இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

இந்த தளம் முதுகெலும்பு இல்லாத,பயந்தாங்கொல்லிகளால் புகார் செய்யப்பட்டு கூக்ளி நிர்வாகத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது.ஆனால் உண்மைதான் என்றைக்கும் வெற்றி பெறும்.குறுக்கு புத்தியுள்ளவர்கள் மட்டுமே இந்த மாதிரியான கீழ்தரமான வேலைகள் செய்வார்கள்.

Thursday, April 17, 2008

ஏகத்துவத்திற்கு பதில்: குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்




ஏகத்துவத்திற்கு பதில்: குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்

முன்னுரை: ஏகத்துவ இப்ராஹிம் அவர்கள் நான் "சொல்லாத விவரத்தை" சொன்னதாக கற்பனை செய்துக்கொண்டு என் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் என் மீது சாற்றும் குற்றம்:

கட்டுரை: 'கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் போல் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துவதில்லை'

குற்றச்சாட்டு: இக்கட்டுரையில் "இஸ்லாமியர்கள் நடத்தும் கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் வெறும் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும் தான் கேள்விகள் கேட்கப்படுகின்றது என்ற தோரணையில் " நான் எழுதியதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

இப்படி நான் எழுதினேனா? அல்லது இவர் வேண்டுமென்றே மாற்றிச் சொல்கிறாரா? என்பதை அறிவதற்கு முன்பாக, அவர் எழுதியதை படிக்கவும்:

ஏகத்துவ இப்ராஹிம் அவர்கள் எழுதியது:

அது போக இதற்கு முன் நீங்கள் எழுதின வேறு சில மறுப்பக்கட்டுரைகளின் லட்சனம் என்ன?

சமீபத்தில் நீங்கள் எழுதின 'கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் போல் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துவதில்லை' என்ற கட்டுரையில் நீங்கள் எழுதியதைப் பார்த்தால் பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் கிடையாது.

உலகம் முழுவதும் பலமொழகளிலும் இஸ்லாமியர்கள் நடத்தும் மாற்றுமதத்தவர்களின் கேள்விபதில் நிகழ்ச்சிகள் பிரசித்திப்பெற்றவை. அந்நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்களைப் பற்றிய சந்தேகங்களை மட்டுமே நாங்கள் கலைவது போலவும் - மற்ற கேள்விகளான குர்ஆன், ஹதீஸ்கள் பற்றிய சந்தேகங்களோ அல்லது எங்களின் நம்பிக்கைகள், வணக்கவழிபாடுகள், கொள்கைகள் பற்றிய சந்தேகங்களோ கேட்கப்படுவதில்லை என்பது போல் நீங்கள் எழுதி இருப்பது உங்களின் அறியாமையின் உச்சக்கட்டம்.

'மாற்றுமத்தவர்களின் நேரடி கேள்வி பதில் நிகழ்சிகளில்' குர்ஆன் பற்றி கேட்கப்படுகின்றது. இஸ்லாத்தின் நம்பிக்கைகள் பற்றி கேட்கப்படுகின்றது. குர்ஆனில் முரண்பாடு இருக்கின்றதா? என்று கேட்கப்படுகின்றது. குர்ஆன் அறிவியலுக்கு ஒத்துபோவில்லையே? என்று கேட்கப்படுகின்றது. ஏன் உங்களைப்போண்றோர் பரப்பும் அவதூறுப் பிரச்சராங்களுக்கான விளக்கங்கள் கேட்கப்படுகின்றது. இப்படி எல்லாவிதமான கேள்விளும்; கேட்கப்படுகின்றன. ஆனால் இந்த உண்மைகளை மறைக்க வேண்டும் என்பதற்காக, வேண்டும் என்றே நீங்கள் 'வெறும் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும்தான் கேட்கப்படடுகின்றது என்பது போல் எழுதி இருக்கின்றீர்கள். காரணம் அப்பொழுது தான் கிறிஸ்தவத்தில் தீவிரவாதம் பற்றிய பிரச்சனையோ அல்லது மற்றபிரச்சனையோ இல்லை என்று எழுதி, எங்களுக்கு அது போண்ற நிகழ்ச்சிகள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று மறுக்கலாம் என்பதற்காக.


Source: http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_19.html
( formats are mine)

1. வெறும் தீவிரவாதம் பற்றிய கேள்விகள் மட்டும் தான் கேட்கப்படுகின்றது என்று நான் எழுதினேனா?

கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் போல கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை என்ற கட்டுரையில் நான் ஆறு தலைப்புக்களில் என் கருத்தை சொல்லியுள்ளேன்.

காரணம் 6: தீவிரவாதிகள் தங்கள் செயலுக்கு இஸ்லாமின் பெயரை பயன்படுத்துவதினால், "இஸ்லாம் அமைதி மதம்" என்பதை காட்ட பல நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது:

காரணம் 5. இஸ்லாமிய நாடுகளின் செயல்கள், தண்டனைகள் (ஷரியா சட்டம்):

காரணம் 4. இஸ்லாமிய அறிஞர்களின், இமாம்களின் "அறிக்கைகள்" சொற்பொழிவுகள்:

காரணம் 3. ஹதீஸ்கள்:

காரணம் 2. முகமது:

காரணம் 1. குர் ஆன்:

இந்த ஆறு தலைப்புக்களில் நான் இரண்டு தலைப்புகளில்(காரணம் 6 மற்றும் காரணம் 4) மட்டுமே தீவிரவாதம் பற்றி எழுதியுள்ளேன். அதுவும், இஸ்லாம் தீவிரவாதத்தை பரப்புகிறது என்று எழுதவில்லை. அதற்கு பதிலாக, இஸ்லாமுக்கு ஆதரவாக நான் எழுதியுள்ளேன். மற்ற நான்கு தலைப்புக்களில் "தீவிரவாதம்" என்ற வார்த்தையையும் நீங்கள் காணமுடியாது. இப்ராஹிம் அவர்களே உங்களால் முடிந்தால் கண்டுபிடியுங்கள்.

காரணம் 6: தீவிரவாதிகள் தங்கள் செயலுக்கு இஸ்லாமின் பெயரை பயன்படுத்துவதினால், "இஸ்லாம் அமைதி மதம்" என்பதை காட்ட பல நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது:

காரணம் 4. இஸ்லாமிய அறிஞர்களின், இமாம்களின் "அறிக்கைகள்" சொற்பொழிவுகள்:

ஆனால், இப்ராஹிம் அவர்களுக்கோ எல்லா தலைப்புக்களிலும் "தீவிரவாதம்" என்ற வார்த்தை தென்பட்டு உள்ளது. இன்னொரு முறை என் கட்டுரையை அவர் படித்தால் நன்றாக இருக்கும்.

