இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

இந்த தளம் முதுகெலும்பு இல்லாத,பயந்தாங்கொல்லிகளால் புகார் செய்யப்பட்டு கூக்ளி நிர்வாகத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது.ஆனால் உண்மைதான் என்றைக்கும் வெற்றி பெறும்.குறுக்கு புத்தியுள்ளவர்கள் மட்டுமே இந்த மாதிரியான கீழ்தரமான வேலைகள் செய்வார்கள்.

Showing posts with label இயேசு. Show all posts
Showing posts with label இயேசு. Show all posts

Monday, September 8, 2008

உமரை கண்டு பயப்படும் இஸ்லாமிய உலகம்

 

இதுவரை இணையதளங்களில் இஸ்லாம் பற்றிய ஒரு சில விவாதக்கட்டுரைகளை எழுதுபவர்,மற்றும் பல விவாதக்கட்டுரைகளை   ஆன்சரிங் இஸ்லாம் தளங்களில் இருந்து மொழிபெயர்த்து எழுதுபவர் உமர் என்ற புனைபெயரை உடைய நண்பர்.

ஆனால் அவரை நேரடியாக சந்திக்க பெலன் இல்லாத இஸ்லாமிய உலகம் அவருடைய கட்டுரைகளை எடுத்து பதிக்கும் என் போன்றவர்களின் பெயர்களை குறிப்பிட்டு பதில் எழுதுவதாக சொல்லி தங்களின் பதில்களை எழுதியுள்ளார்கள்.

இவ்வளவு பதில் எழுதும் இஸ்லாமிய அறிஞர்களே கட்டுரைகளின் மூல தொடுப்பை கண்டாவது அந்த கட்டுரைகள் யாருடையது என்ற குறைந்த அறிவுகூட இல்லாமலா நீங்கள் இஸ்லாமை விவாதித்து காப்பாற்ற போகிறீர்கள்.

பதில் எழுதும் துணிவுள்ளவர்கள் எந்த கட்டுரைக்கு பதில் எழுதுகிறீர்களோ அந்தக்கட்டுரையின் மூல தொடுப்பைகொடுத்து எழுதுங்கள்.அப்பொழுது தெரியும் உங்கள் உண்மையான முகம்.ஏன் மூல தொடுப்பை கொடுக்க உங்களுக்கு இவ்வளவு பயம்.
 
உங்கள் கட்டுரைக்கு உமர் அவர்கள் எழுதிய பதில் கீழே உள்ளது.உங்கள் பிளக்கரின் தொடுப்போடு
 
 
 
 
 
 
 
 
ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை:

"நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?


முன்னுரை: குர்‍ஆனில் உள்ள எழுத்துபிழைகள் பற்றிய கீழ் கண்ட கட்டுரையை நான் மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தேன்.

குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் (Scribal errors in the Qur'an)


http://www.answering-islam.org/tamil/authors/newton/scribal.html Or
http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/newton/scribal.html Or
http://isakoran.blogspot.com/2008/08/scribal-errors-in-quran.html

இக்கட்டுரையில் சொல்லப்பட்டு இருந்த ஒரு விவரத்தை விளக்கும்படி கேட்டுள்ளார் அருமை நண்பர் அபூமுஹை அவர்கள். அவரின் வழக்கத்தின் படி எந்த கட்டுரைக்கு பதில் தருகிறாரோ அதன் தொடுப்பை தராமல் எழுதியிருந்தார். இப்படிப்பட்டவர்கள் அதாவது மூல தொடுப்பை தராமல் எழுதும் இப்படிப்பட்டவர்கள், இணையத்தில் எழுதுவதற்கே அடிப்படை தகுதியை அடைவார்களா? என்பதை இணையத்தில் உலாவரும் அன்பர்கள் முடிவு செய்யட்டும். நான் பல முறை சொல்லியாகிவிட்டது, எத்தனை முறை சொன்னாலும் எங்களுக்கு கேட்காது என்ற தோரணையில் மறுபடியும் அப்படியே செய்கிறார்கள், செய்யட்டும், அவர்களால் முடிவதை மட்டும் தானே அவர்களால் செய்யமுடியும்?!

அவர் என் தொடுப்பை தரவில்லையானாலும், நான் அவரது தளத்தின் தொடுப்பை தருகிறேன்.

அபூமுஹை அவர்களின் கட்டுரை: குர்ஆனில் பிழைகண்ட அசத்தியவான்களுக்கு!
Source: http://abumuhai.blogspot.com/2008/09/blog-post_05.html

என் கட்டுரையில் மேலோட்டமாக சொல்லியிருந்த விவரத்தை எல்லாருக்கும் புரியும் வண்ணம் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறார்.

மெய் எழுத்து "நூன்" குர்‍ஆனி(21:88)ல் சொறுகப்பட்டது

ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் கட்டுரையிலிருந்து அவர் "குர்‍ஆன் 21:88ம்" வசனம் பற்றிய கேள்வியை எழுப்பியுள்ளார்.

மொழி எழுத்துக்களின் உருமாற்றம்:

அபூமுஹை அவர்கள் "மொழி எழுத்துக்களில் உருமாற்றம்" என்பது எல்லா மொழிகளுக்கும் உண்டே, அது எனக்கு புரியவில்லையா என்று கேட்கிறார். அன்பான அபூமுஹை அவர்களே, என் கட்டுரையில் நீங்கள் மேற்கோள் காட்டிய குர்‍ஆன் 21:88ம் வசனம் பற்றிய‌ பிழை "அரபி மொழியில் ஏற்பட்ட எழுத்து உருமாற்றத்தினால் வந்த மாற்றமில்லை" அதற்கு பதிலாக குர்‍ஆனில் "நூன்" என்ற மெய் எழுத்து 21:88ம் வசனத்தில், இஸ்லாமியர்களினால் இடையில் சொறுகப்பட்டது/பிழை திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதை விளக்குகிறது.

ஆனால், நீங்கள் என்னவோ, அது எழுத்து உருப்புக்களில் ஏற்பட்ட மாற்றமே என்று விளக்கமளித்து இருக்கிறீர்கள். நான் கொடுத்து இருந்த தொடுப்பை(http://www.answering-islam.org/PQ/ch13e1-index.html#CH13e1) முழுவதுமாக படித்து இருந்தால், இந்த கட்டுரையை நீங்கள் எழுதியிருக்கமாட்டீர்கள் (அப்படி படித்து இருந்தாலும், அரபி தெரியாத இவர்களுக்கு எங்கே இதெல்லாம் புரியப்போகிறது என்று தெரிந்தே கூட நீங்கள் எழுதியிருப்பீர்கள்).

சரி, என் கட்டுரையில் நான் கொடுத்த தொடுப்பில் ஆங்கிலத்தில் என்ன உள்ளது என்பதை அப்படியே தருகிறேன், பிறகு அதன் கீழே உங்களுக்கு விளக்குகிறேன்.

3/ Nuns Missing/ 'Added'


(a)
Another feature mentioned in the 1938's Note IX and also raised by Hamidullah is that of a consonant nun missing' in Q21:88. It is depicted in the Note IX just cited, at the left end of the bottom line, namely  (the word nUnji is formed by 'correcting' through 'false vocalisation').

Hamidullah

too writes of this. After writing about the extra consonant ya in biyyadin, he writes of what he terms this "one case" of a consonant missing in the Qur'an (!):

"In consonants also there is a case, but just the contrary one; the Qur'anic orthography  is for what one would expect ; and the want is supplied by an additional but small () as a vocalisation sign." (Orthographical..., p. 79; emphasis added)

In the 1924 Egyptian text one finds only a small 'nun' above the graphic form , while the Taj text (as in the Swahili) from Karachi includes a sukun above the nun.37 However, as the following indicate, the Turkish , Iranian  and Indian  texts ALL correct the error by inserting this nun into the graphic form. Here is yet another reason the Egyptians had to reject the Turkish text. We note that the Warsh also has  indicating that this nun was included in the Medinan manuscript.

Source: http://www.answering-islam.org/PQ/ch13e1-index.html#CH13e1

மெய் எழுத்து "நூன்" ஐ குர்‍ஆன் வசனம் 21:88ல் இடையில் சொறுகிய விவரங்கள்:

அதாவது, இந்த குர்‍ஆன் வசனம் 21:88ல், "நூன்ஜி" என்ற வார்த்தையில் "நூன்" என்ற எழுத்து இரண்டாவதாக இல்லை, ஆனால், அதை அவ்வசனத்தில் சேர்த்து எழுதினார்கள். அதை சேர்த்து எழுதும் போது, அதே எழுத்தை சிறியதாக அவ்வசனத்தின் மேலே எழுதினார்கள், பிழையை திருத்தினார்கள். இது ஒன்றும் அரபி எழுத்துக்களில் ஏற்பட்ட "எழுத்து உருமாற்றம்" இல்லை, இது ஒரு குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழையாகும்(Scribal Error).

இப்படி நூன் எழுத்தை சிறியதாக காட்டி சில குர்‍ஆன்களில் பதித்துள்ளார்கள். ஆனால், சில குர்‍ஆன்களில் அந்த "சொறுக‌ வேண்டிய நூன் எழுத்தை, மற்ற வார்த்தைகளோடு சேர்த்து, எழுதியுள்ளனர், பதித்துள்ளனர்".

இந்த விவரங்களை கிறிஸ்தவர்கள் ஒன்றும் சொந்தமாக எழுதவில்லை, இதை இஸ்லாமிய அறிஞர்கள் அறிந்துள்ளனர், புத்தகங்கள் எழுதியுள்ளனர், மற்றும் குர்‍ஆனை பிரிண்ட் செய்யும் போது, இதனை கவனித்து பதிக்கிறார்கள்.

இஸ்லாமிய அறிஞர் முஹம்மத் ஹமீதுல்லா இந்த வசனத்தில் உள்ள பிழையைப் பற்றி என்ன சொல்லியுள்ளார் என்பதை கவனிக்கவும்:

"In consonants also there is a case, but just the contrary one; the Qur'anic orthography  is for what one would expect ; and the want is supplied by an additional but small () as a vocalisation sign." (Orthographical..., p. 79; emphasis added)

"மெய் எழுத்துக்களில் கூட இப்படிப்பட்ட ஒரு பிரச்சனை உள்ளது, ஆனால், இது மிகவும் முரண்பாடான ஒன்று. இந்த குறிப்பிட்ட குர்‍ஆனின் வசனம் என்று உள்ளது. ஆனால், இவ்வார்த்தை இப்படியாக இருக்கவேண்டும். இதை சரி செய்ய, ஒரு அதிகபடியான நூன்( ) என்ற எழுத்தை சிறியதாக சேர்த்தார்கள்."

Hamidullah, M., Orthographical Peculiarities in the text of the Qur'an; Islamic Order (Karachi), Vol. 3, no. 4, p. 72-86, 1981; copy obtained from Islamic Foudation UK, Leicester.

Source: http://www.answering-islam.org/PQ/ch13e1-index.html#CH13e1

வார்த்தையின் மேலே சிறிய நூன் அல்லது வார்த்தையோடு சேர்த்து எழுதிய நூன்:

இப்படி குர்‍ஆனில் உள்ள எழுத்து பிழையை திருத்தும் போது, அந்த புதிய எழுத்தை/அல்லது சரியான எழுத்தை அவ்வார்த்தையின் மேலே ஒரு சிறிய எழுத்தாக எழுதி வைப்பார்கள். இதன் மூலம், எது மூல குர்‍ஆனில் இருந்தது, எது மனிதர்கள் திருத்தி சரி செய்தது என்பதை காட்ட உதவியாக இருக்கும். ஆனால், சிலர் அந்த திருத்தப்பட்ட எழுத்தை மேலே குறிப்பிடாமல், மற்ற எழுத்துக்கள் போலவே, அரபி வார்த்தைகளோடு சேர்த்து பிரிண்ட் செய்துவிடுகின்றனர். இப்படி செய்வது தவறானது என்றுச் சொல்லி, சிலர் மற்றவர்களின் குர்‍ஆனை ஏற்றுக்கொள்வதில்லை.

உதாரணத்திற்கு, எகிப்து நாட்டினர், துருக்கி நாட்டினரின் குர்‍ஆனை ஏற்றுக்கொள்வதில்லை, காரணம் இது தான்.

In the 1924 Egyptian text one finds only a small 'nun' above the graphic form , while the Taj text (as in the Swahili) from Karachi includes a sukun above the nun.37 However, as the following indicate, the Turkish , Iranian  and Indian  texts ALL correct the error by inserting this nun into the graphic form. Here is yet another reason the Egyptians had to reject the Turkish text. We note that the Warsh also has  indicating that this nun was included in the Medinan manuscript



1924ல் பதிக்கப்பட்ட எகிப்து குர்‍ஆனில், அந்த வசனத்தின் மேலே ஒரு சிறிய நூன் என்ற எழுத்தை பிரிண்ட் செய்துள்ளனர், அதே போல, கராச்சியில் வெளியிடப்பட்ட தாஜ் குர்‍ஆனில்(ஸ்வாஹிலி) இதே போல சிறிய நூனை எழுதி அதன் மேலே sukun என்ற குறியையும் எழுதியுள்ளனர்.

ஆனால், துருக்கி , ஈரான் மற்றும் இந்தியாவில் பிரிண்ட் செய்யப்பட்ட குர்‍ஆன்களில், அந்த சிறியை நூனை, மற்ற எழுத்துக்களோடு சேர்த்து எழுதியுள்ளனர். இப்படி துருக்கி குர்‍ஆனில் வார்த்தையின் மேலே சிறிய நூனை எழுதாமல், வார்த்தையோடு சேர்த்து எழுதியதால், தான் எகிப்தியர்கள், துருக்க் குர்‍ஆனை ஏற்பதில்லை. வர்ஷ் என்பவரும் இந்த நூனை சேர்த்தே எழுதியுள்ளார் , காரணம் மதினா பிரதிகளில் இவ்வெழுத்து இருந்ததாகச் சொல்கிறார்.

Source: http://www.answering-islam.org/PQ/ch13e1-index.html#CH13e1

அபூமுஹை அவர்களே, உங்களுக்கு நான் ஒரு விவரத்தைச் சொல்ல விரும்புகிறேன், இந்த விவரங்கள் அனைத்தும், நான் என் கட்டுரையிலேயே கொடுத்து இருந்தேன், ஆனால், அதை படிக்காமல், வேறுவிதமாக நான் சொன்னதாக நினைத்துக்கொண்டு, ஏதோ பதில் என்று எழுதவேண்டும் என்று எழுதுகிறீர்கள். போகட்டும், ஒரு குர்‍ஆனின் எழுத்துப் பிழையைப் பற்றி சிறிது விளக்கமாக, தமிழ் முஸ்லீம்களுக்கு தெரியவர உதவி புரிந்துள்ளீர்கள், உங்களுக்கு என் நன்றிகள்.

