  மாறாக, உண்மையை உணர மறுத்தால் தீவிரவாதம் மடியும் மற்றும் இஸ்லாமிய சமுதாயமும் தனிமைப்படுத்தப்பட்டு மடியும்.

 
 

முன் பக்கம் செல்ல

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்