2. இந்த இரண்டு தலைப்புக்களில் நான் எழுதியது என்ன? (நான் எதைச் சொல்ல முயன்றுள்ளேன்)

குறைந்த பட்சமாக இந்த இரண்டு தலைப்புகளிலாவது, "தீவிரவாதம்" பற்றி தான் எல்லா கேள்விகளும் கேட்கப்படுகிறது என்றாவது நான் எழுதி இருக்கிறேனா? என்று பார்க்கலாம்.

காரணம் 6ல் நான் சொன்ன செய்தி: "தீவிரவாதிகள் தங்கள் ஒரு கையில் குர்‍ஆனை வைத்துக்கொண்டு, மற்றொரு கையில் துப்பாகியுடன் உலக மக்களுக்கு தங்களை காட்டிக்கொள்வதால், இஸ்லாமுக்கு அவதூறு(கெட்ட) பெயர் என்று எழுதினேன்.

நான் எழுதியது:

காரணம் 6: தீவிரவாதிகள் தங்கள் செயலுக்கு இஸ்லாமின் பெயரை பயன்படுத்துவதினால், "இஸ்லாம் அமைதி மதம்" என்பதை காட்ட பல நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது:

ஏன் இஸ்லாமியர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை அதிகமாக நடத்துகிறார்கள் என்று சிந்திப்பீர்களானால், இதற்குள்ள பல காரணங்களில் இந்த ஆறாவது காரணமும் ஒன்று என்று நான் சொல்வேன்.

இஸ்லாம் அமைதி மார்கமா இல்லையா என்பதைப்பற்றி இங்கு நான் சொல்லவரவில்லை, தீவிரவாதிகள் தங்கள் ஒரு கையில் துப்பாக்கியுடனும், மறுகையில் குர்‍ஆனையும் ஏந்திக்கொண்டு நிற்பதைத் தான் சொல்கிறேன். "தீவிரவாதிகள் இஸ்லாமியர்கள்" இல்லை என்று இஸ்லாமியர்கள் கூட்டங்களில், நிகழ்ச்சிகளில் பேசுவார்கள். ஆனால், தீவிரவாதிகள் தங்களை "இஸ்லாமியர்கள்" என்று தான் உலகத்திற்கு அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள். அல்லாவின் வழியில் தாங்கள் இந்த (தீவிரவாத) செயல்களை செய்கின்றனர் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

இப்படி தீவிரவாதிகள் தங்களை ஒரு இஸ்லாமியர்களாக காட்டிக்கொள்வதால், இஸ்லாமிய அறிஞர்கள் "இஸ்லாமை பரப்புவதற்கு" இது ஒரு தடையாக இருப்பதால், பல நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். மக்கள் இஸ்லாமை ஒரு அமைதி மார்க்கம் என்று 'அங்கீகரிக்கவேண்டும்' என்பதற்காக மக்களை கேள்விகள் கேட்கச்சொல்லி அதற்கு பதில் அளித்து வருகின்றனர்.

எந்த ஒரு இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியை பாருங்கள், குறைந்த பட்சம் ஒரு கேள்வியாவது மாற்று மத நண்பர்கள் "இஸ்லாமிய தீவிரவாதிகள் பற்றி, ஜிஹாத் பற்றி" கேட்பார்கள். அதாவது, மாற்று மத அன்பர்களின் மனதில் "இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம்" என்பதை தீவிரவாதிகள் விதைத்துவருகின்றனர்.இஸ்லாமை ஒரு தீவிரவாத மார்க்கமாக இஸ்லாமியர்கள் காட்டினாலும், வலியவந்து மாற்று மதத்தவர்கள் "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமாக" கருதவேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்காக ஊடகங்கள் தவறான செய்தியை பரப்புகிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆக, இஸ்லாமுக்கு தீவிரவாதிகள் கொண்டுவரும் கெட்டபெயரை மாற்றவேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மூலமாக இஸ்லாமிய அறிஞர்கள் நடத்திவருகின்றனர். இப்படிப்பட்ட தீவிரவாதிகள் "இஸ்லாமியர்கள் இல்லை, இது தவறு, இஸ்லாம் இதை அனுமதிப்பதில்லை" என்று சொல்லிவருகின்றனர்.

கிறிஸ்தவத்தை எடுத்துக்கொண்டால், இப்படிப்பட்ட பிரச்சனை இல்லை. கிறிஸ்தவ பெயரை பயன்படுத்தி யாரும் தீவிரவாத செயலில் ஈடுபடுவதில்லை, ஒரு கையில் துப்பாக்கியுடம், மறு கையில் பைபிளை ஏந்திக்கொண்டு யாரும் போஸ் கொடுப்பதில்லை….. …..

…..

எனவே, கிறிஸ்தவத்திற்கு அதிகமாக கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் மனதில் விதைக்கப்பட்ட விதையை எடுக்கவேண்டிய அவசியமில்லை, ஆனால், இஸ்லாமுக்கு அவசியமுண்டு, இன்னமும் இருக்கும்.

இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் சரி, நான் சொல்லவந்த செய்தி என்ன என்பதை சிந்தித்துப்பாருங்கள்.

a) இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் "தீவிரவாதம்" பற்றிய கேள்விகள் தான் அதிகமாக கேட்கிறார்கள் என்று நான் எழுதியுள்ளேனா?

b) தீவிரவாதத்திற்கு காரணம் இஸ்லாம் என்று மேலே உள்ள வரிகளில் சொல்லியுள்ளேனா?


இதற்கு பதிலாக, இஸ்லாமுக்கு ஆதரவாக நான் எழுதியுள்ளேன். தீவிரவாதிகளின் செயல்களால்(தங்கள் கைகளில் குர்‍ஆனை வைத்து நிற்பதால்) இஸ்லாமுக்கு அவதூறு என்று எழுதினேன்.

உண்மையைச் சொன்னால், இந்த வரிகளை நீங்கள் சொல்லவேண்டும், இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லவேண்டும், "அமைதி இஸ்லாமுக்கு சில தீவிரவாதிகளால் அவதூறு என்று நீங்கள் சொல்லவேண்டுமே" ஒழிய நான் சொல்லாதவற்றை என்மேல் குற்றம் சுமத்தக்கூடாது.

நான் எழுதிய கீழ் கண்டவரிகளுக்கு என்ன பொருள் என்று இதை படிப்பவர்கள் தெரிந்துக்கொள்ளுங்கள்.

எந்த ஒரு இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியை பாருங்கள், குறைந்த பட்சம் ஒரு கேள்வியாவது மாற்று மத நண்பர்கள் "இஸ்லாமிய தீவிரவாதிகள் பற்றி, ஜிஹாத் பற்றி" கேட்பார்கள். அதாவது, மாற்று மத அன்பர்களின் மனதில் "இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம்" என்பதை தீவிரவாதிகள் விதைத்துவருகின்றனர்

மாற்று மதத்தவர்களின் "சந்தேகத்திற்கு காரணம் தீவிரவாதிகள்" என்று எழுதினேன், இது உண்மையில்லையா?