அபூ முஹை அவர்கள் பதித்த படங்களில் குர்‍ஆனை பிரிண்ட் செய்யும் போது ஏன் வித்தியாசம் காட்டியுள்ளார்கள்:

அபூ முஹை அவர்கள், என் கட்டுரையில் குறிப்பட்ட குர்‍ஆன் எழுத்துபிழை என்பது, மொழியின் எழுத்துக்களில் ஏற்பட்ட மாற்றம் தான் என்பதை விளக்க, மற்றும் காலம் செல்லச்செல்ல எழுத்துக்களின் வடிவங்கள் மாற்றமடையும் என்பதைக் காட்ட மூன்று எடுத்துக்காட்டுக்களை (குர்ஆன் 010:103, குர்ஆன் 019:72, குர்ஆன் 021:088) கொடுத்தார். அதில், ஒன்று நாம் இந்த கட்டுரையில் அலசிக்கொண்டு இருக்கும், குர்‍ஆன் 21:88ம் வசனமாகும். அபூமுஹை அவர்களின் கட்டுரையில் பெரிய படமும் கொடுக்கப்பட்டுள்ளது, அதையும் பாருங்கள்.


திருக்குர்ஆன், 010:103வது வசனம்



திருக்குர்ஆன் 019:072வது வசனம்



திருக்குர்ஆன் 021:088வது வசனம்



*****

திருக்குர்ஆன் 010:103



திருக்குர்ஆன் 019:72



திருக்குர்ஆன் 021:088


source: http://abumuhai.blogspot.com/2008/09/blog-post_05.html

இந்த வசனங்கள் அனைத்தும் ஒரே குர்‍ஆனிலிருந்து எடுத்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் கொடுத்த படங்களில்(வசனங்களில்) உள்ள அந்த குறிப்பிட்ட வார்த்தை இரண்டு இடத்தில்(10:103 & 19:72) வசனத்தோடு சேர்த்து எழுதியுள்ளது(பிரிண்ட் செய்துள்ளார்கள்), ஆனால், ஒரு வசனத்தில் மட்டும்(21:88) நான் மேலே குறிப்பிட்டது போல, சிறிய நூன் வசனத்தின் மேலே பிரிண்ட் செய்துள்ளார்கள் (நாம் சொல்வது சுலபமாக புரிய தேவையான படங்களை அபூமுஹை அவர்களே கொடுத்துவிட்டதால், அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.)

அதாவது, நீங்கள் மேற்கோள் எடுத்த குர்‍ஆன் பதிப்பாளருக்கு, எது மூல குர்‍ஆன் வசனமாக இருக்கிறது என்றும், எது குர்‍ஆன் பிழை திருத்த சொறுகப்பட்ட வசனம் என்று தெரிந்திருக்கிறது. அதனால், தான் இரண்டு இடத்தில்(நீங்கள் குறிப்பட்ட எடுத்துக்காட்டுக்களில்) வசனத்தோடு சேர்த்து எழுதியுள்ளனர், ஆனால்,குர்‍ஆன் 21:88ல் மட்டும் இது மனிதர்களால் சேர்க்கப்பட்ட எழுத்து என்பதை காட்ட மேலே சிறியதாக‌ குறிப்பிட்டுள்ளார்கள்.

நீங்கள் சொல்வது போல, இது ஒரு "எழுத்து மாற்றத்தில் ஏற்பட்ட வித்தியாசமாக இருந்தால்" நீங்கள் எடுத்துக்காட்டு காட்டிய ஒரே குர்‍ஆனில், ஏன் சில இடங்களில் சேர்த்து எழுதுகிறார்கள், ஒரு இடத்தில் மேலே சிறியதாக எழுதுகிறார்கள்.


எனவே, என் கட்டுரையின் தலைப்பை நீங்கள் திசைத் திருப்பியது போதும், அதே நேரத்தில், நான் என் யோக்கியதையை நிருபித்துக் கொண்டேன், ஆனால், உங்களுக்கு உண்மைத் தெரிந்தே இப்படி மக்களை திசைத் திருப்ப, மாற்றி எழுதியதால், யார் யோக்கியதை உள்ளவர்கள் என்று எல்லாருக்கும் தெரிந்து இருக்கும்.

பிஜே அவர்களின் குர்‍ஆன் மொழியாக்கத்திலிருந்து ஒரு சில விவரங்கள்:

மூல குர்‍ஆனில் பிழையே இல்லை, ஒவ்வொரு எழுத்தும் சரியாக உள்ளது என்று உங்களால் சொல்லமுடியாது, இப்போது நம் கையில் இருக்கும் குர்‍ஆனுக்கும், மூல குர்‍ஆனுக்கும் இடையே பல எழுத்து வித்தியாசங்கள் உள்ளன.

இந்த கட்டுரைக்கு சம்மந்தப்பட்டு பிஜே அவர்கள் மேற்கோள் காட்டிய இரண்டு பிழைகளை மட்டுமே உங்களுக்காக தருகிறேன், அதாவது குர்‍ஆனில் இருக்கும் எழுத்து பிழைகளை சரி செய்ய, சரியான எழுத்தை சிறிய அளவில் பிழையான எழுத்துக்கு மேலே குறிப்பிட்டு உள்ளனர். இதனை பிஜே அவர்கள் தன் மொழிப்பெயர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். பிஜே அவர்கள் கீழே உள்ள விவரங்களில் குறிப்பிட்டு இருப்பது, அரபி எழுத்துக்களில் ஏற்பட்ட வளர்ச்சி சம்மந்தப்பட்ட பிழைகள் இல்லை, அவைகள், எழுத்துப்பிழைகள் ஆகும். குர்‍ஆன் பிரதியை எடுக்கும் போது தவறுதலாக மனிதர்களால் செய்யப்பட்ட பிழைகள்(Scribal Errors) ஆகும்.

குர்‍ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு, எழுத்துப் பிழைகள்

…இது தவிர இரண்டு இடங்களில் எழுத்தே மாற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம். 2:245 வது வசனத்தில் என்று எழுதுவதற்கு பதிலாக என்று எழுதியுள்ளார்கள். 'ஸீன்' என்ற எழுத்தை எழுதுவதற்கு பதிலாக "ஸாத்" என்ற எழுத்தை எழுதியுள்ளனர்.ஸாத் இடம் பெற்றால் அதற்கு அர்த்தம் வராது. எனவே அந்தத் தவறை அப்படியே எழுதி ஸாத் என்ற எழுத்தின் மீது ஒரு சிறிய அளவில் ஸீனை எழுதி அடையாளம் காட்டியுள்ளனர்….

Source: http://www.onlinepj.com/qvaralaru/vralaru24.htm

Bold and underline added

முடிவுரை: இனி முஸ்லீம்கள், முகமதுவிற்கு இறக்கப்பட்ட குர்‍ஆனில் எப்படி ஒவ்வொரு எழுத்தும், அதன் உறுப்பும் இருந்ததோ, அதே போல இன்று நம்முடைய கைகளில் உள்ள குர்‍ஆனும் உள்ளது என்றுச் சொல்வதை நிறுத்திவிடுங்கள். உலகமனைத்திலும் உள்ள முஸ்லீம்கள் எழுத்துப் பிழைகள் (Scribal Errors) உள்ள அரபி குர்‍ஆனையே தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு படித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

ஒரு சிறிய குறிப்பை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன், நான் ஆன்சரிங் இஸ்லாம் தள ஆங்கில கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து பதிக்கிறேன், அதே நேரத்தில் நானும் தனியாக ஒரு சில கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருக்கிறேன், ஆனால், என் தள பெயரோ அல்லது ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள பெயரோ குறிப்பிடாமல், ஏன் சத்தியவான் என்று வெறு ஒரு தளத்தின் பெயரை குறிப்பிடுகிறீர்கள். பல கிறிஸ்தவர்கள் என் கட்டுரைகளை தங்கள் தளத்தில் பதிக்கிறார்கள். அப்படி இவரும் செய்கிறார், அவ்வளவு தான். நான் எழுதும் கட்டுரைகளை அவர் தளத்தில் பதிக்கும் படி நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர் பதிக்கிறார். எனவே, நான் எழுதும் கட்டுரைகளுக்கு மொழிபெயர்ப்பிற்கு கேள்விகள் என்னிடம் நேரடியாக கேட்கவும். நான் வேறு அவர் வேறு. என் எழுத்துக்களையும், அவர் எழுதும் எழுத்துக்களையும் சோதித்துப் பார்த்து, இரண்டு பேரும் ஒருவர் அல்ல என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு மொழி நடை இருக்கும். ஒவ்வொருவரும் ஒரு சில வார்த்தைகளை அதிகமாக ஒரே விதத்தில் பயன்படுத்துவார்கள், இதைக் கொண்டு நீங்கள் கண்டுபிடிக்கலாம். என்னுடைய மற்றும் அவருடைய ஒரு சில கட்டுரைகளின் மொழிநடையை ஒப்பிட்டுப் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

குர்‍ஆன் சம்மந்தப்பட்ட இதர கட்டுரைகள்:

குர்‍ஆன் பாதுகாக்கப்பட்டதா? (Is the Quran Preserved?)
பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! (Quran or Qurans?!)
குர்‍ஆனில் உள்ள எழுத்துப்பிழைகள் (Scribal Errors in the Quran)
பல விதமான அரபி குர்‍ஆன்கள் (THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR'AN)
சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் ஒப்பீடு (சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு)
 

Saturday, August 16, 2008

முகமது நம்பத்தகுந்தவரா? ( Al-Amin - Trustworthy?) - Part 1

முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்)

உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர் 

சாம் ஷமான் 

Muhammad as Al-Amin (the Trustworthy)

How His Enemies Really Viewed Him

 Sam Shamoun

இஸ்லாமுக்காக‌ வாதம் புரிப‌வ‌ர்க‌ள், த‌ங்க‌ள் தீர்க்க‌த‌ரிசியின் நேர்மையைப் ப‌ற்றி விவ‌ரிக்கும் போது அடிக்க‌டி மேற்கோள் காட்டுவ‌து, முக‌ம‌துவிற்கு அல்-அமின்(Al-Amin or Al-Ameen) என்ற‌ பெய‌ர் கொடுக்கப்பட்டு இருந்தது என்பதைப் பற்றியதாகும். அல்-அமின் என்றால், "நம்பத்தகுந்தவர்" என்று பொருளாகும், மற்றும் இந்த பட்டப்பெயர் முகமதுவிற்கு அவரின் உறவினர்கள் அவர் இறைவனின் ஊழியத்திற்கு வருவதற்கு முன்பாக கொடுத்து இருந்தார்கள் என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். முகமதுவின் கால மக்களில் இவர் மிகவும் நம்பத்தகுந்த நபராக இருந்தார் என்றும், மற்றும் இவர் ஒரு பொய்யையும் சொல்லாதவராக இருந்தார் என்பதால் இவருக்கு அல்-அமின் என்ற பட்டப்பெயரை அம்மக்கள் இவருக்கு கொடுத்தார்கள் என்று இஸ்லாமியர்கள் வாதம் புரிவார்கள். இந்த வாதத்திற்கு கீழ் கண்ட ஹதீஸ் ஆதாரமாக தரப்பட்டுள்ளது:

'...அவர் இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?' என்றார் [ஹெர்குலிஸ்]. நான் இல்லை என்றேன். 'அவர் வாக்கு மீறியது உண்டா?' என்றார். (இதுவரை) இல்லை என்று சொல்லிவிட்டு, நாங்கள் இப்போது அவருடன் ஓர் உடன் படிக்கை செய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பது எங்களுக்குத் தெரியாது என்றேன். ………. இவ்வாதத்தைச் செய்வதற்கு முன் அவர் பொய் சொல்வதாக நீங்கள் அவரைச் சந்தேகித்ததுண்டா? என்று உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். மக்களிடம் பொய் சொல்லத் துணியாத ஒருவர் இறைவன் மீது பொய்யுரைக்கத் துணியமாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன். …. அவர் (எப்போதேனும்) வாக்கு மீறியதுண்டா? என உம்மிடம் நான் கேட்டபோது, இல்லை என்றீர். (இறைவனின்) திருத்தூதர்கள் அப்படித்தான் வாக்கு மீற மாட்டார்கள். ( பாகம் 1, அத்தியாயம் 1, எண் 7 )

ஆங்கிலத்தில்:

"… He [Heraclius] said, 'Had you ever blamed him for telling lies before he claimed what he claimed?' I replied, 'No.' … He said, 'Does he break his promises?' I replied, 'No, but we are now at truce with him and we are afraid that he may betray us.' … . 'When I asked you whether he was ever blamed for telling lies, your reply was in the negative, so I took it for granted that a person who did not tell a lie about (others) the people could never tell a lie about Allah. I asked you whether he had ever broken his promise. You replied in the negative. And such are the apostles; they never break their promises…'" (Sahih al-Bukhari, Volume 4, Book 52,
Number 191)

இங்கே, முகமதுவின் எதிரியாக இருந்த அபு சுஃப்யான் என்பவர், பைஜான்டியம் ஆளுநரான ஹெர்குலிஸ் என்பவரை சந்தித்து பேசும் போது, முகமது ஒரு முறையும் பொய் சொல்லவில்லை மற்றும் அவர் தன் வாக்குறுதியை எப்போதும் காப்பவராக இருக்கிறார் என்று ஒத்துக் கொண்டதாக, மேலே உள்ள ஹதீஸ் கூறுகிறது.

முஸ்லீம்கள் மேற்கோள் காட்டும் இன்னொரு விவ‌ரமும் உண்டு, அதாவது, இஸ்லாமில் நம்பிக்கையில்லாதவர்களும்(unbelievers) முகமது ஒரு முறையும் யாரிடமும் பொய் சொல்லவில்லை என்பதை ஒத்துக்கொண்டதாக உள்ள ஹதீஸாகும்.

இபின் அப்பாஸின் அதிகார பூர்வமான ஹதீஸாக அறிவிக்கப் பட்டது என்னவென்றால், "உன் உறவினர்களை எச்சரிப்பாயாக(மற்றும் அவர்களிடம் உள்ள ஒருசில குழுவினருக்கு எச்சரிப்பாயாக)" என்ற வசனம் இறங்கியப் போது, அல்லாவின் நபி(அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவர்கள், சபா(Safa)வின் மிது ஏறி, உரத்த சத்தமாக கூப்பிட்டார்கள்: உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றார். இப்படி சத்தமாக கூப்பிடுவது யார் என்று அவர்கள் கேட்டார்கள். முகமது என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் அவரிடம் வந்தார்கள், மற்றும் அவர்: ஓ இன்னாருடைய மகன்களே, இன்னார் இன்னாருடையை மகன்களே, ஓ அப்த் மனஃபு உடைய மகன்களே, ஓ அப்த் அல் முத்தாலிஃப் உடைய மகன்களே, என்று அழைத்தார், அவர்கள் அனைவரும் அவரைச் சுற்றி வந்தார்கள். அவர்(நபி):ஒருவேளை இந்த மலையின் அடிவாரத்தில் குதிரை வீரர்கள் நம்மை நோக்கி வந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று நான் சொன்னால், என்னை நீங்கள் நம்புவீர்களா? என்று கேட்டார். அதற்கு அவர்கள் மறுமொழியாக: உங்களிடம் நாங்கள் எப்போதும் ஒரு பொய்யையும் காணவில்லை என்றுச் சொன்னார்கள். அவர் சொன்னார்: நல்லது, வரப்போகும் மிகக்கொடுமையான ஆபத்தைக் குறித்து நான் உங்களை எச்சரிக்கிறேன். இந்த ஹதீஸை சொன்னவர் கூறினார், இதற்கு அபு லஹாப் கூறினார்: உனக்கு அழிவு உண்டாகட்டும்! இதற்காகவா எங்களை இங்கு கூட்டிச் சேர்த்தாய்? அவர்(பரிசுத்த நபி) எழுந்து நின்றார், அப்போது இந்த வசனம் இறங்கியது, "அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும் (111:1)". அமாஸ் இந்த வசனத்தை சூராவின் கடைசியில் வாசித்தார். (Sahih Muslim, Book 001, Number 0406 In English)

மேலே கண்ட உரையாடல் அல்லது நிகழ்ச்சி முகமது ஒரு நேர்மையானவர் என்பதற்கு ஆதாரம் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள்(*). இறைவன் தன் நபியாக அல்லது தூதுவராக அனுப்பினார் என்று ஒரு பொய்யான வாதத்தை முகமது முன்வைக்க மாட்டார் என்று நம்புவதற்கு மேற்கண்ட ஹதீஸ் ஆதாரம் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள்.

முஸ்லீம்களின் இந்த வாதத்தில் அனேக பிரச்சனைகள் உள்ளன. குறைந்த பட்சமாக முகமதுவின் காலத்தவர்கள் தங்கள் கைப்பட எழுதி வைத்த(No Written Records) ஒரு ஆதாரமும் இப்போது நம்மிடம் இல்லை. இந்த ஹதீஸ்கள் அனைத்தும் முஸ்லீம்களால் எழுதப்பட்டது, இன்னும் சொல்லப் போனால், முகமதுவின் மரணத்திற்கு பிறகு பல ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்டது.

மேலும், இந்த இஸ்லாமிய விவரங்கள் சந்தேகத்திற்கு உரியவைகள் ஏனென்றால், முஸ்லீம்கள் க‌தைகளை இட்டுக் கட்டி தங்கள் நபி மிகவும் நல்லவராக காட்டுவதற்கு இப்படி செய்கிறார்கள். குர்‍ஆன் முகமதுவை எப்படி காட்டுகிறதோ அதை விட நல்லவராக காட்டுவதற்கு முஸ்லீம்கள் முயற்சி செய்கிறார்கள்! ஆகையால், முகமதுவின் எதிரிகள் அவருடைய நடத்தையைப் பற்றி மிகவும் புகழ்ந்தும், அவருடைய நேர்மையைப் ப‌ற்றி புகழ்ந்தும் பேசுவதாக இருக்கும் இந்த விவரங்கள் பற்றி நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இதற்கும் மேலாக, ஓயாமல் முஸ்லீம்கள் சொல்லிக்கொண்டு இருக்கும் இப்படிப்பட்ட கதைகளுக்கு எதிர்மறையாக குர்‍ஆன் சாட்சி சொல்கிறது. அதாவது, குர்‍ஆன் முஸ்லீம் அல்லாதவர்களின் வார்த்தைகளை பதிவு செய்து தன்னிடம் வைத்துள்ளது.

(நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லலவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். குர்‍ஆன் 6:33

உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால் எனது செயல் எனக்கு; உங்கள் செயல் உங்களுக்கு. நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள்; நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகியவன் என்று கூறுவீராக. குர்‍ஆன் 10:41

(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர். குர்‍ஆன் 15:6

(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) "நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்" என்று அவர்கள் கூறுகிறார்கள்; எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள். குர்‍ஆன் 16:101

"இன்னும்; இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார் இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர் ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள். இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; "இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் - ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன." (நபியே!) "வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்" என்று கூறுவீராக! குர்‍ஆன் 25:4-6

இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும். குர்‍ஆன் 35:4

ஆனால், இவைகள் அனைத்தும் முஸ்லீமல்லாதவர்களால சொல்லப்பட்ட பொய்யான கூற்றுக்கள் என்று முஸ்லீம்கள் இந்த வசனங்களை ஒதுக்கிவிடுவார்கள். இப்படி முஸ்லீம்கள் சொல்வதினால், அவர்கள் வாதங்களில் உள்ள முரண்பாட்டை(inconsistency) இது காட்டுகிறது. ஆனால், உண்மையில் இதே முஸ்லீம்கள் தான் "முகமதுவின் நேர்மையை நிருபிப்பதற்கு முஸ்லீம்களல்லாதவர்களின் கூற்றுகளை ஆதாரங்களாக காட்டி முயற்சி எடுத்துக்கொண்டு இருப்பது" (After all, they are the ones appealing to the statements of the disbelievers to prove that Muhammad was a trustworthy person).

ஒரு வேளை, முஸ்லீம் அல்லாதவர்களின்(Unbelievers) சாட்சி/கூற்று முகமது ஒரு நேர்மையானவர் என்பதை நிருபிக்க போதுமானதாக‌ இருக்கிறது என்று முஸ்லீம்கள் சொல்லும் போது, அதே முஸ்லீம் அல்லாதவர்களின் சாட்சி/கூற்று முகமதுவின் நடத்தையை கேள்விக்குரியதாக்க போதுமானதாக இருக்கிறது என்று நம்பலாம் அல்லவா? இது எப்படி உள்ளதென்றால், கூழும் குடிக்கனும், மீசையிலும் ஒட்டக்கூடாது என்றுச் சொல்வது போல முஸ்லீம்களின் கூற்று இருப்பது மிகவும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது (But if their testimony is reliable enough to support Muhammad's integrity then the unbelievers are also a good enough source to call his character into question. It is apparent that the Muslims want to have their cake and eat it too).

சில நேரங்களின் முஸ்லீம்கள் கீழ் கண்டவாறுச் சொல்லி திருப்தி அடைவார்கள், அதாவது, "முகமதுவைப் பற்றி நம்பிக்கை இல்லாதவர்கள் என்ன சொன்னார்களோ அதே போலத் தான் மற்ற நபிகள் மற்றும் தூதர்கள் பற்றியும் நம்பிக்கை இல்லாதவர்கள் சொன்னார்கள் என்று குர்‍ஆன் சொல்கிறது என்பார்கள் முஸ்லீம்கள். ஆனால், இதனை மட்டும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் நம்ப மாட்டார்கள் என்று முஸ்லீம்கள் சொல்வார்கள். முஸ்லீம்களின் இந்த கருத்து மிகவும் தவறானது, இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன:

முதலாவதாக, பைபிளின் நபிகளுக்கும், தூதர்களுக்கும் தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களைச் செய்யும்படிச் செய்து, அவர்கள் தனக்கு பதிலாக பேச அனுப்பப்பட்ட நபிகள் என்று வலுவான ஆதாரங்களோடு நிருபித்தார். இதன் காரணத்தினால், நம்பிக்கயில்லாதவர்களின் கூற்றுக்கள் பொய் என்று நிருபனமாகிறது. இதற்கு எதிர்மறையாக, முகமது, தான் இறைவனால் அனுப்பப்பட்டவர் தான் என்பதை நிருபிக்கும் படி ஒரு அற்புதமும் செய்துக்காட்ட முடியாமல், தன் நபித்துவத்தை நிருபித்துக்கொள்வதில் தோல்வி அடைந்துவிட்டார் (Muhammad, on the other hand, failed to provide any supernatural confirmation that he was speaking on behalf of God).

இரண்டாவதாக, இப்போது பிரச்சனை என்னவென்றால், "நம்பிக்கை இல்லாதவர்கள் சொன்னது சரியானதா என்பதல்ல, அதற்கு மாறாக, நம்பிக்கை இல்லாதவர்கள் முகமதுவின் நேர்மையைப் புகழ்ந்தார்கள் என்று சொல்லும் முஸ்லீம்களின் வாதம் உண்மையானதா என்பதாகும்". குர்‍ஆன் சாட்சி சொல்வது போல, நம்பிக்கை இல்லாதவர்களின் கூற்று உண்மையாகவே, முகமதுவை மட்டுப்படுத்தவதாகவே இருந்தது. (Secondly, the issue here is not whether what the unbelievers said was correct, but whether the Muslim assertion that even the disbelievers praised Muhammad's honesty is true. As the Quran testifies, their comments were anything but flattering to Muhammad.)


மிகவும் முக்கியமாக, முகமது ஒரு நம்பத்தகுந்தவர் அல்ல என்றும் மற்றும் நேர்மையற்றவர் என்றும் தெரிந்துக்கொள்வதற்கு இஸ்லாமிய விவரங்கள்/ஹதீஸ்கள் போதுமான நம்பத்தகுந்த‌ ஆதாரங்களாக உள்ளன. முஸ்லீம்கள் நினைப்பது போல‌ முகமது ஒன்றும் நேர்மையின் நன்னடத்தையின் கலங்கரை விளக்கு அல்ல (He wasn't the beacon of virtue and honesty that Muslims make him out to be).

ஒரு எடுத்துக் காட்டுக்காகச் சொல்ல வேண்டுமானால், முகமது பொய் கூட சொல்வார், மற்றும் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்காக தன்னை பின் பற்றுபவர்கள் பொய் சொல்லவும் அவர் அனுமதி அளித்துள்ளார்.

பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4037

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாரயிருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்" என்று கூறினார்கள். உடனே முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி) எழுந்து, 'நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? இறைத்தூதர் அவர்களே!" என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்" என்று பதிலளித்தார்கள். உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறைகூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்" என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(சரி) சொல்" என்றார்கள்.(Muhammad bin Maslama said, "Then allow me to say a (false) thing (i.e. to deceive Kab)." The Prophet said, "You may say it.") …… ….
….

அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) (தம் சகாக்களிடம்), 'கஅப் இப்னு அஷ்ரஃப் வந்தால் நான் அவனுடைய (தலை) முடியை பற்றியிழுத்து அதை நுகருவேன். அவனுடைய தலையை என்னுடைய பிடியில் கொண்டு வந்துவிட்டேன் என்று நீங்கள் கண்டால் (அதை சைகையாக எடுத்துக் கொண்டு) அவனைப் பிடித்து (வாளால்) வெட்டி விடுங்கள்" என்று (உபாயம்) கூறினார்கள்.

பிறகு கஅப் இப்னு அஷ்ரஃப் (தன்னுடைய ஆடை அணிகலன்களை) அணிந்து கொண்டு நறுமணம் கமழ இறங்கி வந்தான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'இன்று போல் நான் எந்த உயர்ந்த நறுமணத்தையும் (நுகர்ந்து) பார்த்ததில்லை" என்று கூறினார்கள்"

மேலும், முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி), '(கஅபை நோக்கி) உன் தலையை நுகர்ந்து பார்க்க என்னை அனுமதிக்கிறாயா?' என்று கேட்டார்கள். அவன், 'சரி (நுகர்ந்து பார்)" என்று கூறினான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனுடைய தலையை நுகர்ந்தார்கள். பிறகு தம் சகாக்களையும் நுகரக் கூறினார்கள். '(மீண்டுமொருமுறை நுகர) என்னை அனுமதிக்கிறாயா? என்று கேட்டார்கள். அவன் 'சரி (அனுமதிக்கிறேன்)" என்று கூறினான். முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது, 'பிடியுங்கள்" என்று கூறினார்கள். உடனே (அவர்களின் சகாக்கள்) அவனைக் கொன்றுவிட்டனர். பிறகு அவர்கள் (அனைவரும்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தனர். (Sahih al-Bukhari, Volume 5, Book 59,
Number 369 in English)