சரி போகட்டும், இப்போது நேரடியாக ஏகத்துவ இப்ராஹிம் அவர்களுக்கும், தமிழ் முஸ்லீம்களுக்கும் சில நேரடிக் கேள்விகள், இதற்கு பதில் தாருங்கள்:

1."இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம், தீவிரவாத செயல்களை இஸ்லாம் ஆதரிப்பதில்லை" என்றுச் சொல்கிறீர்கள். அப்படியானால், தீவிரவாதிகள் தங்கள் கைகளில் துப்பாக்கியும், குர்‍‍ஆனையும் ஏந்திக்கொண்டு மக்களுக்கு தங்களை காட்டிக்கொள்வது: சரியா? தவறா?

2. ஒரு நல்ல முஸ்லீமின் வாயினால் சொல்லப்படும் குர்‍ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹு அக்பர் போன்ற வார்த்தைகளை, தீவிரவாதிகள் சொல்வதினால், மாற்று மதத்தவர்கள் இஸ்லாம் பற்றி தவறாக நினைக்க வாய்ப்பு உள்ளது என்று நான் சொல்கிறேன், இது சரியா? தவறா?

3. "இது தவறு, தீவிரவாதிகள் இப்படி செய்யக்கூடாது" என்று சொல்வீர்களானால், இதை நான் சொன்னால் மட்டும் தவறாக மாறிவிடுமா?

4. தீவிரவாதிகள் இப்படி செய்வது சரியானது என்றுச் சொல்வீர்களானால், மாற்று மதத்தவர்களின் சந்தேகம் இன்னும் வலுவடையும்.


இந்த கேள்விகளுக்கு உங்கள் (முஸ்லீம்களின்) பதில் என்ன? நான் அடுத்த தலைப்பிற்குச் செல்கிறேன்.

காரணம் 4ல் நான் சொன்ன செய்தி: இந்த காரணத்தில் நான் சொன்ன செய்தி, சில இஸ்லமிய அறிஞர்களின் "அறிக்கைகள், சொற்பொழிவுகள்", மாற்று மத நண்பர்களின் மனதில் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்கள் வருவதற்கு காரணமாக உள்ளது என்றேன், இது சரியா அல்லது தவறா?

இதற்கு நான் இரண்டு உதாரணங்களை கொடுத்தேன், முதலாவது, ஜாகிர் நாயக் அவர்கள் பின்லாடனைப் பற்றிச் சொன்ன தனது கருத்தையும், இரண்டாவது, ஒரு இஸ்லாமிய அறிஞர், ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் அலுவல்களை செய்யும் போது தனி அறையில் இருக்கக்கூடாது, அப்படி இருக்கவேண்டுமானால், அந்தப் பெண் இந்த ஆணுக்கு தன் தாய்ப்பாலை குடிக்க கொடுக்கவேண்டும் என்றுச் சொன்ன செய்தியைச் சொன்னேன். இப்படி இஸ்லாமியர்கள் தங்கள் கருத்துக்களால் விளையும் விளைவுகளை சிந்திக்காமல், பேசுவதால் இஸ்லாம் பற்றி மற்றவர்கள் குழம்புகிறார்கள் என்றேன். இது தவறா?

காரணம் 4. இஸ்லாமிய அறிஞர்களின், இமாம்களின் "அறிக்கைகள்" சொற்பொழிவுகள்:

ஒரு மார்கத்தின் ஊழியர்களின் பேச்சுக்கள் எப்போதும் பெரும்பான்மையாக அம்மார்க்கத்திற்கு நல்ல பெயரை கொண்டுவரும். இஸ்லாமிய ஊழியர்களின் பேச்சுக்கள் இஸ்லாமியர்களுக்கு வேண்டுமானால் அது "சரி" என்று படலாம், ஆனால், மாற்று மதமக்களுக்கு அது "இஸ்லாம் பற்றி" தவறான கருத்தை கொடுக்கிறது.

சில உதாரணங்கள்:

டாக்டர் ஜாகிர் நாயக்கிடம் "ஒசாமா பின் லாடன் செய்வது சரியா? இல்லையா? உங்கள் கருத்தை சொல்லுங்கள்?" என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் கீழ் கண்ட பதிலை அளிக்கிறார்கள்: "ஒசாமா பின் லாடன் இஸ்லாமின் எதிரியுடன் போர் புரிந்தால், நான் அவரோடு இருக்கிறேன். எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் நட்பு இல்லை... இருந்தாலும் நான் அவருக்காக இருக்கிறேன். ஒசாமா அமெரிக்கா என்ற மிகப்பெரிய தீவிரவாதியோடு தீவிரவாதம் புரிந்தால், நான் அவரோடு இருக்கிறேன். ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக இருக்கவேண்டும்....."

If he is on the truth and if he fighting the enimies of the Islam. I am for him. ..... If he is terrorizing (the America) the terrorist, I am with him.... every muslim should be terrorist.....

http://www.youtube.com/watch?v=Bxk5AAA5FbI

……..

……..

இஸ்லாமிய உலகம் தவிர மற்ற உலக நாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையாக "ஒசாமா பின் லாடன்" செய்வது தவறான செயல், என்று நம்புகின்றனர். இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் (வேண்டா வெறுப்போடு) "அவர் செய்வது தவறு தான்" என்று சொல்லிக்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டுவரவேண்டிய ஒரு அறிஞர், "நான் ஒசாமா பின் லாடன் கட்சி தான்" ஏனென்றால், அவர் இஸ்லாமின் எதிரியோடு போராடுகிறார் என்று சொன்னால்.இஸ்லாமியர்கள் அல்லாத மக்கள், அதாவது இந்துக்கள், கிறிஸ்தவர்கள் இன்னுமுள்ளவர்க‌ள் என்ன நினைப்பார்கள், இஸ்லாமையும், பின் லாடனையும் ஒன்று சேர்த்து நினைத்துக்கொள்வார்கள். அதாவது, பின் லாடனின் இந்த தீவிரவாத செயல்களுக்கு இஸ்லாம் தான் காரணம் என்று நினைப்பார்களா இல்லையா?

ஆனால், பல இஸ்லாமிய அறிஞர்கள் கூட்டங்கள் போட்டு, மேடைகளில் "இஸ்லாம் எப்போதும் வன்முறையை, தீவிரவாத செயல்களை ஆதரிப்பதில்லை" என்று சொல்கிறார்கள். இதனால், மக்கள் குழம்பிப்போய், "இஸ்லாமும் தீவிரவாதமும் ஒன்று தான் போல் இருக்கிறது" என்று நினைத்துக்கொண்டு, இப்படி இஸ்லாமியர்கள் நடத்தும் எந்த ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியானாலும் சரி, முக்கியமாக "தீவிரவாதம் பற்றி" ஒரு கேள்வியை கேட்கிறார்கள்.