மற்றும்

கெய்பர் கைப்பற்றப்பட்டபிறகு, 'அல் ஹஜ்ஜஜ் பி. இலத் அல் சலாமி' என்ற அல் பஹ்ஜ் என்ற இனத்தைச் சார்ந்தவர், நபியவர்களிடம் வந்து, 'என் மனைவியிடம்(உம் ஷய்பா டி அபூ தல்ஹா) என் பணம் உள்ளது, (இவர்கள் இருவருக்கு முரத் என்ற மகனுண்டு). மக்காவிலுள்ள வியாபாரிகளிடம் எங்கள் பணம் உள்ளது, எனவே மக்காவிற்குச் சென்று அப்பணத்தை பெற்றுக்கொண்டு திரும்ப அனுமதி கொடுங்கள் என்று கேட்டார். அனுமதி பெற்றுக்கொண்டு, மறுபடியும் இவர் நபியவர்களிடம் "நான் பொய் சொல்லியாக வேண்டும்" என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் 'அவர்களிடம் சொல்" என்றுச் சொன்னார். அல் ஹஜ்ஜஜ் கூறினார், 'நான் மக்காவிற்குச் சென்றேன், அல்பைதா என்ற இடத்தில் சில குவாரிஸ் மக்கள் கெய்பருக்கு நபி சென்றாரே, அவர் எப்படி உள்ளார் என்று என்னிடம் கேட்க ஆரம்பித்தார்கள். ஹிரஜ் என்ற பட்டணம் மிகவும் முக்கியமான பட்டணம் என்றும், அதிக ஜனத்தொகையுள்ள மற்றும் அதிக பாதுகாப்புள்ள பட்டணம் என்றும் அவர்களுக்குத் தெரியும், எனவே, அவ்வழியே செல்லும் வழிப்போக்கர்களிடம் ஏதாவது செய்தி கிடைக்குமா என்று கேட்டுக்கொண்டு இருந்தார்கள். நான் ஒரு முஸ்லீம் என்று அவர்களுக்குத் தெரியாது, எனவே என்னை அவர்கள் கண்ட போது, என்னிடம், "இவர் அல் ஹஜ்ஜஜ் பி.இலத் தானே, கண்டிப்பாக இவரிடம் ஏதாவது ஒரு செய்தி இருக்கும். எங்களிடம் சொல்லவும், ஓ அபூ முஹம்மதே, அந்த வழிப்பறி கொள்ளைக்காரன்(highwayman) யூதர்களின் மற்றும் தோட்டங்களுள்ள ஹிரஜ் என்ற பட்டணத்திற்கு சென்றான் என்று கேள்விப்பட்டோம்". நான் "நீங்கள் சந்தோஷப்படும் ஒரு செய்தியை நான் கேள்விப்பட்டுள்ளேன்" என்றேன். என் ஒட்டகத்தின் இருபுறங்களிலும் அவர்கள் ஆர்வத்துடன் வந்து, "சொல் ஹஜ்ஜஜ்" என்றார்கள். நான் கூறினேன், "இதுவரை நீங்கள் கேள்விப்படாத அளவிற்கு அவர் தோல்வியை சந்தித்தார் மற்றும் அவருடைய சக தோழர்கள் வெட்டப்பட்டு மரித்தார்கள்; அவர் எப்படி பிடிக்கப்பட்டாரோ அதை நீங்கள் இதுவரை கேள்விப்பட்டு இருக்கமாட்டீர்கள்". கெய்பரின் மக்கள், "நாம் இவரை கொல்லகூடாது, இவரை மக்கா மக்களிடம் அனுப்புவோம், இவர் கொன்ற மக்கா மக்களுக்கு பழிக்கு பழியாக அவர்களே இவரை கொல்ல‌ட்டும்" என்று கூறினார்கள். அவர்கள் எழுந்து மக்கா மக்களுக்கு சத்தமாக சொன்னதாவது, "இதோ ஒரு செய்தி உங்களுக்கு, முகமது இங்கு அனுப்பும் வரைக்கும் நீங்கள் காத்திருங்கள், பிறகு உங்கள் மத்தியில் அவரை கொல்லலாம்". நான் "என் பணத்தையும், எனக்கு வரவேண்டிய தொகையையும் நான் வசூல் செய்துக்கொள்ள எனக்கு உதவி செய்யுங்கள், வியாபாரிகள் அங்கு செல்வதற்கு முன்பு நான் மறுபடியும் கெய்பருக்குச் சென்று, முகமது மற்றும் அவரது தொழர்களிடமிருந்து தப்பித்தவர்களை பற்றிக்கொண்டு இருக்க எனக்கு உதவி செய்யுங்கள் என்றேன்". அவ‌ர்க‌ள் எழுந்திருந்து என்னுடைய‌ ப‌ண‌ம் அனைத்தையும் வ‌சூல் செய்தார்க‌ள், நான் வ‌சூல் செய்து இருந்தாலும் இவ்வ‌ள‌வு சீக்கிர‌த்தில் என் வேலை முடிந்திருக்காது. நான் என் ம‌னைவியிட‌ன் சென்று அவ‌ளிட‌ம் உள்ள‌ ப‌ண‌த்தையும் பெற்றுக்கொண்டு, நான் கெய்ப‌ருக்குச் சென்று வியாரிக‌ளுக்கு முன்பாக‌ நான் வாங்க‌ வேண்டும் என்றேன். அப்பாஸ் இந்த‌ செய்தியையும், என்னைப் ப‌ற்றியும் கேள்விப்ப‌ட்டு, நான் த‌ங்கியிருந்த‌ வியாபாரிக‌ளின் கூடார‌த்தின் ப‌க்க‌த்தில் வ‌ந்து நின்று என்னிட‌ம் செய்தி என்ன‌ என்று கேட்டார். நான் அவ‌ரிட‌ம் "நீ இர‌க‌சிய‌மாக‌ வைத்திருப்பேன் என்று சொன்னால், ஒரு விஷ‌ய‌த்தை உன்னை ந‌ம்பிச் சொல்கிறேன்" என்றேன். நான் அப்படியே இரகசியமாக வைப்பேன் என்று சொன்னார். நான் இப்போது நீ பார்க்கின்ற படி பணத்தை நான் வசூல் செய்துக்கொண்டு இருக்கிறேன், நான் உன்னை தனிமையில் சந்திக்கும் வரை காத்திரு என்றேன், அவரும் சென்றுவிட்டார். எனக்கு மக்காவில் வரவேண்டிய பணம் அனைத்தையும் நான் வசூல் செய்துவிட்டபிறகு, நான் கெய்பருக்குச் செல்ல முடிவு செய்தபோது, அப்பாஸை சந்தித்து சொன்னதாவது, "நான் சொல்லும் செய்தியை மூன்று நாட்கள் இரகசியமாக வைத்திருந்து, பிறகு நீங்கள் சொல்லலாம், ஏனென்றால் அவர்கள் என்னை பிடித்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன்". அப்பாஸ் அப்படியே நான் செய்கிறேன் என்றுச் சொன்னபோது, நான் சொன்னதாவது, நான் "உன் சகோதரனின் மகன் அந்த அரசனின் மகள் ஷபியாவை திருமணம் செய்துக்கொண்டார், கெய்பர் கைப்பற்றப்பட்டது, அதனுள் இருப்பதெல்லாம் நீக்கப்பட்டது, இப்போது கெய்பர் முகமது மற்றும் அவரது தோழர்களின் சொத்தாக மாறிவிட்டது" என்றுச் சொன்னேன். அவர் கேட்டார் "ஹஜ்ஜஜ் நீ என்ன சொல்கிறாய்?". நான் "ஆமாம், அல்லாவின் உதவியால் நடந்தது. என் இரகசியத்தை காத்துக்கொள்". நானும் ஒரு முஸ்லீம் தான், என்னுடைய பணத்தை வசூல் செய்யவே நான் வந்தேன், என் பணத்தை இவர்கள் எடுத்துக்கொள்வார்கள் என்று பயந்துவந்தேன். மூன்று இரவுகள் கடந்த பின்பு, இந்த செய்தியை மற்றவர்களுக்கு உங்கள் விருப்பப்படி சொல்லலாம் என்றேன். மூன்றாம் நாள் வந்தபோது, அப்பாஸ் தன் மேல் ஷால்வையை போட்டுக்கொண்டு, நறுமனம் பூசிக்கொண்டு மற்றும் தன் தடியை எடுத்துக்கொண்டு, காபாவிடம் சென்று அதை சுற்றினார். மக்கள் அவரைக் கண்டு, அவரிடம், "ஓ அபூ அல்-பதல், இது மிகவும் துரதிஷ்டமானது என்றனர்". அதற்கு அவர், "இல்லை இல்லை, நீங்கள் சத்தியமிடும் அல்லாவின் உதவியோடு, முகமது கெய்பரை கைப்பற்றியுள்ளார், மற்றும் அந்த நாட்டு மன்னரின் மகளையே திருமணம் செய்துள்ளார்" என்றுச் சொன்னார். முகமது அவர்களின் எல்லா சொத்துக்களையும் முடக்கிவிட்டார், இப்போது கெய்பர் முகமது மற்றும் அவரது தோழர்களின் சொத்தாகி விட்டது என்றார். அவர்கள் கேட்டனர், "யார் உனக்கு இந்தச் செய்தியைச் சொன்னது?". அதற்கு அவர் "யார் உங்களுக்கு உங்கள் செய்தியை கொண்டுவந்தார்களோ, அவரே தான் சொன்னார், அவர் ஒரு முஸ்லீமாக இங்கு வந்தார், தன் பணத்தை வசூல் செய்துக்கொண்டார், மற்றும் முகமதுவிடம் அவரது தோழர்களிடம் சேர்ந்துக்கொள்ள மறுபடியும் சென்றுவிட்டார், இனி அவரோடு இருப்பார்" என்றார். அதற்கு அவர்கள், "ஓ அல்லாவின் மக்களே, அல்லாவின் எதிரி தப்பித்துக்கொண்டான். அவன் அப்படிப்பட்டவன் என்று தெரிந்து இருந்தால், வேறு விதமாய் அவரை கவனித்து இருந்திருப்போமே" என்றனர். கடைசியாக ஒரு உண்மைச் செய்தி அவர்களை அடைந்துவிட்டது. (The Life of Muhammad: A Translation of Ibn Ishaq's Sirat Rasul Allah, with introduction and notes by Alfred Guillaume [Oxford University Press, Karachi, Tenth impression 1995], pp. 519-520; capital and underline emphasis ours).

முகமதுவிற்கு தான் செய்த சத்தியத்தை முறித்துக் கொள்ளவும் பிரச்சனை இருந்தது இல்லை:

பாகம் 6, அத்தியாயம் 72, எண் 5518

ஸஹ்தம் இப்னு முளர்ரிப் அல்ஜர்மீ(ரஹ்) கூறினார்

நாங்கள் அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தோம். 'ஜாம்' கூட்டத்தைச் சேர்ந்த எங்களக்கும் இந்த (அல்அரீ) கூட்டத்தாருக்குமிடையே சகோதரத்துவ உறவு (நட்பு) இருந்தது. அப்போது கோழி இறைச்சியுடன் உணவு கொண்டு வரப்பட்டது. மக்களிடையே சிவப்பான மனிதர் ஒருவர் அமர்ந்திருந்தார். (அவரை உணவு உண்ண அபூ மூஸா(ரலி) அழைத்தார்கள்.) ஆனால், அவர் உணவை நெருங்கவில்லை. அப்போது அபூ மூஸா(ரலி), 'அருகில் வாருங்கள் (வந்து சாப்பிடுங்கள்). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இதைச் சாப்பிட நான் கண்டுள்ளேன்' என்று கூறினார்கள்.

அதற்கு அம்மனிதர், 'இந்தக் கோழி (இனம், அசுத்தம்) எதையோ தின்பதை பார்த்தேன். அது எனக்கு அருவருப்பை உண்டாக்கவே 'இதை இனிமேல் உண்ணமாட்டேன்' என்று சத்தியம் செய்து விட்டேன்' என்று கூறினார்.

அதற்கு அபூ மூஸா(ரலி) 'அருகில் வாருங்கள்; உங்களுக்கு (விவரமாக)த் தெரிவிக்கிறேன்' என்று கூறி(விட்டுப் பின் வருமாறு சொன்)னார்கள்: நான் நபி(ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் சென்றேன். அப்போது அவர்கள் சினத்துடன் இருந்தார்கள். தர்ம ஒட்டகங்களை அவர்கள் பங்கிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது எங்களை(யும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி அவர்களிடம் நாங்கள் வேண்டினோம். அப்போது அவர்கள் 'உங்களைச் சுமந்து செல்ல ஒட்டகங்கள் தர மாட்டேன்' என்று சத்தியம் செய்தார்கள். மேலும், 'உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் (தற்போது கைவசம்) இல்லை' என்று கூறினார்கள்.

(சிறிது நேரத்திற்குப்) பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த சில ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. உடனே (எங்களைக் குறித்து) 'அஷ்அரீ குலத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே? அஷ்அரீ குலத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே?' என்று (இரண்டு முறை) கேட்டுவிட்டு, (நாங்கள் வந்தபோது) எங்களுக்கு வெள்ளைத் திமில்கள் கொண்ட ஐந்து ஒட்டக மந்தைகளை வழங்கினார்கள்.

நாங்கள் சிறிது நேரமே (அங்கு) இருந்திப்போம். அப்போது நான் என் தோழர்களிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நாம் ஏறிச் செல்ல ஒட்டகம் தர மாட்டேன் என்று செய்த) தம் சத்தியத்தை மறந்து விட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நாம் இறைத்தூதர்(ஸல்) அவர்களை, அவர்கள் செய்த சத்தியத்திலிருந்து கவனத்தைத் திருப்பியிருந்தால் நாம் ஒருபோதும் வெற்றியடைய மாட்டோம்' என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் திரும்பி வந்தோம். அப்போது நாங்கள் திரும்பி வந்தோம். அப்போது நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஏறிச் செல்வதற்காகத் தங்களிடம் ஒட்டகம் கேட்டோம். அப்போது தாங்கள், எங்களை ஏற்றிச் செல்லும் ஒட்டகம் தரமாட்டேன் என்று சத்தியம் செய்தீர்கள். (ஆனால், பிறகு போரில் கிடைத்த ஒட்டகங்களை எங்களுக்குத் தந்தீர்கள்.) எனவே, நீங்கள் உங்களின் சத்தியத்தை மறந்துவிட்டீர்கள் என்று நாங்கள் எண்ணினோம்' என்று சொன்னோம்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வே உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பிடச் செய்தான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனி எந்த ஒன்றுக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாததை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்து அதற்காகப் பரிகாரமும் செய்துவிடுவேன்' என்று கூறினார்கள்.37 (Sahih al-Bukhari, Volume 7, Book 67,
Number 427 in English)

முகமது, தன்னை பின் பற்றுகிறவர்கள் தாங்கள் செய்த சத்தியத்தையும் முறித்துக் கொள்ளவும் அனுமதி அளித்தார்:

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6722

அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) 'ஆட்சிப் பொறுப்பை நீயாக (விரும்பிக்) கேட்காதே! ஏனெனில், நீ கேட்காமல் அது உனக்கு வழங்கப்பட்டால், அது தொடர்பாக உனக்கு (இறைவனது) உதவி அளிக்கப்படும். (நீ) கேட்டதால் அது உனக்கு வழங்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவனது உதவி கிட்டாது.) நீ ஒரு சத்தியம் செய்து, அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் செய்துவிட்டு, உன்னுடைய சத்தியத்(தை முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்து விடு' என்று கூறினார்கள்.22

இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது... (Sahih al-Bukhari, Volume 9, Book 89,
Number 260 in English)

ஒரு நபர்(ஆணோ/பெண்ணோ) மற்றவர்களை ஏமாற்றுவதை அனுமதித்து, மற்றும் முன்பு இருந்ததை விட மிகவும் மேலானது தனக்கு கிடைத்தவுடன் முன்பு செய்த சத்தியத்தை முறித்து விடும் நபர் ஒரு நேர்மையானவரா அல்லது நம்பத் தகுந்தவரா சொல்லுங்கள்? இப்படிப்பட்ட நபர்(ஆணோ/பெண்ணோ) மீது நம்பிக்கை கொள்ளமுடியாது. ஏனென்றால், இவர் உண்மையைத் தான் சொல்கிறாரா அல்லது நேரத்திற்கு ஏற்றது போல தன் சத்தியத்தை மாற்றிக் கொள்வாரா என்று தெரியாத போது எப்படி அவர் மீது நம்பிக்கை கொள்ள முடியும்?

முடிவாக, அடுத்து நாம் பார்க்கப்போவது, முகமது ஒரு நம்பத் தகுந்தவர் அல்ல என்பதை நிருபிக்கும் விவரங்களாகும்.

முஸ்லீம்கள் முகமதுவை மிகவும் நல்லவராக காட்டுவதற்கு பல கவர்ச்சிகரமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட கதைகளை தயாரிக்கிறார்கள். முகமதுவை மிகவும் எதிர்மறையாக காட்டும் கதைகளை அவர்கள் தயாரிப்பதில்லை. ஆனால், உண்மையில், முகமதுவின் நடத்தைப் பற்றி மிகவும் தரம்குறைவாக உள்ள விவரங்கள், அவரது நடத்தையை சரியாகக் காட்டும் விவரங்களாக அவர்களுக்கு காணப்படுகிறது, எப்போது? அவ்விவரங்களில் உள்ள சில எதிர்மறையான வாக்கியங்களை ஒதுக்கிவிடும் போது(In fact, the reports which reflect poorly on Muhammad's character have a greater chance of being true precisely because the Muslim tendency was/is to portray him in a more favorable manner while omitting any negative statements).