இந்த தலைப்பிலும், "இஸ்லாமும் தீவிரவாதமும் ஒன்று" என்று நான் சொல்லவில்லை. ஆனால், சில இஸ்லாமிய அறிஞர்கள் மாற்று மத மக்களின் இதயங்களில் இப்படிப்பட்ட எண்ணங்களை விதைக்கிறார்கள் என்றேன். அதனால், மக்கள் இப்படிப்பட்ட கூட்டங்களில் தங்கள் சந்தேகங்களை கேட்கிறார்கள் என்றேன். இது தவறா? நீங்கள் சொல்லவேண்டியவைகளை நான் இந்த கட்டுரையில் சொல்லியுள்ளேன்.

3. இஸ்லாம் பற்றிய இதர கேள்விகளை கேட்கிறார்கள் என்று நான் சொல்லவில்லையா?

இப்ராஹிம் அவர்கள் சொல்கிறார்கள், கேள்விபதில் நிகழ்ச்சிகளில் பலவகையான கேள்விகள் கேட்கப்படுகின்றன என்றார். நானும் தான் இதைச் சொன்னென்.

இப்ராஹிம் அவர்கள் எழுதியது:

உலகம் முழுவதும் பலமொழகளிலும் இஸ்லாமியர்கள் நடத்தும் மாற்றுமதத்தவர்களின் கேள்விபதில் நிகழ்ச்சிகள் பிரசித்திப்பெற்றவை. அந்நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்களைப் பற்றிய சந்தேகங்களை மட்டுமே நாங்கள் கலைவது போலவும் - மற்ற கேள்விகளான குர்ஆன், ஹதீஸ்கள் பற்றிய சந்தேகங்களோ அல்லது எங்களின் நம்பிக்கைகள், வணக்கவழிபாடுகள், கொள்கைகள் பற்றிய சந்தேகங்களோ கேட்கப்படுவதில்லை என்பது போல் நீங்கள் எழுதி இருப்பது உங்களின் அறியாமையின் உச்சக்கட்டம்.

'மாற்றுமத்தவர்களின் நேரடி கேள்வி பதில் நிகழ்சிகளில்' குர்ஆன் பற்றி கேட்கப்படுகின்றது. இஸ்லாத்தின் நம்பிக்கைகள் பற்றி கேட்கப்படுகின்றது. குர்ஆனில் முரண்பாடு இருக்கின்றதா? என்று கேட்கப்படுகின்றது. குர்ஆன் அறிவியலுக்கு ஒத்துபோவில்லையே? என்று கேட்கப்படுகின்றது. ஏன் உங்களைப்போண்றோர் பரப்பும் அவதூறுப் பிரச்சராங்களுக்கான விளக்கங்கள் கேட்கப்படுகின்றது. இப்படி எல்லாவிதமான கேள்விளும்; கேட்கப்படுகின்றன. ஆனால் இந்த உண்மைகளை மறைக்க வேண்டும் என்பதற்காக, வேண்டும் என்றே நீங்கள் 'வெறும் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும்தான் கேட்கப்படடுகின்றது என்பது போல் எழுதி இருக்கின்றீர்கள்.

நான் எழுதியது:

………இன்றும் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சிகளை கவனித்துப்பாருங்கள், பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் "இந்த ஹதீஸில் இப்படி உள்ளதே, வேறு ஹதீஸ் இப்படி சொல்கிறாரே நாங்கள் எதை பின்பற்றுவது?" போன்ற கேள்விகளாகவே இருக்கும். .....

……..

கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளை கவனித்தீர்களானால், அவைகள் பெரும்பான்மையாக "இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகளைப் பற்றியதாகவே" இருக்கும். நமாஜ் பற்றி, உடல் சுத்தம் பற்றி, எத்தனை முறை குளிக்கவேண்டும், எப்போது குளிக்கவேண்டும், குறிப்பிட்ட சூழ்நிலையை சொல்லி இதன் பிறகு குளித்தபிறகு தான் நமாஜ் செய்யவேண்டுமா? போன்ற கேள்விகளாகவே இருக்கும்…….


மேலே நான் சொன்னதை கவனித்துப்பாருங்கள், நான் சொன்னதும், இப்ராஹிம் அவர்கள் சொன்னதும் ஒன்றாக இல்லையா?. தீவிரவாதம் பற்றிய கேள்விகள் தான் கேட்கிறார்கள் என்று நான் எழுதியுள்ளேனா?

பெரும்பான்மையாக இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் பற்றிய கேள்விகள் தான் இருக்கும் என்று நான் சொன்னதை விட்டுவிட்டு,

கேட்கப்படும் கேள்விகளில் குறைந்த பட்சம் ஒரு கேள்வி "தீவிரவாதம்" பற்றி இருக்கும் என்று சொன்னதை மட்டும் எடுத்துக்கொண்டு


எப்படி என் மீது குற்றம் சுமத்துகிறீர்கள் நீங்கள்? "பெரும்பான்மையாக" என்ற வார்த்தைக்கும், "குறைந்தபட்சம் ஒரு கேள்வி" என்ற வார்த்தைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம், இப்ராஹிம் அவர்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அதாவது 6 தலைப்புக்களில்(100%), 2 தலைப்புக்களில்(34%) மட்டும் தான் நான் தீவிரவாதம் என்ற வார்த்தையையே பயன்படுத்தியுள்ளேன். இதிலும் இஸ்லாமுக்கோ, குர்‍ஆனுக்கோ தீவிரவாதத்தை சம்மந்தப்படுத்தவில்லை. தீவிரவாதிகளின் செயல்கள், சில அறிஞர்களின் அறிக்கைகள், இஸ்லாமை மக்கள் புரிந்துக்கொள்ள தடையாக உள்ளது என்றேன். இது உண்மையில்லையா?

முடிவுரை:

முடிவாக இப்ராஹிம் அவர்களே, நான் என்ன எழுதினேனோ அதைப் பற்றி நீங்கள் விமர்சித்தால் போதும், அதற்கு மேலே போகவேண்டாம். உங்கள் இஸ்லாமியர்கள் எங்கள் கட்டுரைகளை படிக்கக்கூடாது என்று உங்களுக்கு விருப்பமிருந்தால், வெளிப்படையாக உங்கள் இஸ்லாம் சகோதரர்களுக்குச் சொல்லுங்கள், உங்கள் தளங்களில் கட்டுரைகளை எழுதுங்கள், அதை விட்டுவிட்டு, "இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம்" என்று இவர்கள் சொல்கிறார்கள் என்று எங்கள் மீது குற்றம் சாட்டினால், யாரும் என் கட்டுரைகளை படிக்கமாட்டார்கள் என்ற உங்கள் யுக்தி செல்லுபடியாகாது. முக்கியமான தலைப்புகளைப் பற்றி நான் எழுதும் போது, குர்‍ஆன், மற்றும் ஹதீஸ்கள் ஆதாரம் இல்லாமல் எழுதமாட்டேன். எனவே, இன்னொரு முறை என் கட்டுரையை படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி வேண்டுமானால், வேறு ஒரு கட்டுரையில் விளக்குகிறேன். இந்த கட்டுரையை பொருத்தமட்டில், நான் அதை சொல்லவில்லை, நடுநிலையோடு தான் "தீவிரவாதம்" என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன். நான் சொல்லாத விவரத்தை சொன்னதாக எழுதுகிறீர்கள், "இதைத்தான் குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்" என்று சொல்வார்களோ!