இதில் மிகவும் தர்மசங்கடமான விவரம் என்னவென்றால், "முகமது நபியாக மாறுவதற்கு முன்பாக நேர்மையானவர் என்று பெயர் பெற்று இருந்தார் என்று முஸ்லீம்கள் சொல்வது உண்மையானால், அவர் நபியாக மாறிய பிறகு அவரிடம் இருந்த நேர்மையை விட, அதற்கு முன்பாக அவரிடம் அதிகமாக நேர்மை இருந்ததாக அர்த்தமாகிறது".

What makes this rather ironic is that if this Muslim assertion is true, that Muhammad was known for being trustworthy prior to his prophethood, this means that he was more honest before he became a "prophet" than afterwards!


நாம் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் மேற்கோள் காட்டிய ஹதீஸை நம் நினைவிற்கு கொண்டு வருவோம். இந்த ஹதீஸில் ஹெர்குலிஸ் அரசர் அபூ சுஃப்யானிடம் முகமது பொய் சொல்லியுள்ளாரா? அல்லது தன் உறுதிமொழியை முறித்துக் கொண்டுள்ளாரா? என்று கேள்விகள் கேட்டுள்ளார். இந்த ஹதீஸின் இன்னொரு தொகுப்பைக்(another version) காண்போம்:

பாகம் 1, அத்தியாயம் 1, எண் 7

….. 'அவர் இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?' என்றார். நான் இல்லை என்றேன்.

'அவர் வாக்கு மீறியது உண்டா?' என்றார். (இதுவரை) இல்லை என்று சொல்லிவிட்டு, நாங்கள் இப்போது அவருடன் ஓர் உடன் படிக்கை செய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பது எங்களுக்குத் தெரியாது என்றேன். அப்போதைக்கு (நபி(ஸல்) மீது குறை கற்பிக்க) அந்த வார்த்தையைவிட்டால் வேறு எந்த வார்த்தையையும் என்னுடைய பதிலில் நுழைத்திட எனக்கு வாய்ப்பில்லை! ..... இவ்வாதத்தைச் செய்வதற்கு முன் அவர் பொய் சொல்வதாக நீங்கள் அவரைச் சந்தேகித்ததுண்டா? என்று உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். மக்களிடம் பொய் சொல்லத் துணியாத ஒருவர் இறைவன் முது பொய்யுரைக்கத் துணிய மாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன்.

"… Heraclius said, 'Have you ever accused him of telling lies before his claim (to be a Prophet)?' I replied, 'No.'
Heraclius said, 'Does he break his promises?'
I replied, 'No. We are at truce with him but we do not know what he will do in it.' I could not find opportunity to say anything against him except that… 'I further asked whether he was ever accused of telling lies before he said what he said, and your reply was in the negative. So I wondered how a person who does not tell a lie about others could ever tell a lie about Allah.'" (Sahih al-Bukhari, Volume 1, Book 1,
Number 6)

நாம் மேலே பதித்த இந்த ஹதீஸ் முகமது பொய்யும் சொல்ல வில்லை மற்றும் தன் உறுதி மொழியையும் மீறவில்லை என்று பார்க்கிறோம். மட்டுமல்ல, அபூ சுஃப்யான் என்பவர் கூட, முகமது பொய் சொல்லவில்லை, வாக்கு மாறவில்லை என்றுச் சொல்கிறார்! ஆக, முகமதுவை இன்னும் நேர்மையாவராகவும் நம்பத் தகுந்தவராகவும் மாற்றுவதற்கு பதிலாக, அல்லா அவரை தீயவராகவும் மற்றும் நம்பத் தகாதவராகவும் மாற்றியுள்ளார். குர்‍ஆன் அல்லாவின் வார்த்தை என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள், ஆனால், உண்மையில் சொல்ல வேண்டுமானால், முகமது பொய் சொல்லவும் தன் வாக்குறுதியை மீறவும் செய்தவர் அல்லா தான்.

நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான், மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும், அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன். குர்‍ஆன் 66:1-2

மற்றும்:

முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்;. அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது. குர்‍ஆன் 3:28

இவ்வசனத்திற்கு புகழ்பெற்ற சுன்னி உரையாளர் இபின் கதிர் கீழ் கண்டவாறு பொருள் கூறுகிறார்:

நம்பிக்கையில்லாதவர்களோடு நட்புறவு கொள்ளக்கூடாது என்ற தடை:

இஸ்லாமின் மீது நம்பிக்கைக் கொள்ளாதவர்களோடு, முஸ்லீம்கள் நண்பர்களாக்கிக் கொள்ளக் கூடாது என்று அல்லா தடை செய்துள்ளார், அல்லது முஸ்லீம்களோடு அல்லாமல் நம்பிக்கையில்லாதவர்களோடு நெருங்கிய நட்பை கொள்ளக்கூடாது என்று அல்லா தடை செய்துள்ளார். இப்படிப்பட்ட செயல்களுக்கு எதிராக அல்லா தன் எச்சரிப்பை கீழ்கண்ட வசனம் மூலமாக தெரிவிக்கிறார்.

<And whoever does that, will never be helped by Allah in any way> இதன் பொருள், அல்லா தடை செய்ததை யார் மீறுகிறார்களோ அவர்களை அல்லாவும் தள்ளிவிடுவார். இதே போல அல்லா சொல்கிறார்...

<ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக் காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்;> மற்றும்…

<உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர் வழியை திட்டமாக தவற விட்டு விட்டார>[60:1]. அல்லா சொல்கிறார் ….

<முஃமின்களே ! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கிக் தரவிரும்புகிறீர்களா?>[4:144],

மற்றும் …

<முஃமின்களே ! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்ட மாட்டான்.>[5:51].

நம்பிக்கையாளர்கள் மற்ற நம்பிக்கையாளர்களாகிய முஹாஜிரின், அன்சார் மற்றும் பெடோயின் போன்றவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததை குறிப்பிட்டு, அல்லா சொல்கிறார்...

<நிராகரிப்பவர்களில் சிலருக்குச் சிலர் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். நீங்கள் இதைச் செய்யாவிட்டால் அதாவது ஒருவருக்கொருவர் பாதுகாவலராக இருக்காவிட்டால் பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்பட்டு இருக்கும்.>[8:73]

மறுபடியும் அல்லா சொல்கிறார்...

<அவர்கள் மூலமாக ஆபத்து வரும் என்று கருதினால் தவிர> ஒருவேளை நம்பிக்கையாளர்கள் நம்பிக்கை இல்லாதவர்களினால்(Unbelievers) தீமை ஏற்படும் என்று பயப்பட்டால், இந்த சமயங்களில் இப்படி செய்ய வேண்டிய தில்லை. அதாவது, இந்த நேரங்களில் நம்பிக்கையாளர்கள், நம்பிக்கை இல்லாதவர்களோடு நட்பு கொள்ளலாம், அதுவும் வெளிப் புறத்திற்கு நட்பு மாதரி காண்பித்துக் கொள்ள வேண்டும், ஆனால், மனதளவில் அவர்களோடு நட்பு கொள்ளக் கூடாது. அல்புகாரியில் அபூ அத்தர்தா சொன்னதாக பதிவு செய்யப்ப‌ட்டுள்ளது, "நாம் சில மக்களிடம் பேசும் போது, முகத்தைப் பார்த்து சிரிக்கிறோம், ஆனால், நம்முடைய இதயம் அவர்களை சபித்துக் கொண்டு இருக்கும்". அல்புகாரி சொல்கிறார், ஒரு எடுத்துக்காட்டிற்கு சொல்லவேண்டுமானால், அல்புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்னவென்றால், அல் ஹஸன் கூறினார், "உயிர்த்தெழுதலின் நாள் வரை தக்கியா அனுமதிக்கப் பட்டுள்ளது"... (Source; underline emphasis ours)

இதுவரையில் நாம் பார்த்த விவரங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், முகமது ஒரு நேர்மையற்ற மனிதராக மாறுவதற்கு பொறுப்பு அல்லா தான். இப்படிப்பட்டவர் மீது யார் நம்பிக்கை கொள்ளமுடியும்!

இது மட்டுமல்ல, யேகோவா தேவனின் கோபம் மற்றும் சாபம் முகமதுவின் மீது விழும்படியாக செய்ததும் அல்லா தான். அதாவது "செய்த உறுதிமொழியை" எவ‌ன் முறிக்கின்றானோ அவன் யேகோவாவிற்கு அருவருப்பானவன் ஆவான்:

மோசே இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் தலைவரை நோக்கி: "கர்த்தர் கட்டளையிடுவது என்னவென்றால்: ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக் குட்படுத்திக் கொண்டாலும், அவன் சொல் தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின் படியெல்லாம் செய்யக் கடவன்." எண் 30:1-2

"தேவ சமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக. தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும். நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக் கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்து கொண்டதைச் செய். நீ நேர்ந்து கொண்டதைச் செய்யாமற் போவதைப் பார்க்கிலும், நேர்ந்து கொள்ளாதிருப்பதே நலம். உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே; அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்கு முன் சொல்லாதே; தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங் கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?" பிரசங்கி 5:2-6

ஆக, இதுவரை மேலே நாம் கண்ட இஸ்லாமிய விவரங்களின் படி, குர்‍ஆனில் வசனங்களாக உள்ள, நம்பிக்கயில்லாதவர்கள் முகமது பற்றி சொன்ன விவரங்கள் அனைத்தும் உண்மை என்பது மிகவும் தெளிவாக விளங்குகிறது, அதாவது அவர் பொய் சொல்லியுள்ளார் மற்றும் தான் செய்த சத்தியத்தை / வாக்கை முறித்துள்ளார். இதனால், முகமதுவை தன் காலத்தவர்கள்/உறவினர்கள் "அல் அமின்" என்று கண்டார்கள் என்பது நிருபிக்கப்படாத விவரமாகும். முஸ்லீம்கள் இப்படிப்பட்ட கதைகளை இட்டுக்கட்டியுள்ளார்கள்; அல்லது ஒரு வேளை இந்த புகழாரம் உண்மையாகவே அவருக்கு கொடுத்து இருந்திருந்தாலும், தனக்கு சூட்டிய அந்த புகழாரத்திற்கு ஏற்ப அவர் தன் வாழ்நாளின் மீதியான காலத்தில் வாழவில்லை, முக்கியமாக தன் கடைசி காலங்களில் வாழவில்லை.

ஆனால், இந்த புகழாரத்திற்கு தகுதியுடையவர் ஒருவர் இருக்கிறார், ஏனென்றால், உண்மையின் விலாசமாக வாழ்ந்திருக்கிறார் அவர். அவர் தான் கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்து, பிதாவின் பிழையற்ற ஆட்டுக்குட்டி.

"அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான்!" மாற்கு 1:24

"சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்." யோவான் 6:68-69

"சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுய மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ள வனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை." யோவான் 7:18

"என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்க விடவில்லை என்றார்." யோவான் 8:29

"அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." யோவான் 14:6

"ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப் படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக் கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்க தீர்மானித்தபோது, அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள். பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலை பாதகனை உங்களுக்காக விடுதலை பண்ண வேண்டுமென்று கேட்டு, ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந் தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்." அப் 3:13-15

"இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின் படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக் கப்பட்டீர்களே." எபேசியர் 4:21

"நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக் கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லா விதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாத வராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்." எபிரேயர் 4:15

"பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்த வருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்." எபிரேயர் 7:26

"நித்திய ஆவியினாலே தம்மைத் தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக் கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!" எபிரேயர் 9:14

"நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப் படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாத படியினாலே நம்மையும் அறியவில்லை. பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போ மென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறது போல தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான்….அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை….. பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறது போலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்." 1 யோவான் 3:1-3, 5, 7

மேலும் அறிய படிக்கவும்:

http://answering-islam.org/Books/Gairdner/camouflage.htm
http://answering-islam.org/Authors/Arlandson/sinless.htm
http://answering-islam.org/Responses/Abualrub/sinful_mo.htm
http://answering-islam.org/Responses/Abualrub/sinless_jesus.htm
http://answering-islam.org/Silas/mo-sinner.htm
http://answering-islam.org/Muhammad/treaties.html
http://answering-islam.org/Shamoun/compromise_doubt.htm
http://answering-islam.org/Responses/Osama/zawadi_s10_94.htm
http://answering-islam.org/Authors/Arlandson/insult_responses.htm

மூலம்:
http://www.answering-islam.org/Shamoun/mhd_amin.htm

இக்கட்டுரையின் பாகம் இரண்டை படிக்கவும்: முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்
 

Tuesday, August 12, 2008

இஸ்லாம் கல்விக்கு பதில்: குர்ஆனின் யஹ்யாவும் பைபிளின் யோவானும் - 2




இஸ்லாம் கல்விக்கு பதில்:

குர்ஆனின் யஹ்யாவும் பைபிளின் யோவானும்


முன்னுரை: "குர்‍ஆனில் கிறிஸ்துமஸ்" என்ற தலைப்பில், அல்லா குர்‍ஆனில் இயேசுவின் பிறப்புப் பற்றி செய்துள்ள குழப்பம் பற்றியும், முரண்பாடுகள், தவறுகள், சரித்திர பிழைகள் பற்றியும் நாம் தொடர் கட்டுரைகளாக கண்டு வருகிறோம்.



"குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)"

http://www.geocities.com/isa_koran/tamilpages/Koran/christmas/JohnAndQuran.html

என்ற தலைப்பில் இரண்டாவது பாகத்தை நான் வெளியிட்டு இருந்தேன். இதற்கு இஸ்லாம் கல்வி (http://www.islamkalvi.com/portal/?p=831) பதில் அளித்து இருந்தது.



நான் கொடுத்த தொடுப்பையே பதிலாக மொழிபெயர்த்த முஸ்லீம்கள்:

நான் இந்த கட்டுரையின் கடைசியில் குர்‍ஆனின் இந்த தவறு பற்றி "இஸ்லாமிக் அவார்னஸ்" என்ற தளம் கொடுத்த மறுப்பும், அதற்கு ஆன்சரிங் இஸ்லாம் தளம் கொடுத்த பதிலும் கொடுத்து இருந்தேன்.



இந்த தவறைப் பற்றி இஸ்லாமியர்களின் கேள்வியும் மற்றும் பதிலும் இங்கு காணலாம்.