ஏகத்துவத்தின் தற்போதைய கட்டுரைக்கு ஈஸா குர்‍ஆனின் இதர பதில்கள்:

1. உவமைக்கு உண்மைக்கும் வித்தியாசம் அறியா அறிஞர்கள் : பாகம் - 2 எசேக்கியேல் 23 மறுவிசாரணை

2. ஏகத்துவத்திற்கு பதில்: யாகாவா ராயினும் "நா" காக்க‌ (இஸ்லாம் சகிப்புத்தன்மையற்ற மார்க்கம் என்று அடையாளம் காட்டும் இஸ்லாமியர்கள்)



Isa Koran Home Page Back - Egaththuvam Rebuttal Index page

Monday, April 14, 2008

நான் ஏன் ஒரு முஸ்லீமாக இல்லை? இக்கட்டுரை முஸ்லீம்களுக்காக மட்டும் எழுதப்படவில்லை....

நான் ஏன் ஒரு முஸ்லீமாக இல்லை?

இக்கட்டுரை முஸ்லீம்களுக்காக மட்டும் எழுதப்படவில்லை....
என் மாணவர்களில் ஒருவராகிய துருக்கியைச் சேர்ந்த அல்டன் என்பவர் என்னைப் பார்த்து கிறிஸ்த்வர்கள் இயேசுவை இரட்சகர் என ஏன் அழைக்கிறார்கள்? இரட்சகர் என்றால் என்ன பொருள்? என்று கேட்டார். நான் அவனுக்கு பின்வருமாறு விளக்கினேன்.

 இயேசு உலகத்திலுள்ள எல்லாரையும் அவர்களின் பாவங்களிலிருந்து மீட்பதற்காக வந்தார். நாம் இயேசுவை விசுவாசித்து அவர் மீது நம்பிக்கை வைக்கும் போது நம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. நாம் நித்திய ஜீவனைப் பெறுகிறோம்.இந்த பதிலுக்குப் பின் அல்டன் என்னைப் பார்த்து முஸ்லீம்களாகிய நாங்களும் இயேசுவை மேசியாவாக நம்புகிறோம்.அவர் எங்கள் தீர்க்கதரிசிகளிலொருவர். இன்னும்சொல்லப் போனால் அவர் முகமது நபிக்கு முந்தைய தீர்க்கதரிசிகளில் எல்லாரையும் காட்டிலும் சிறப்பானவர் என்றுசொன்னான்.

நான் அல்டனுக்கு பின்வருமாறு விளக்கினேன்:
கடவுள் இந்த உலகிற்கு பல தீர்க்கதரிசிகளைஅனுப்பியிருக்கிறார் என்றாலும் அவர் ஒரே ஒரு இரட்சகரைத்தான் அனுப்பியுள்ளார். நம் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு அவர் ஒரே ஒரு இரட்சகரைத்தான் அனுப்பியுள்ளார். ஆனபடியால் ஒரு தீர்க்கதரிசியை விட இரட்சகர் மிகவும் முக்கியமானவர் ஆவார். இதன் பின் என் முஸ்லீம் நண்பர் என்னிடம்,- நீங்கள் இயேசுவைக் குறித்து சொல்வது உண்மை என்றால் அல்லா ஏன் முகமதுவை அனுப்ப வேண்டிய அவசியம் வந்தது? இயேசுவைக் குறித்து பைபில் கூறுவது உண்மை எனில் முகமது வரத்தேவையே இருந்திருக்காதே! என்று கேட்டார்.

கிறிஸ்தவம் மூன்று முக்கியமான காரியங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
1.இயேசுவே உலக மீட்பர்
2. பைபிளில் உள்ளவையே கடவுளின் வார்த்தை
3.நாம் நமது பாவங்களுக்கான மன்னிப்பைஅறிந்து அதை பெற்றனுபவிக்க முடியும்.

பைபிள் இதைத்தவிர மற்றபல காரியங்களை போதிக்கிறது என்றாலும் இவையே அடிப்படையானவை.

1.இயேசுவே உலக மீட்பர்.
இயேசு நமது பாவங்களுக்காக தம்மையே பலியாக ஒப்புக் கொடுத்தபடியால் அவரே இரட்சகர்.அவர் எருசலேமில் கி.பி29ல் ரோம போர்சேவகர்களால் சிலுவையிலறையப்பட்டு மரித்தபோது, அவர் நமக்காக மரித்தார். நாம் நம் பாவங்களுக்கு பெறவேண்டிய தண்டணைக்குப் பதிலாக நமக்குப் பதிலாக அவர் அத்தண்டணையை ஏற்றுக் கொண்டார்.

அவருடைய மரணமானது பண்டைய வரலாற்றாசிரியர்களால் உறுதிப்படுத்தப்பட்டது:
சின்னஆசியாவின் கவர்னராகிய பிளைனி என்பவர் ரோம ராயனுக்கு எழுதிய கடிதத்தில், இயேசு சிலுவையில் மரித்தார் என்று நம்புகிற கிறிஸ்த்வர்களைக் குறித்த காரியத்தில் ஆலோசனை வேண்டி எழுதியிருக்கிறார்.
டாசிடஸ் என்ற ரோம அரசவை வரலாற்றாசிரியர் இயேசு செய்த அற்புதங்களையும், அவரின் பாடு மரணத்தையும் குறித்து தனது குறிப்புகளில் எழுதியுள்ளார்.
ஜோசிபஸ் என்றயூத வரலாற்றாசிரியர் இயேசுவின் அற்புதங்கள், அவரின் மரணாம் மற்றும் அவரின் உயிர்த்தெழுதல் குறித்த அதிகமான தகவல்களை எழுதியுள்ளார்.


மிகவும் முக்கியமாக, பைபிள் பின்வரும் காரியங்களைக் கூறுகிறது:
இயேசுவின் தாயாராகிய மரியாளவரின் சிலுவை மரணத்தின் போதுஅவரருகில் இருந்தததையும்,ரோமசேவகர்கள் தன் மகனின் கைகளிலும் கால்களிலும் ஆணிகளடித்து சிலுவையில் அவரை தூக்கினதை பார்த்தாள் என்றும், இயேசு தன் சீடனாகிய யோவானிடம் தன் தாயை ஒப்படைப்பதையும் பைபிள் கூறுகிறது. நிச்சயமாகவே தன் கண்களுக்கு முன்பாக சிலுவையில் தொங்கினது யாரென்றுமரியாளுக்கு தெளிவாக தெரிந்திருக்கும். அதிலே சிறிதும் சந்தேகமில்லை. அவர் இயேசுவேயன்றி வேறொரு நபரில்லை. நாம் நம் பாவங்களுக்காக தேவன் முன்பாக குற்றமுள்ளவர்களாக இருக்கிறோம் என்று பைபிள் கூறுகிறது. இயேசுவின் சிலுவை மரணம் பாவத்தண்டனையிலிருந்து நாம் தப்பிப்பதற்கான தேவனுடைய செயலாகும்.நம்மை மீட்பதற்கான கடவுளின் திட்டத்தை நாம் நிராகரித்து விட்டால், நம்மை மீட்பதற்கு வேறெந்த மாற்றுத்திட்டமும் இல்லை. கடவுளிடம் நம்மை மீட்க இதை தைத்தவிர வேறொரு திட்டமும் கிடையாது.மருத்துவர் நாம் ஒரு நோயிலிருந்து சுகமடைய ஒரு மருந்தை தரும் போது, நாம் அது கசப்பாயிருக்கிறது என்ற காரணத்திற்காக அவற்றை தள்ளி விடுவதில்லை. அந்த மருந்து நம்மை குணமாகும் என்றசந்தோஷத்தில் நாம் அதை சாப்பிட்டுவிடுவோம். உண்மையில், இயேசுவை என் வாழ்க்கையில் எனது இரட்சகராக அறிந்து கொள்வது எனது மாபெரும் மகிழ்ச்சியானதொரு அனுபவமாக இருக்கிறது.

பைபிள் உண்மை எனில், அல்லா ஏன் முகமதுவை அனுப்பவேண்டிய அவசியம் வந்தது? என்று அல்டன் என்னிடம் கேட்கும் போது அவருடைய கேள்வியிலேயேஅவருக்கு பதிலை காண முடிகிறது. இயேசுவின் சிலுவை மரணம் நமெல்லாருடைய பாவங்களுக்குமான மன்னிப்பை தருகிறது எனில் முகமதுவோ இஸ்லாமோ தேவையில்லை,அவசியமில்லை அப்படிதானே! அவர் இதை உடனடியாக புரிந்து கொண்டு என்னிடம்,'இயேசு உண்மையில் சிலுவையில் மரிக்கவில்லை என்பதை நாங்கள அறிவோம். உண்மையில் இயேசு அல்ல வேறொருவரே சிலுவையில் மரித்தார் என்று குரான் கூறுகிறது" என்றார். இயேசுவை நம்புகிறோம் என்று முஸ்லீம்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் நம்புகிற இயேசு பைபிளில் சொல்லப்பட்டுள்ள இயேசு அல்ல. அவர்கள் இயேசுவைக் குறித்த ஒரு தவறான கருத்தையே நம்புகிறார்கள்.

2. பைபிளில் உள்ளவையே கடவுளின் வார்த்தை.
இயேசுவைக் குறித்து பைபிள் சொல்லுவது உண்மையா? இயேசுவின் மரணத்தைக் குறித்து 137முறை வேதாகமத்தில் குறிக்கப்பட்டுள்ளது.இயேசு சிலுவையில் மரிக்க வில்லை என குரான் கூறுகிறது. இயேசு சிலுவையில் மரித்தார் என்றும் ஏன் இது நம் பாவ தண்டணையிலிருந்து நம்மை மீட்பதற்கான தேவ திட்டம் என்பதையும் விளக்குகிறது.அப்படியெனில் எது சொவது உண்மை?
பைபிள், குறிப்பாக புதியஏற்பாடு தாங்கள் கண்டவைகளுக்கு சாட்சியாக இருந்தவர்களாலெழுதப்பட்டது. குரான் அதற்கு பின் 600 வருடங்கள் கழித்து எழுதப்பட்டது. நேரடிசாட்சிகளின் கூற்றையா அல்லது நூற்றுக் கணக்கானவருடங்கள் கழித்துஎழுதப்பட்ட ஒரு நூலையா? அதை நாம் நம்ப வேண்டும்?
அ)பேதுரு எண்ற வேதாகம ஆக்கியோன் எழுதியதாவது:நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.
ஆ) தனது பெயரில் நற்செய்தி நூல் எழுதிய யோவான் :அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்.
இ) இயேசு சிலுவையில் நமக்காக மரிஅத்தார் எனபடகை பிரசங்கித்த பேதுரு தனது பிரசங்கத்தை கேட்டயூதர்களிடமே அதைப்பற்றிய அவர்களின் அறிவை லோருகிறார்.அவர்சொன்னதாவது:னாங்கள் இதற்கு சாட்சிகளாயிருக்கிறோம் என்று கூறி , நீங்கள் அறிந்திருக்கிறபடி என்று தன் பிரசங்கத்தை அவர் முடிக்கிறதையும் நாம் காண்கிறோம்.
நேரடைசாட்சிகளால் எழுதப்பட்ட பைபிள் மட்டுமள்ள, அகழ்வாராய்ச்சிகளும் பைபிள் உண்மை என்று சான்று பகருகின்றன.ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர்வில்லியம் ஆல்பிரைட் அகழ்வாராய்ச்சியின்படி பைபிளே மிகவும் உண்மையானதாகும் என்று கூறுகிறார்.பைபிள் உண்மையா? என்ற தலைப்பில் அமெரிக்கசெய்திகள்&உலக அறிக்கையின் 1999ம் வருட அக்டோபர்25ம் தேதி பதிப்பில் ஒரு கட்டுரை வெளியானது. அந்த கட்டுரை பைபிள்சொல்கிற காரியங்கள் எல்லாம் உண்மை என்பதை நிரூபிக்கிற சமீபத்திய கண்டுபிடிப்புகள் எல்லாவற்றையும் கூறுகிறது.
இஸ்ரவேல் முற்பிதாக்களைக் குறித்த முக்கிய பகுதிகள், யாத்திராகமம், தாவீதின் ஆட்சி, மற்றும் இயேசுவின் வாழ்க்கை மற்றுமவர்வாழ்ந்த காலம் போன்ற பைபிளின் முக்கியமான காரியங்களை நவீன அகழ்வாராய்ச்சி உறுதிப்படுத்துகிறது என அந்த கட்டுரை கூறுகிறது.

பழைமையான கைப்பிரதிகளும் கூட பைபிள் மாற்றப்படவில்லை எனபதற்கு சான்று பகருகிறது. இன்று 4000த்துக்கும் அதிகமான கிரேக்க புதிய ஏற்பாட்டு பிரதிகள் உள்ளன. அவற்றில் சில மிஅக்வும் பழைமையானவை,கி.பி.150௨00 காலகட்டத்தில் எழுதப்பட்டவை என்று கணக்கிடப்பட்டுள்ளது.பண்டிதர்கள் இந்த எல்லா புராதன கைப்பிரதிகளையும் ஒப்பிட்டு பிரதிகள் எழுதப்பட்ட கால இடைவெளிகளில் எந்த வித்தியாசமும் இல்லை என்கிறனர். அதாவதுகி.பி150 எழுதப்பட்ட பிரதிக்கும் கி.பி1200லெழுதப்பட்ட பிரதிக்குமிடையேபெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. நானே கூட இத்தகைய பண்டைய கைப்பிரதிகளில் சிலவற்றை லண்டனிலுள்ள ராயல் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் கண்டிருக்கிறேன்.