Question 1 Answer 1 (Historical) Answer 2 (Scriptural)

Question 2 Answer 1 Answer 2

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Koran/christmas/JohnAndQuran.html

முஸ்லீம்கள் நான் கொடுத்த தொடுப்பையே பதிலாக எழுதி தருவார்கள் என்று எதிர்ப்பார்த்தேன், அப்படியே செய்துள்ளார்கள். அதாவது மேலே உள்ள தொடுப்புகளில் "Question 1" என்ற கட்டுரையையில் சில பகுதியை மொழிபெயர்த்து மற்றும் தங்கள் சொந்த வார்த்தைகளை சிலவற்றை சேர்த்து எழுதி வெளியிட்டுள்ளார்கள் நம் தமிழ் முஸ்லீம்கள். இப்பொழுது "Answer 1 (Historical), Answer 2 (Scriptural)" என்ற இரண்டு கட்டுரைகளை மொழிப்பெயர்க்க வேண்டிய கட்டாயத்தில் என்னை தள்ளியுள்ளார்கள்.

சரி, இஸ்லாமிக் அவார்னஸ் தள கட்டுரையில் உள்ள படத்தையும், விவரங்களையும் எழுதினார்களே, ஒரு பேச்சுக்காக‌வது "நன்றி இஸ்லாமிக் அவார்னஸ் தளம்" என்று எழுதினார்களா! என்றால், அதுவுமில்லை. நம் தமிழ் முஸ்லீம்கள் எந்த கட்டுரையை எழுதினாலும், ஆதாரம் இல்லாமல் எழுதுவது இவர்களுக்கு வழக்கம் தானே. கிறிஸ்தவர்கள் தள கட்டுரைகளைத் தான் ஆதாரமாக காட்டமாட்டார்கள், குறைந்தபட்சம் முஸ்லீம் தளத்திலிருந்து கட்டுரையை விவரங்களை கையாண்டுள்ளோமே, அதன் தொடுப்பையாவது தருவோம் என்று கூட இவர்களுக்கு தோன்றவில்லை. ஆனால், அந்த இஸ்லாமிக் அவார்னஸ் கட்டுரை காபிரைட் செய்யப்பட்டுள்ளது என்பதை இவர்கள் கவனிக்கவில்லை போலும். "© Islamic Awareness, All Rights Reserved" என்று அந்த தளம் கட்டுரையின் தலைப்பின் கீழேயே கொடுத்துள்ளது. அனுமதி கேட்டு இருந்தால், அனுமதி கொடுத்துவிடப் போகிறார்கள்.

குறைந்த பட்சம் என் கட்டுரை தொடுப்பையாவது கொடுத்தார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை, காரணம், "பயம்" இயேசு சொன்னது போல, சத்தியம் முஸ்லீம்களை அடிமைத் தனத்திலிருந்து விடுதலை ஆக்கிவிட்டால்? முஸ்லீம்கள் எது சத்தியம் எது பொய் என்று அறிந்துக்கொண்டால்? இனி இஸ்லாம் நிலைப்பது எப்படி?

இஸ்லாமை யாரும் அசைக்கமுடியாது என்று வாயில் கூழ் காய்ச்சுவதை விட்டுவிட்டு, உங்களுக்கு இஸ்லாம் மீது நம்பிக்கை இருந்தால், அல்லா தான் உண்மையான இறைவன் என்ற நம்பிக்கை இருந்தால், முகமது ஒரு நபி என்ற நம்பிக்கை இருந்தால், பயமில்லாமல் எங்களுக்கு பதில் சொல்லும் போது, எங்கள் மூல தொடுப்பை தாருங்கள். இல்லை, இல்லை, எங்களுக்கு பயம் அதிகம், சராசரி முஸ்லீம் உங்கள் கட்டுரையை படித்தால், இஸ்லாம் பொய் என்பதை உணர்ந்து, சந்தேகம் கொண்டு சென்றுவிடுவான் என்ற பயம் இருந்தால், ஈஸா குர்‍ஆன் தொடுப்பை தராதீர்கள்.

என் கட்டுரைகளைப் பாருங்கள், நீங்கள் எந்த கட்டுரையை மொழிபெயர்த்து பதிலாக தருவீர்கள் என்றும், அதன் பின்பு நான் என்ன பதில் சொல்வேன் என்றும் தெரிந்தே, இஸ்லாமிக் அவார்னஸ் தள கட்டுரையின் தொடுப்பை என் கட்டுரையில் கொடுத்தேன். மட்டுமல்ல, "முஸ்லீம்கள் கொடுத்த பதில்கள்" என்று சொல்லியே அந்த தொடுப்பை கொடுத்துள்ளேன். இது தான் நாங்கள் பின்பற்றும் மார்க்கம் மீது எங்களுக்கு உள்ள நம்பிக்கை. ஆனால், நீங்கள், தமிழ் முஸ்லீம் அறிஞர்கள் என் கட்டுரையின் தொடுப்பையும் தரவில்லை, என் கட்டுரையில் இருந்த ஒரு இஸ்லாமிய கட்டுரையின் தொடுப்பையும் தரவில்லை, என்னே இஸ்லாமியர்கள்.



சரி, இவர்களின் மறுப்பு கட்டுரையைப் பற்றி பார்ப்போம்:

இவர்கள் மொழிபெயர்த்த அல்லது கையாண்ட இஸ்லாமிக் அவார்னஸ் தள கட்டுரைக்கு, ஆன்சரிங் இஸ்லாம் பல பதில்களை கொடுத்துள்ளது.



பதில் 1: Historical Answer 1 by Andrew Vargo

Responses to Islamic Awareness "And No One Had The Name Yahyâ Before"

http://www.answering-islam.org/Responses/Saifullah/yahya_av.htm

பதில் 2: Scriptural Answer 2 by Sam Shamoun :

Responses to Islamic Awareness And No One Had The Name Yahyâ Before

http://www.answering-islam.org/Responses/Saifullah/yahya_ss.htm

இஸ்லாம் கல்வி எழுதிய‌ கட்டுரைக்கு இந்த இரண்டு கட்டுரைகளை பதில்களாக முன்வைக்கிறேன். ஆங்கிலம் தெரிந்தவர்கள் இதில் சென்று படித்துக்கொள்ளுங்கள். இஸ்லாமிக் அவார்னஸ் (அல்லது இஸ்லாம் கல்வி ) கொடுத்துள்ள பதில்கள் சரியானவையா? இன்னும் இவர்களின் இந்த பதிலினால் கட்டுரைகளால் என்னென்ன பிரச்சனைகளை இவர்கள் உருவாக்கியுள்ளார்கள் என்று உங்களுக்கே புரியும்.

இந்த இரண்டு கட்டுரைகளை நான் தமிழில் மொழிபெயர்க்க ஆரம்பித்துள்ளேன், மொழிபெயர்ப்பு முடிந்ததும், தமிழில் பதிக்கிறேன்



முதல் பதிலின் முடிவுரையை மட்டும் உங்களுக்காக தருகிறேன்.

In summary, the article on the name Yahya by Islamic-Awareness is an indictment on the quality of their research in many ways:

1. Their argument that John the Baptist had the malwâsha name Yahyâ has no basis in credible historical sources. To promote such a claim shows either utter incompetence or deliberate disregard for historical reality.

2. Their deliberate misrepresentation of the meaning of malwâsha further exposes a lack of intellectual honesty. The art of distorting by selective quotation is sadly not restricted to this article; see, as one further example, our response to their article on The Story of Cain and Abel.

3. Their use of sources which contradict Islam in various ways and even insult prophets of Islam and their parents shows how desperate the authors really are.
If Yahyâ is linguistically equivalent to Johanan, the Qur'an is in error because several men had this name before John the Baptist. If Yahyâ is not linguistically equivalent to Johanan, the Qur'an is in error because John the Baptist was not known as Yahyâ by those who knew him and provided us with an historical record.

John the Baptist's name was not Yahyâ. We have the historical record of those who lived in the same time period and personally knew John the Baptist to attest to this fact. No historian would discount their testimonies in favor of an account concocted more than five centuries later by Muhammad.

Andrew Vargo

Source: http://www.answering-islam.org/Responses/Saifullah/yahya_av.htm
இரண்டாவது பதிலின் முடிவுரையை உங்களுக்காக இங்கு தருகிறேன்.

To summarize, we discovered that:
• The supernatural manner in which John the Baptist was conceived is virtually identical to the way Isaac was conceived.

• Elijah and John were equals or equivalents since both share similar functions.

• The Hebrew and Greek form of the name John was a common name given to many individuals both before and during the Baptist's lifetime.

• The use of "Yahya" in the Quran for John is a gross error since there is no documentary evidence suggesting that Jews used such a name during the time of the Baptist.

• The single extra-Quranic evidence we have for the name Yahya stems from a group that only came into prominence during the fifth century.

Conclusion

In their zeal to defend the Quran from an error the staff at Islamic Awareness managed to introduce several additional problems into the equation. Therefore, we are thankful for all their efforts in making it easier for the Christian side to expose the fallacy of believing in the Quran as the word of God and in Muhammad as God's prophet.

In the service of our eternal King and Savior, Jesus Christ, our risen Lord forever. Amen.

Sam Shamoun

Source: http://www.answering-islam.org/Responses/Saifullah/yahya_ss.htm

முடிவுரை: இனியாவது, யாருடைய கட்டுரையை மொழிபெயர்த்தாலும், அல்லது அவர்களது கட்டுரை நமக்கு உதவியாக இருந்தாலும், முதலாவது அவர்களின் தொடுப்பைத் தரும் "ஒரு குறைந்த பட்ச இணைய இங்கீதம் (Minimum Culture)" என்னவென்று கற்றுக்கொண்டு கட்டுரையை எழுதுங்கள்.




மேலும் படிக்க:

1) குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)

2) குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் - பாகம் 1 - இஸ்லாம் கல்விக்கு பதில்: பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது "காப்பி" அடித்தது தான்.

3) குர்‍ஆனின் சரித்திர தவறு: "எஸ்றா அல்லாவின் குமாரனா?" யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது

4) சாத்தானின் வசனங்களும் குர்-ஆனும்

5) குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? - ஆசிரியர்: Khaled





 

 

Friday, July 11, 2008

குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் - பாகம் 1 - பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது "காப்பி" அடித்தது தான்





 

குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் - பாகம் 1


[இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட குர்‍ஆன் வசனங்களில் உள்ள முரண்பாடுகள், பிழைகள், கட்டுக்கதைகள் போன்றவற்றை, தொடர் கட்டுரைகளாக நாம் இனி காணப்போகின்றோம்.]

இஸ்லாம் கல்விக்கு பதில்:

பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது "காப்பி" அடித்தது தான்


முன்னுரை: இஸ்லாம் கல்வி தள கட்டுரை சொல்கின்றது, பைபிளைக் கண்டு குர்‍ஆன் "காப்பி" அடிக்கவில்லை, காரணம், பைபிளில் சொல்லாத பல அற்புதங்கள் குர்‍ஆனில் உள்ளது, எனவே, முகமது பைபிளிலிருந்து காப்பி அடிக்கவில்லை என்பது தெளிவு என்று எழுதியிருந்தார்கள். இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசியதாக குர்‍ஆன் சொல்லும் அற்புதம், இயேசு களிமண்ணினால் பறவை செய்து அதற்கு உயிர் கொடுத்த அற்புதம் இவைகள் பைபிளில் இல்லை, அதனால், பைபிளைக்கொண்டு காப்பி அடித்தது தான் குர்‍ஆன் என்று எப்படி கேட்கிறார்கள் கிறிஸ்தவர்கள் என்று கேள்வி எழுப்புகின்றது இஸ்லாம் கல்வி தளம்.

இஸ்லாம் கல்வி தளத்தில் கீழ் கண்டவாறு எழுதப்பட்டுள்ளது.
"ஈஸா அலைஹிஸ்ஸலாம் (இயேசு) அவர்களின் பிறப்பு முதல் பைபிளில் காணப்படாத ஏராளமான சம்பவங்களை திருக்குர்ஆன் விவரிக்கின்றது. ........
ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தொட்டில் குழந்தையாக இருக்கும்போதே நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று கூறி மக்களிடம் பேசியதன் மூலம் தன் முதல் அற்புதத்தை வெளிப்படுத்தியமை (19: 29-33) களிமண்ணில் ஒரு பறவையைப் போன்ற உருவத்தைச் செய்து அதில் அவர் ஊதியபோது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது உயிருள்ள பறவையாக மாறியது (3:49) போன்ற தகவல்களும் பைபிளில் எங்கும் இல்லை. பைபிளைப் பார்த்து காப்பியடித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை உருவாக்கியிருப்பின் பைபிளில் எங்குமே காணக்கிடைக்காத தகவல்களை அவர்கள் எங்கிருந்து பெற்றனர்?
திருக்குர்ஆன் முற்றிலும் இறைவனால் அருளப்பட்டது! அதன் காரணமாகவே பைபிளின் எந்தப் பகுதியிலும் இடம்பெறாத பல உண்மைச் சம்பவங்களும் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளன."

Source: http://www.islamkalvi.com/portal/?p=622

பைபிளில் இல்லாத அற்புதங்கள் பற்றிய விவரங்களை முகமது எங்கே இருந்து பெற்றார்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர், நம் சகோதரர்கள். இக்கேள்விக்கு பதில் தான் இக்கட்டுரை.

குர்‍ஆனின் இந்த குழந்தை அற்புத விவரங்கள், காப்பி அடித்தது தான்:

பைபிளில் தான் இந்த அற்புதம் பற்றி சொல்லப்படவில்லையே பின் எப்படி, காப்பி என்று சொல்கிறீர்கள் என்று கேட்டால், இது பைபிளிலிருந்து காப்பி அடிக்கவில்லை, அதற்கு பதிலாக, முகமது காலத்திற்கு முன்பு இருந்த பல புராணக்கதைகள், கட்டுக்கதைகள் மற்றும் இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பல தள்ளுபடி ஆகமங்களிலிருந்து தான் முகமது இவைகளை சொல்லியுள்ளார். இவைகள் இப்படிப்பட்ட புத்தகங்கள்(Infancy of Gospel Thomas, Arabic Infancy of Gospel etc..)இறைவனின் வெளிப்பாடுகள் அல்ல என்று ஒதுக்கிவிட்ட புத்தகங்களிலிருந்து எடுத்து குர்‍ஆனில் சேர்த்துவிட்டு, இது தான் அல்லா இறக்கியது என்று சொல்லியுள்ளார் முகமது, அதையும் இஸ்லாமியர்கள் நம்பிவிட்டு, இக்கதைகள் பைபிளில் இல்லை, குர்‍ஆனில் மட்டுமே உள்ளது என்று பெருமைப்படுகிறார்கள்.