பண்டைய கைப்பிரதிகளைக் குறித்த புகழ்பெற்ற பண்டிதர்கள் வேதாகமத்தின் நம்பகத்தன்மைக்கும் துல்லியத்தன்மைக்கும் சாட்சி கொடுக்கிறார்கள்:
1.வெஸ்கோட் மற்றும் ஹோர்ட் ஆகியோர் பண்டைய ஆவணங்களைக் குறித்த முகவுமறியப்பட்ட திறனாய்வாளர்கள் ஆவர். அவர்கள் கூறுவதாவது:சந்தேகத்திற்குரிய நம் கருத்துகள் புதிய ஏற்பாட்டின் ஆயிரத்தில் ஒரு பகுதிக்குக் கூட ஈடாக முடியாது.

2.பண்டைய கைப்பிரதிகளை ஆராய்வதில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் பண்டிதர் சர்.பிரெடெரிக் கென்யான் என்பார் எழுதியது: பைபிள் எழுதப்பட்ட காலத்திலிள்ளவாறே நாமிடம் இப்போது உள்ளது.இதற்குஎதிரான சந்தேகத்தின்கடைசி அடிப்படையுமிப்போது நீக்கப்பட்டுள்ளது. புதியஏற்பாட்டின் நம்பகத்தனமையும் உண்மைத்தன்மையும் இறுதியாக நிறூபிக்கப்பட்டிருக்கிறது.
3.பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த டாக்டர் ராபர்ட் வில்சன் என்பார் 45 மொழிகளை 30 ஆண்டுகளில் கற்றார். முடிவில் அவர் பைபிள் எல்லா நிலைகளிலும் உண்மையானது என்று அறிவித்தார்.
4. கடவுளுடைய தீர்க்கதரிசியாக இயேசுவால் பொய் சொல்ல முடியாது. அவர் தன்னை பின்பற்றுகிறவர்களிடம் சொன்னதாவது:வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை(மத்.24:35). இஞ்ஜிலில்(பைபிளில்) குறிக்கப்பட்டிருக்கிற தன்னுடைய வார்த்தைகள் ஒருபோதும் அழியாது அல்லது மற்றப்படாது என்று இயேசு வாக்குரைத்தார்.
5.பைபிளில் உள்ளவைகளை மாற்ற முயல்கிறவனை தண்டிப்பேன் என்று தேவனும் எச்சரிக்கிறார்:இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்(வெளி.22:18,19). பைபிள் ஒரு போதும் மற்றப்படாது என்று தேவன் நமக்கு உறுதி தருகிறார். தேவன் சொல்கிறதை நாம் நம்பலாம்.
6.தனது வார்த்தை மாற்றப்படுவது அல்லது திரித்துக்கூறப்படுவது ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க தேவன் வல்லமையுள்ளவரா? ஆம்.அவர் வல்லமையுள்ளவராகவே இருக்கிறார்.தனது வார்த்தைகளை ஏதாவது மாற்றுவதற்கு தேவன் அனுமதிப்பாரா? நிச்சயமாக இல்லை.
7.அரபி மொழியில் உள்ள குரானும் கூட யூத,கிறிஸ்தவ வேதங்கள் உண்மை,னம்பத்தகுந்தவை என்று போதிக்கின்றன. சுர10:94 கூறுவது: (நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம்(கிறிஸ்தவர்களிடம்,யூதர்களிடம்) கேட்டுப் பார்ப்பீராக¢ நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம்.மனுக்குலத்துக்கு கடவுள் அளித்த எல்லா வேதங்களையும் குறித்து குரான் கூறும் போது, சுரா10:64:அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.

நான் மேற்கண்ட இந்த வசனங்களை என் முஸ்லீம் நண்பரிடம் காட்டி, அல்லாவினால் கொடுக்கப்பட்ட பழைய ஏற்பாடு(தவ்றாத்)மற்றும் புதிய ஏற்பாடு(இஞில்) ஆகியவற்றில் உள்ளவார்த்தைகள் அல்லாவின் வார்த்தைகளா என்று கேட்டேன். அவர் அல்லாவினால் கொடுக்கப்பட்ட வார்த்தைகள் தான் என்று ஒப்புக் கொண்டு,ஆனால் பிபுஅவை மாற்றப் பட்டுவிட்டன என்றார். பின்பு நான் அவரிடம் அப்படியானால் குரான் பிழையானது,அதில் தவறு உள்ளது என்பதைக் குறிக்கிறது என்றேன். ஏனெனில் குரான் அல்லாவின் வார்த்தைகள் ஒருபோதும் மாற்றப்படமுடியாது என்று கூறுகிறது. பழைய,புதிய ஏற்பாட்டில் உள்ளவை மாற்றப்பட்டிருக்குமானால் குரான் பிழையானதாகிவிடும்.குரான் பிழையற்றது எனில் பைபிளும் மற்றப்பட முடியாது. "எது சரி? பைபிள் மாற்றப்பட்டதா? அல்லது குரான் பிழையானதா>என்று நான் அல்டனிடம்கேட்டேன்.இந்தக் கேள்விக்கு எப்படி பதிலளிப்பது எனா அவருக்கு தெரிய வில்லை.

பைபிள் மாற்றப்பட்டு விட்டது என்று சொல்லுகிறவர்கள் பைபிளை தவறாகவிளக்குகிறார்கள் அல்லது மூல எழுத்துகளாகிய எபிரேய கிரேக்க வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்துவதில்லை. அவர்கள் மொழிபெயர்ப்புகளில் உள்ள பிழைகளையே காண்கிறார்கள். நான் அரபிமொழியிலுள்ள குரானை பயன் படுத்துகிறேன்.