Details of Infancy Gospels of Jesus


1) The Encyclopedia Britannica(பிரிட்டனிகா என்சைக்லோபீடியா):

பிரிட்டனிகா என்சைக்லோபீடியா சொல்கிறது

The Encyclopedia Britannica comments: "The Gospel was known to him chiefly through apocryphal and heretical sources."

"முகமதுவிற்கு சுவிசேஷம் பற்றிய விவரங்கள், தள்ளுபடி ஆகமங்களிலிருந்து, வேறுபல ஆகமங்களிலிருந்து கிடைத்துயிருக்கும்".


Britannica Encyclopedia Says about Gospel of the Infancy of Christ

...of Mark, and Gospel of Philip) preserve some legends and myths found in the early Christian centres of Edessa, Alexandria, and Asia Minor. The First Gospel of the Infancy of Jesus (known also as the Arabic Infancy Gospel ), for example, recounts that, one day, Jesus and his playmates were playing on a rooftop and one fell down and...

Source:    http://www.britannica.com/eb/topic-208181/First-Gospel-of-the-Infancy-of-Jesus


2) Wikipedia Encyclopedia(விக்கிபீடியா கூற்றுப்படி):.

Wikipedia Encyclopedia says about Gospel of the Infancy of Christ

The Infancy Gospel of Thomas is a non-canonical text that was part of a popular genre, aretalogy, of the 2nd and 3rd centuries

The text describes the life of the child Jesus, with fanciful, and sometimes malevolent, supernatural events, comparable to the trickster nature of the god-child in many a Greek myth. One of the episodes involves Jesus making clay birds, which he then proceeds to bring to life,
an act also attributed to Jesus in the Qur'an, thus indicating the text may have had substantial influence on Arabic tradition by the 7th century.

Source :  http://en.wikipedia.org/wiki/Infancy_Gospel_of_Thomas


Jesus creates birds in Infancy Gospel of Thomas and in Quran
Jesus creates birds

In the Qur'an, Jesus forms birds out of clay,

Quran : " I fashion for you out of clay the likeness of a bird, and I breathe into it and it is a bird [Qur'an [5:110]] "

This parallels an episode in the apocryphal Infancy Gospel of Thomas where he does the same:[24]

Infancy Gospel of Thomas :"
[Jesus] then made soft clay and shaped it into twelve sparrows.[25] "

The Infancy Gospel of Thomas was written, at the earliest,in the second century or, at the latest, in the sixth century.
Source : http://en.wikipedia.org/wiki/Legends_and_the_Qur'an


Jesus speaks in the cradle in Infancy Gospel of Thomas and in Quran
The Injilu 't Tufuliyyah or the Gospel of the Infancy of Jesus Christ, contains an Arabic translation of the Infancy Gospel of Thomas and additional narratives. This contains a narrative of Jesus speaking while an infant, also contained in the Qur'an.

Quran

" But she pointed to the babe. They said: "How can we talk to one who is a child in the cradle?" He [Jesus] said: "I am indeed a servant of Allah: He hath given me revelation and made me a prophet; And He hath made me blessed wheresoever I be, and hath enjoined on me Prayer and Charity as long as I live; (He) hath made me kind to my mother, and not overbearing or miserable; [Qur'an 19:29] "


Infancy Gospel of Thomas

" Jesus spake when he was in the cradle, and called out to his mother Mary:— "Verily I am Jesus, the Son of God, the Word, whom thou hast given birth to according to the good tidings given thee by the Angel Gabriel, and my Father hath sent me for the Salvation of the World."

Source: http://en.wikipedia.org/wiki/Legends_and_the_Qur'an



இந்த புத்தகத்தின் முதல் 3 வசனங்களிலேயே இயேசு குழந்தையாக இருக்கும் போது தன் தாயாகிய மரியாளிடம் பேசியதாக எழுதப்பட்டுள்ளது.


1st Gospel of the Infancy of Christ - Verse 2 and 3 இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசியதாக எழுதப்பட்டுள்ளது

வசனம் 2: இயேசு குழந்தையாக தொட்டிலில் இருக்கும்போதே தன் தாயாரிடம் பேசியதாக‌, அவர் கூறுகிறார்.

வசனம் 3: மரியாளே, காபிரியேல் தூதன் உனக்கு சொன்னது போல நான் தேவனுடைய குமாரனாகிய இயேசு, உலகத்தின் இரட்சிப்பிற்காக என் பிதா என்னை அனுப்பியுள்ளார்.

2. He relates that Jesus spoke even when he was in the cradle and said to his mother :

3. Mary, I am Jesus the Son of God, that word which you brought forth according to the declaration of the angel Gabriel to you, and my Father has sent me for the salvation of the world.


இந்த புத்தகத்தை முழுவதுமாக இங்கு படிக்கலாம்:

http://wesley.nnu.edu/biblical_studies/noncanon/gospels/infgos1.htm
http://www.pseudepigrapha.com/LostBooks/infancy1.htm
http://ministries.tliquest.net/theology/apocryphas/nt/infancy1.htm


இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசிய நிகழ்ச்சி முதல் முதலில் சொன்னது குர்-ஆன் இல்லை என்பது தான் உண்மை. மற்றும் இயேசு இப்படி பேசினார், என்பதற்கு ஆதாரமே இல்லை. அப்படி பேசியிருந்திருந்தால், இயேசுவின் சீடர்களே, எழுதியிருப்பார்கள். மரியாளும் அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்துள்ளார் என்பதை நாம் மறக்கக்கூடாது. இப்படி இயேசு செய்யாத அற்புதத்தை, மற்ற புத்தகங்களிலிருந்து "காபி" அடித்துவிட்டு, பைபிளில் சொல்லப்படவில்லை என்று பெருமையடித்தால் எப்படி?


இஸ்லாம் கல்வி சகோதரர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்று தான், அதாவது, இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட இந்த குழந்தையாக இருக்கும் போது பேசிய அற்புதம், மற்றும் களிமண் பறவையை உயிர் பெறச்செய்த அற்புதம், இவைகள் முகமது பைபிளிலிருந்து காப்பி அடிக்கவில்லை, மாறாக கிறிஸ்தவர்கள், யூதர்கள் எல்லாரும் தள்ளுபடி ஆகமங்கள் என்றும், இவைகள் இறைவனின் வெளிப்படுகள் அல்ல என்றும் ஒதுக்கி தள்ளிவிட்ட புத்தகங்களிலிருந்து அவர் காப்பி அடித்துள்ளார் என்பதை மட்டும் நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்.

முடிவுரை: இன்னும் இயேசுவின் பிறப்பு பற்றி குர்‍ஆன் சொல்லும் விவரங்களில் உள்ள முரண்பாடுகளையும், நடைமுறைக்கு ஏற்காத விவரங்களையும் கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த பாகத்தில் காணலாம்.

 

 

Thursday, July 10, 2008

அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை - An Answering-Islam.org/Tamil Article




 

அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை

(Outline of the Basic Christian Beliefs)


கிறிஸ்தவம்


இன்று கிறிஸ்தவம் என்ற வார்த்தை பல்வேறு மாறுபட்ட கருத்துக்களில் சிந்திக்கப்படுகிறது. இது நம் ஒவ்வொருவரின் மனங்களிலும் வேறுபட்ட பல வண்ணமான எண்ணங்களையும் சிந்தனைகளையும் உருவாக்குகிறது. சிலருக்கு இது சிலுவைப்போர் (Crusades, the Spanish Inquisition) அல்லது சலிம் விட்ச் ட்ரையல் (Salem Witch trials)  என்ற "மந்திரவாதிகளின் மிது வழக்கு" போன்ற சரித்திர நிகழ்வுகளை நினைவு படுத்துகின்றது. சிலருக்கு தேவாலயம், ஆராதனை மற்றும் பரலோகம் செல்லுதல் போன்ற காரியங்களை நினைவு படுத்துகின்றது. மேலும் சிலருக்கு தாங்கள் தொலைக் காட்சியில் காணும் தேவ ஊழியர்களைப் பற்றிய பரபரப்பான அவதூறு  செய்திகள் நினைவுக்கு வரலாம். எவ்வாறாயினும், கிறிஸ்த்துவம் பற்றிய நமது கருத்து, நமது அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையிலேயே உருவாகும். பலருக்கு இந்த அனுபவம் என்பது டிவி, பத்திரிக்கை போன்றவற்றின் மூலமாகவோ, ஆலயத்திற்குப் போவதினாலோ அல்லது தங்களை "கிறிஸ்தவர்கள்" எனக் கூறிக் கொள்ளும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசிப் பழகியதின் வழியாகவோ கிடைக்கும்.  எப்படியானலும், கிறிஸ்த்துவம் பற்றிய அறிவினை பெரும்பாலோனோர் பைபிளைப் படிப்பதன் மூலம் பெற்றுக் கொள்வதில்லை. பைபிள் சொல்வது என்ன எனப் புரிந்துகொள்ளும் அறிவு ஒன்றே  கிறிஸ்தவம் பற்றிய பரந்த முழுமையான தகவலுக்கு மிகவும் முக்கியமானது. பைபிள் மூலமாகவேயன்றி வேரொன்றின் மூலமாகவும் இதனை புரிந்துகொள்ள முடியாது என்பதினை கருத்தில் கொண்டு பல்வேறு தலைப்புகளைப் பற்றி எழுதவும் விவரிக்கவும் முனைந்தேன்.


பைபிளை படித்து புரிந்துகொள்வதின் மூலமாக கிறிஸ்துவத்தை அறிந்து கொள்ளும் ஒருவர் பைபிள் உண்மையா அல்லவா என்பதினை கருத்திற்கொள்ள வேண்டியதில்லை. உண்மையில் ஒரு மதத்தைப் பற்றி நாம் புரிந்துக்கொள்ள விரும்பினால், ஒரு முக்கியமான விவரத்தை நாம் உணரவேண்டும், அது என்னவென்றால், அம்மதத்தை பின்பற்றுகிறவர்கள் தங்கள் புனித நூல்கள் உண்மையானவைகள் என்று அவர்கள் நம்புகிறார்கள் என்பதை நாம் அறியவேண்டும். எனவே நாம் விவாதிக்கும் கீழ்கண்ட காரியங்கள் நாம் தெரிந்து கொள்வதற்காக மட்டுமே தவிர எதனையும் நம்ப நம்மை கட்டாயப்படுத்த அல்ல‌. அதாவது பைபிள் கூறுவது என்ன என்பதை விவாதிப்பது மட்டுமேயன்றி அதனை நம்புமாறு வலியுறுத்துதல் நம் நோக்கமன்று.

பைபிளின் அடிப்ப‌டை செய்தி


"கடவுள் என்பவர், கண் காணாத தொலைவில் தனியாக ஒரு சிம்மாசனத்தின் மீது வசதியாக‌ அமர்ந்து கொண்டு மனிதர்களைப் பற்றி நினைவு ஏதுமின்றி அவர்கள் அவரை அனுகி தஙகள் பிர‌ச்சனைகளை கவனிக்குமாறு வலியுறுத்தும்போது மட்டுமே நடவடிக்கை எடுக்கும்  ஒரு நபராக கடவுள் இருக்கிறார் என்று சிலர் மனதில் உருவாக்கிக் கொண்டுள்ளனர்." (1)


பைபிள் காட்டும் கடவுள் நிச்ச‌யமாக இப்படி இருக்கமாட்டார். இப்பகுதியில் பைபிள் கூறும் அடிப்ப‌டை செய்திகளை நாம் பார்ப்போம். இந்த அடிப்ப‌டை செய்தியில் கடவுளும் ஒரு பகுதியே. பைபிளில் காணப்படும் மற்றொரு முக்கியமான பகுதி மனிதனைப் பற்றியது, எனவே, மனிதனைப் பற்றி பைபிள் தொடர்ச்சியாக குறிப்பிடுகிறது. மனிதன் என நாம் கூறுவ‌து ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கிய மனித குலத்தையே என்பதை கருத்திற் கொள்ளவும். பைபிள், "கடவுள் மற்றும் மனிதன்" பற்றிய விவரங்களை சொல்வதோடு மட்டுமில்லாமல் "அவர்களுக்குள் உள்ள உறவுகள்" பற்றியும் சொல்கிறது. தற்போது நாம் இந்த உறவு பற்றி பைபிள் கூறுவதை சிந்திப்போம்.

ஆர‌ம்ப‌த்தில் . . .

ஆர‌ம்ப‌த்தில் பரிபூர‌ண‌மான‌ தேவன், அனைத்தையும் ப‌டைத்துள்ள‌தை ப‌ற்றி பைபிள் விள‌க்குகிற‌து. அவ‌ர் ம‌னித‌னை அவ‌ர் சாய‌லாக‌ப் ப‌டைத்தார் (ஆதியாகமம்1:27). ம‌னித‌ன் தேவனைப் போன்றே எந்த ஒரு குறைபாடுமின்றி இருந்தான். இவ்வாறு மனிதனும் தேவனும் சீரான குறையில்லாத நல்லுறவில் மகிழ்ந்தனர்.

 
அனைவ‌ரும் பின் வாங்கிப்போனார்க‌ள்

ம‌னித‌ன் தேவனின் சாயலாக இருந்தபடியால்யிருந்த‌ப‌டியினால் த‌ன‌க்கு வேண்டிய‌தை தன்னிச்சையாக‌ தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சுதந்திர‌த்தை பெற்றிருந்தான். இவ்வாறு தெரிந்துகொள்ளும் சுத‌ந்திர‌த்தினால் தேவனின் வ‌ழிக‌ளை விட்டு தான் தெரிந்து கொண்ட‌ சொந்த‌ வ‌ழியினில் மனிதன் சென்றான். ஒவ்வொருவ‌ரும் அவ்வாறு செய்தார்க‌ள் என்று பைபிள் கூறுகிற‌து. "நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்" (ஏசாயா 53 : 6).  இது பைபிளில் உள்ள‌ கெட்ட குமாரனின் உவமையில் வருவது போன்று (லூக்கா 15 : 11-32)  ஒரு குழ‌ந்தை வீட்டை விட்டு ஓடிப் போவதைப் போன்று உள்ள‌து. அதற்கு தன்னிச்சையாக உயிர் வாழும் சக்தி இல்லாவிடினும், ஒரு மூன்று வ‌ய‌து குழ‌ந்தை தன் பெற்றோரிடம் "வீட்டை விட்டுப்போய் இவ்வாறே தானே தனியாக வாழ்ந்து கொள்வேன்" எனக் கூறுவதாக வைத்துக் கொள்ளுங்கள். இது போன்றே மனிதனும் தேவனின் துணையின்றி ஏதும் செய்ய இயலாவிடினும் தானே தன்னிச்சையாக வாழ முற்படுகிறான்.