3.நாம் நமது பாவங்களுக்கான மன்னிப்பைஅறிந்து அதைபெற்றனுபவிக்க முடியும்.
பைபிள் சொல்லவரும் கருத்து மிகவும் தெளிவாக உள்ளது. அது தேவன் நம்மை நேசிக்கிறார், நமக்கு ஒரு புது வாழ்வைஅவர் அளிக்கவிரும்புகிறாரென்பதே. நாம் நம் தண்டனைக்கு தப்பும்படிஅவர் வைத்துள்ள திட்டத்தை நாம் ஏற்றுக்கொள்வோமாகில் அவர் நம் பாவங்களை மன்னித்து சமாதானத்தினாலும் மகிழ்ச்சியினாலும் நம் வாழ்வை நிரப்ப அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.னாம் இன்று உலகில் காண்பவை தேவனுடைய திட்டமல்ல. நாம் போர்,பசி,குற்றம்,வெறுப்பு,கொலைபோன்ற காரியங்களைக் காண்கிறோம்.இந்த எல்லா தீஸ்செயல்களும் மனுக்குலம் தேவனுக்கு விரோதமாக வாழ்வதினாலேயே உண்டாகின்றன.அவர்கள் தேவனுடைய பரிபூரன திட்டத்தை தள்ளிவிட்டு தங்களுக்காகவே வாழ்வதைதெரிந்துகொண்டனர்.ஒவ்வொருவனும் தனகாகவே வாழும் போது அவன் தானாகவே ட்ய்கங்களுக்காக வாழ்கிற மற்றவர்களிடம் முரண்படுகிறான். அதன் விளைவைத்தான் நாம் காண்கிறோம். தனிப்பட்ட -நிலையில், தேவனுக்கு விறோதமான மனிதனின் முரட்டாட்டத்தின் விளைவுகளான வெறுப்பு,கோபம்,பொறாமை போன்றவைகளை நாம் காண்கிறோம். தனிமை,குழப்பம்,கலக்கம், குடிவெறி, கிலேசம் ஆகியவற்றையும் நாமெல்லாரும் வாக்கையில் சந்திக்கிறோம். இவை எல்லாவற்றையும் மாற்றுவதுதான் தேவனுடைய திட்டமாகும். அவர் தனது சமாதானம், அன்பு, சந்தோசம்,பொறுமை ஆகியவற்றை நமக்கு தரவிரும்புகிறார். ஆகவேதான் அவரியேசுவை உலகிற்குஅனுப்பினார். நம் பாவங்களுக்கான கிரயத்தை செலுத்தவும், நமக்கு ஒரு புதியவாழ்வை தருவதற்காகவும் இயேசு சிலுவையில் மரித்தார்.இப்படியாகத்தான் நாம் தேவனுடைய பாவமன்னிப்பையும் ஏற்றுக் கொள்ளுதலையும் நாம் நம் வாழ்வில் அறிந்து அனுபவிக்கமுடியும்.

எனக்கு ஏன் ஒரு இரட்சகர் ட்Hஏவை? என்று சிலர் கேட்கின்றனர். நாமெல்லாரும் பாவிகளாயிருக்கிறபடியால் நமக்கு ஒரு இரட்சகர் தேவை. உயிர்வாழ்கிற ஒவ்வொருவரும் சமயங்களில் தவறிழைத்துவிடுகிறோம். பைபிள்மிகவும்தெளிவாகக் கூறுகிறது: எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவனில்லை, ஒருவனாகிலும் இல்லை(சங்.53:3) நம்முடைய பாவங்களினிமித்தம் நாம் தேவனுக்கு முன்பாக குற்றவாளிகளாக இருக்கிறோம். நாம் செய்த தீமைகளுக்காக அவர் நம்மை தண்ண்டிப்பார். பைபிள் கூறுவது:பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.... துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்(எசே.18:20). நாம் நம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவதற்கு ஒரே வழி இயேசுவே. ஏன் இயேசுதான் அந்த ஒரே வழி? ஏனெனில் இயேசு ஒருவரே பாவமில்லாதவர்.ஆகவே அவர் ஒருவரேனம்மை நம்பாவங்களிலிருந்து இரட்சிக்கக் கூடியவர்.ஏன் இயேசுதான் அந்த ஒரே வழி? ஏனெனில் அவர் ஒருவரே நம் பாவங்களுக்காக மரித்தார்.ஆகவே அவரொருவரேனம்மைஇரட்சிக்க முடியும்.ஏன் இயேசுதான் அந்த ஒரே வழி?ஏனெஇல் இயேசு ஒருவரே உயிர்த்தெழுந்து தானே உலக இரட்சகரென்பதை நிரூபித்தார்.பைபிள் நமக்கு நம்பிக்கையை தருகிறது. இயேசுவின் மீதுள்ள எளிய விசுவாசத்தினாலும்,அவர் நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்று நம்புவதினாலும் நாம் தேவனுடைய மன்னிப்பையும் இரக்கத்தையுமறிந்து நித்திய ஜீவனை அளிக்கிற இரட்சிப்பை பெற்றனுபவிக்க முடியும். பைபிள்தெளிவாகக்கூறுகிறது:உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே(1பேதுரு1:18,19).
மற்ற அனைவரும், தேவனால் அனுப்பப்பட்ட ஒவ்வொரு தீர்க்கதரிசியும் கூட தேவனுடன் ஒப்புரவாக்கப்படல் அவசியமான இரட்சகர் தேவையான பாவிகளே.முதல் மனிதன் ஆதாம் பாவம் செய்தான். ஆபிரகாம்,மோசே, தாவீது ஆகிய எல்லாரும் தேவனுக்கு விரோதமாக பாவம்செய்தார்கள். குரான் கூறுகிறபடி,முகமது நபியும் கூட மன்னித்தல் தேவையான ஒரு பாஅவிதான்(சுரா47:19,48:1- 2 பார்க்கவும்).இயேசு ஒருவரே நம் இரட்சகராக இருக்க முடியும்.ஏனெனில் அவர் ஒருவரே பாவமில்லாதவர். தேவன் நம்மை மிகவும் நேசித்த படியால் அவர் இயேசுகிறிஸ்துவை நம்மை இரட்சிக்க உலகிற்கு அனுப்பினார் என்று பைபிள் நமக்கு போதிக்கிறது.பைபிள் கூறுகிறதாவது:தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்(யோவான்3:16- 17).

இஸ்லாம் மன்னிப்பை அருளுவதில்லை. முகமது நம் பாவங்களுக்காக மரிக்க வில்லை. நாம் நித்திய ஜீவனை உடையவர்களாய் பரலோகத்திற்குசெல்லப் போகிறோம் என்பதை நம் அறிந்து கொள்ளமுடியும் என்று குரான் போதிக்கவில்லை. இஸ்லாம் மார்க்கம் நம் இரட்சிப்பிற்கான உறுதியை நமக்கு தர வில்லை.இயேசுவின் மீதுள்ள விசுவாசம் மாத்திரமே அதைச் செய்ய முடியும்.
இந்த கட்டுரை எவரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. இஸ்லாமிற்கும் கிறிஸ்தவத்திற்கும் உள்ள வித்தியாசத்த எடுத்துக் காட்டும் நோக்கிலதான் எழுதப்பட்டிருக்கிறது. மேலும் எந்தெந்த பகுதிகளில் முஸ்லீம்கள் கிறிஸ்தவத்தைக் கூறித்து தவறான கருத்துடையவர்களாக ர்ருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டவும் இது எழுதப்பட்டது. நாம் கிறிஸ்தவத்தை வேண்டாம் என்று தள்ளிவிடுவதற்கு முன்பாக கிறிஸ்தவமென்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இல்ல்லையெனில், நாம் ஒரு பொய்யை நம்பி, கடவுள் எல்லாருக்கும்வைத்திருக்கும்மிகப்பெரும் ஆசீற்வாதத்தை நாம் இழந்து போய்விடுவோம்.அந்த ஆசீர்வாதம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வதே!
 
 

முன் பக்கம் செல்ல

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்