பாவம்

தேவனின் வழிகளை விட்டு விலகி தன் வழியை தானே தெரிந்து கொள்ளுதலைத்தான் பைபிள் "பாவம்" என்று குறிப்பிடுகிறது. இதுதான் தேவனிடமிருந்து மனிதனைப் பிரிக்கிறது. ஏசாயா 59 : 2 கூறுகிறது,"உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது". "பாவத்தின் சம்பளம் மரணம்" என ரோம‌ர் 6:23 சொல்கிற‌து. மனிதன் தன் பாவத்தின் காரணமாக தேவனை விட்டு ஆவிக்குரிய விதத்தில் பிரிந்துவிட்டான்(Man spiritually separated from God).

திராட்சை செடியிலிருந்து துண்டிக்கப்பட்ட‌ கொடியைப் போல (யோவான் 15:5),  ம‌னித‌ன் உயிரோடு இருப்ப‌தாக‌க் காண‌ப்பட்டாலும் தேவனின் வ‌ழிக‌ளை விட்டு வில‌கி இருக்கும் போது ஜீவ‌னைக் கொடுக்கும் ஊற்று அவனில் இல்லாத‌தினால் அவ‌ன் செத்த‌வ‌னாக‌வே காண‌ப்ப‌டுகிறான்.

தேவனிட‌ம் திரும்ப‌ ம‌னித‌ன் என்ன‌ செய்ய‌க்கூடும்?
 
ப‌ரிபூர‌ண‌மான‌ தேவனிட‌ம் இருந்த‌ முழுமையான‌ உற‌வை ம‌னித‌ன் துண்டித்ததால், தேவனிட‌மிருந்து பிரிக்க‌ப்ப‌ட்டு ஆத்துமார்த்த‌மாக‌ செத்த‌வ‌னானான் (spiritually dead). இந்த‌ அவ‌ல‌ நிலையிலிருந்து ம‌னித‌ன் த‌ன்னைக் காப்பாற்றிக் கொள்வ‌து எப்ப‌டி? தேவனிட‌மிருந்து வில‌கிய‌தால் முறிந்த‌ உற‌வினை ப‌ல‌ர், தங்களை ம‌த‌ ச‌ம்ப‌ந்த‌மான‌ காரிய‌ங்க‌ளில் ஈடுப‌டுத்திக் கொள்வ‌தினாலும், தூய வாழ்வு வாழ்வ‌தினாலும், தான‌ த‌ரும‌ங்க‌ள் செய்வ‌தினாலும் சீர்ப‌டுத்தி விட‌ நினைக்கிறார்க‌ள். ஆனால் ம‌னித‌ன் த‌ன்னைத் தானே இரட்சித்துக் கொள்ள‌ முடியாது என‌ பைபிள் கூறுகிற‌து (ம‌த்தேயு 19 : 25,26). முறிந்த‌ இவ்வுற‌வை சீர் செய்ய‌ மனிதன் எந்த நற்செயலைச் செய்தாலும் அது பயன்படாது, அது வீண் தான்  (காண்க‌ : எபேசிய‌ர் 2:8,9 & தீத்து : 3:5).  இதற்கு எந்த தீர்வையும் காணாமல், இப்படியே விட்டுவிட்டால், ம‌னித‌ன் நிர‌ந்தர‌மாக‌வே தேவனிட‌மிருந்து பிரிக்க‌ப்ப‌ட்டுப் போவான்.

தேவன் செய்வ‌து என்ன‌?

மனிதனோடு தனக்குள்ள‌  பூர‌ண‌மான‌ உற‌வை புதுப்பிக்க‌வே தேவன் விரும்புகிறார். 1 தீமோத்தேயு 2 : 4 இன் ப‌டி தேவன் எல்லா ம‌னித‌ரையும் இர‌ட்சிக்கவே விரும்புகிறார். எசேக்கியேல் 33 : 11 ல் தன்னைவிட்டு விலகிச் செல்பவர்களின் ம‌ர‌ண‌த்தை அவ‌ர் விரும்புவ‌தில்லை என‌ச் சொல்கிறார். என‌வே அவ‌ர் செய்வ‌து என்ன‌?

தேவனுடனுள்ள ஒரு பரிபூரணமான உறவுடன் மனிதன் இருக்க வேண்டுமானால்,   மனிதன் முதலில் பூரண சற்குணவானாக மாற்றப்படுதல் வேண்டும் (மத்தேயு : 5 : 48) (In order to enjoy a perfect relationship with God, man must first be made perfect, because God is perfect) .  ஆனால் மனிதன் ஏற்கனவே தேவனிடமிருந்து பிரிந்து செல்ல முடிவெடுத்ததினால் பரிபூரணத் தன்மையை இழந்து கறைபட்டு இருந்தான். புதிய உறவினை உருவாக்க தேவன் அவன் பாவத்தை நீக்கியாக வேண்டியிருந்தது.

எனவே தேவன் மனிதனாக வந்தார் என பைபிள் கூறுகிறது (யோவான் 1 : 14). அவர் பல வழிகளில் மனிதனைப் போன்று தூண்டப்பட்டும் பாவமற்ற ஓர் வாழ்க்கை வாழ்ந்தார் (எபிரேயர் 4 : 15). அவரின் பெயர் தான் இயேசு. மனிதனாக இருந்தும் பாவம் செய்யாமல் இருந்த ஒரே மனிதர் இயேசு ஒருவர் மட்டுமே மற்றும் தேவனோடு தன் உறவை முறித்துக் கொள்ளாதவராக இருந்தார், அவர் தாமே தம்மை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.

"நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக் கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக் கொண்டேன் என்றார்." (யோவான் 10:17-18).

அவர் தாமே தம்மை சிலுவையில் அறையப்பட ஒப்புக்கொடுத்து தேவனுக்கும் மனிதனுக்கும் இருந்த உறவு மறுபடியும் சீராக்கப்பட இந்த உலகத்தின் பாவங்கள் அனைத்தையும் தம்மீது சுமரப்பண்ணினார்.

"நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்." (2 கொரிந்தியர் 5:21)

"ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்." (1 பேதுரு 3:18)

ஆக, தேவனுக்கு முன்பாக பரிபூரணமாக்கப்பட அவர் மனிதனுக்கு ஒரு வழியை உண்டக்கினார். மனிதர் செலுத்த வேண்டாதபடிக்கு பாவத்திற்கான அபராதத்தினை தாமே செலுத்தி மரணத்தையும் தேவனிடமிருந்து ஏற்பட்ட பிரிவினையையும் அவரே ஏற்றுக்கொண்டார்.

தேவன் வழ‌ங்கும் ப‌ரிசை பெற்றுக்கொள்ளுத‌ல்

அப்ப‌டியானால் இயேசுவின் இச்செயலினால் அனைத்து ம‌னித‌ர்க‌ளும் தேவனின் ப‌க்க‌ம் திரும்பி விட்டார்கள் என பைபிள் கூறுகிற‌தா? என்று கேட்டால், பதில் "இல்லை" என்பதாகும்.  ரோம‌ர் 6:26 கூறுகிற‌து, "தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்" என்று. இது எவ்வாறு இருக்கிற‌து என்றால், ஒரு ம‌னித‌ன் தெருவோர‌ம் நின்றுகொண்டு வ‌ரும் அனைவ‌ருக்கும்  நூறு ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுக்கிறான் என்று வைத்துக் கொள்ளுவோம்; நாம் நூறு ரூபாய்க்கு உரிமையாள‌ராக‌ வேண்டுமென்றால் அந்த ம‌னித‌னிட‌ம் போய் அவ‌ர் கொடுக்கும் அந்த‌ நோட்டைப் பெற்றுக் கொள்ள‌ வேண்டும் அல்ல‌வா?. என‌வே ப‌ரிசு என்றாலும் அத‌னை பெற்றுக் கொள்வ‌து என்ப‌து ஒன்று உண்டு. இதைப் போன்றதே நித்திய‌ வாழ்வு (அதாவ‌து தேவனுடன் நித்திய‌ கால‌மாக‌ வாழ்வ‌து) என்ப‌தினை பைபிள் எடுத்துச் சொல்கிற‌து. கீழ்க‌ண்ட‌ வ‌ச‌ன‌ம் இதை விள‌க்குகிற‌து.

"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.அவர்கள், இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்."  (யோவான் 1:12-13)

"... கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.  நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப் படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்."  (ரோம‌ர் 10:9-10)

என‌வே இயேசு கிறிஸ்துவை ந‌ம்புத‌ல் என்பதே தேவன் அளிக்கும் ப‌ரிசினை பெற்றுக்கொள்ளும் முறை. இங்கு நம்புவ‌து என்ப‌து அறிவுபூர்வமாக‌ விசுவாசிப்பதை விட ஒரு படி அதிகமாகும்.  "இருத‌ய‌த்தில் விசுவாசித்த‌ல்" என‌  பைபிள் கூறுவ‌து நாம் வாழும் முறையினையே மாற்றி அமைக்க‌வ‌ல்ல‌ ஓர் ஆழ‌மான‌ ந‌ம்பிக்கை ஆகும். அதாவ‌து இயேசு ந‌ம‌க்குச் செய்வேன் என வாக்களித்ததை நமக்கு செய்வார் என்பதை முற்றிலுமாக விசுவாசித்தலே ஆகும். இயேசு சொல்கிறார் :

"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்." (வெளிப்படுத்துதல் 3:20)

ஆகவே எல்லா மனிதரும் செய்ய வேண்டியது இயேசு கிறிஸ்துவினிடத்தில் வேண்டிக்கொள்வது அல்லது கேட்பது மட்டுமே; அப்போது இயேசு அவர்களின் வாழ்வில் பிரவேசிப்பார்.

மொத்தத்தில் பைபிள் வழங்கும் செய்தி இதுவே :

முதலாவது
 
தேவன் மனிதனை தமது சாயலாகப் படைத்து அவனுடன் ஓர் பரிபூரண உறவுவினை வைத்திருந்தார்.

"நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்." என்று இயேசு சொன்னார் (யோவான் 10:10b)

"... இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டு இருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்."  (ரோம‌ர் 5:1)

இரண்டாவது
 
மனிதன் தேவனின் வழியை விட்டு விலகி தனது சொந்த வழியை தெரிந்து கொண்டான். இவ்விதமான வழி விலகுதலினால் (பாவம்) அவன் அவரிடமிருந்து பிரிக்கப்பட்டுப் போனான். அதாவது ஆத்துமார்த்தமாக அவன் செத்தான்.

"... உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவி கொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது." (ஏசாயா 59:2)

மூன்றாவது

தேவனின் ப‌ரிகார‌ம் - சிலுவை

இந்த‌ பிர‌ச்சனைக்குத் தீர்வு இயேசு கிறிஸ்து மட்டுமே. அவ‌ர் சிலுவையில் ம‌ரித்து க‌ல்ல‌றையிலிருந்து உயிர்தெழுந்து ந‌ம் பாவங்களுக்கான‌ ப‌ரிகார‌மான‌தினால் ந‌ம‌க்கும் தேவனுக்குமான‌ இடைவெளியினை இணைத்தார். இத‌ன் மூலம் மனிதனுக்கும் தேவனுக்கும் ஆதியிலே இருந்த பரிபூரண உறவை புதுப்பித்தார். 

"கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்." (1 பேதுரு 3:18)

"தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே." (I தீமத்தேயு 2:5)

"நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார்." (ரோம‌ர் 5:8)

 

நான்காவது

நம் பங்கு

தேவனுடன் வாழும் நித்திய வாழ்வுக்காக மனிதன் இப்பரிசை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். இதற்காக நாம் செய்ய வேண்டுவதெல்லாம் பைபிளில் வாக்களிக்கப்பட்டவைகளை அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் அவரை வேண்டிக்கொள்வதே.

"என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." (யோவான் 5:24)

 

நாம் ஏன் தேவனின் பக்கமாக கடந்துச்சென்று நித்திய வாழ்வினை சுதந்தரித்துக் கொள்ளக் கூடாது? நீங்கள் அப்படி போகவில்லையானால், இதற்கு ஏதாவது காரணமுண்டா உங்களிடம்?

கிறிஸ்துவை பெற்றுக்கொள்வது எப்படி?

  1. தேவையை ஒப்புக்கொள்ளுங்கள்  (நான் ஒரு பாவி).
  2. பாவங்களினின்று விலக ஒப்புக்கொடுங்கள் (மனம் திரும்புதல்).
  3. இயேசு கிறிஸ்து உங்களுக்காக‌ சிலுவையில் மரித்து, பின் உயிர்த்தெழுந்தார் என்பதை விசுவாசியுங்கள்.
  4. ஜெபத்தின் மூலம் இயேசுவை உங்களுள் வரவழைத்து உங்கள் வாழ்க்கை பரிசுத்த ஆவியின் மூலம் வழிந‌டத்தப்பட‌ ஒப்புக்கொடுங்கள் (அவரையே ஆண்டவராகவும் வாழ்வின் மீட்பராகவும் ஏற்றுக்கொள்ளுங்கள்)

என்னவென்று ஜெபிப்பது?

அன்புள்ள இயேசு ஆண்டவரே,

நான் பாவி என்பதை அறிவேன்; உமது மன்னிப்பு எனக்கு வேண்டும். எனது பாவங்களுக்காக நீர் மரித்தீர் என்பதை நான் விசுவாசிக்கிறேன். அந்தப் பாவங்களினின்று வெளியேவர நான் விரும்புகிறேன். இப்போது உம்மை என் உள்ளத்திலும் என் வாழ்விலும் வரவேற்கிறேன். உம்மை எனது ஆண்டவராகவும் எனது இரட்சகராகவும்  நம்பி என் வாழ்வில் உம்மை பின்பற்ற வாஞ்சிக்கிறேன்.


உமது ஒப்பற்ற நாமத்தினாலே, ஆமென்.

நித்திய வாழ்வுக்கான தேவனின் வாக்குறுதி

நீங்கள் இவ்வாறு ஜெபித்து இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பீர்களானால் நித்திய வாழ்வு உங்களுக்கு நிச்சயம் என பைபிள் உறுதியளிக்கிறது.

"... ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்." (ரோம‌ர் 10:13)

"கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல." (எபேசியர் 2:8-9)

இயேசுவை நாம் ஏற்றுக்கொண்டால், விசுவாசிக்கும் ஒவ்வொரு மனிதரினுள்ளும் வசிக்கும் பரிசுத்த ஆவியானவரின் இயற்கைக்கு அப்பாற்பட்ட செயலினால் நாம் மறுபடியும் தேவனின் குடும்பத்தில் பிறக்கிறோம். இதுவே மறுவாழ்வு அல்லது "புதிய பிறப்பு" என்பதாகும்.

____________________

மூலம்: தமிழ் - அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை | ஆங்கிலம்: Outline of the Basic Christian Beliefs




Isa Koran Home Page Back - Christianity Index
setstats1

முன் பக்கம் செல்ல

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்