இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

இந்த தளம் முதுகெலும்பு இல்லாத,பயந்தாங்கொல்லிகளால் புகார் செய்யப்பட்டு கூக்ளி நிர்வாகத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது.ஆனால் உண்மைதான் என்றைக்கும் வெற்றி பெறும்.குறுக்கு புத்தியுள்ளவர்கள் மட்டுமே இந்த மாதிரியான கீழ்தரமான வேலைகள் செய்வார்கள்.

Tuesday, July 24, 2012

ரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல

 

[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4 ]
அன்பு தம்பிக்கு,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

என்னுடைய முந்தைய கடிதத்தை நீ படித்து இருப்பாய் அதாவது, அல்லாஹ்விற்கும், பைபிளின் தேவனுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்பதை விளக்கியிருந்தேன். 

இந்த கடிதத்தில் கிறிஸ்தவர்களிடம் இஸ்லாமியர்கள் சொல்லும் இன்னொரு தவறான தகவல் பற்றி விளக்குகிறேன்.

சபை ஐக்கியம்: ஒரு கிறிஸ்தவர் சபை ஐக்கியத்தில் தொடர்ந்து பங்கு பெற்று, பைபிளை படித்து தியானித்து, பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டின் பொதுவான வேத அறிவை பெற்று இருந்தால், அவரிடம் இஸ்லாமியர்களின் வாதம் எடுபடாது. அவர்கள் சொல்லும் விவரங்களை அந்த கிறிஸ்தவன் பைபிளோடு உரசிப்பார்த்து அவர்கள் சொல்லும் விவரங்களில் எது உண்மை எது தவறு என்று அறிந்துக்கொள்வான். ஆனால், சபை ஐக்கியத்தில் ஈடுபடாமல், வேதத்தில் அதிகமாக முக்கியத்தும் காட்டாத சராசரி கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களின் வாதத்தை நம்பிவிடுகின்றனர். கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களாக மாறுவதற்கு அனேக காரணங்கள் உண்டு, அதில் சபை ஐக்கியத்தை விட்டுவிடுதலும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது.

ஏன் இஸ்லாம் கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இல்லை என்பதை இப்போது காண்போம்:

1.       அல்லாஹ் தம்மை பைபிளின் தேவனோடும், அவரது தீர்க்கதரிசிகளோடும், பைபிளின் நிகழ்ச்சிகளோடும் சம்மந்தப்படுத்திக் கொள்கிறார். இது தவறானதாகும், ஏனென்றால், நான் உனக்கு எழுதிய முந்தைய கடிதத்தில் குறிப்பிட்டதுபோல, அல்லாஹ்வும் பைபிளின் தேவனும் வெவ்வேறானவர்கள்.

2.       பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் படி, தேவன் மேசியாவை அனுப்பி தம் திட்டத்தை நிறைவேற்றியுள்ளார். அதாவது இயேசுவின் முதல் வருகை மற்றும் அவர் நிறைவேற்றிய காரியங்கள் யெகோவா தேவனின் மிகப்பெரிய வெற்றியாகும்.

3.       அதே பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் படி, மேசியாவின் இரண்டாம் வருகைக்காக உலகம் காத்துக்கொண்டு இருக்கிறது. பைபிள் தெளிவாக முழு விவரங்களையும் சொல்லும் போது, இடையில் இஸ்லாம் எங்கேயிருந்து வந்தது?

4.       குர்-ஆனில் பல பைபிள் நிகழ்ச்சிகள், தீர்க்கதரிசிகளின் பெயர்கள் குறிப்பிட்டு இருந்தால், அதனை யெகோவா தேவன் தான் அனுப்பினார் என்று எப்படி நம்பமுடியும்? பைபிளின் அடிப்படை சத்தியத்திற்கு எதிராக குர்-ஆன் பேசும் போது, எப்படி இவ்விரு வேதங்களையும் அனுப்பினவர் ஒருவராக இருக்கமுடியும்?

5.      பைபிளின் தேவன் தம்மை "பிதா" என்ற உறவு முறையில் தம்மை வெளிப்படுத்துகிறார், இதனை குர்-ஆன் நிராகரிக்கிறது. இயேசு தேவனுடைய வார்த்தையாக இருக்கிறார், தேவகுமாரனாக இருக்கிறார் என்று பைபிள் சொல்லும் போது குர்-ஆன் அதனை நிராகரிக்கிறது. இயேசுவின் பாடுகள், சிலுவையில் அறையப்படுதல், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை குர்-ஆன் நிராகரிக்கிறது. இப்படி இருக்கும் போது எப்படி கிறிஸ்தவத்தின் தொடர்ச்சியாக "இஸ்லாம்" இருக்கமுடியும்? கிறிஸ்தவத்தை நிராகரிக்கும் இஸ்லாம், கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி அல்ல.

6.      பைபிளில் காணப்படும் நிகழ்ச்சிகளை குர்-ஆன் எடுத்துக்கொண்டதோடு  மட்டுமல்லாமல், அவைகளை மாற்றியும் திருத்தியும் கூறியுள்ளது, இப்படி இருக்க பைபிளையும் குர்-ஆனையும் கொடுத்தவர் எப்படி ஒரே இறைவனாக இருக்கமுடியும்? எப்படி அந்த தேவன் கிறிஸ்தவத்திற்கு பிறகு இஸ்லாமை தொடரச்செய்வார்?

7.       பிதாவையும்,குமாரனையும் மறுதலிக்கிறவன் பொய்யன் என்றும், அந்திக்கிறிஸ்து என்றும் முதல் நூற்றாண்டிலேயே புதிய ஏற்பாடு ஆணித்தரமாக கூறுகிறது, ஆறு நூற்றாண்டுகளுக்கு பிறகு வந்த இஸ்லாம் சொல்லிவைத்தாற் போல பிதாவையும், குமாரனையும் மறுதலித்துள்ளது. புதிய ஏற்பாட்டின் பாடி  இஸ்லாம் ஒரு பொய்யான மற்றும் அந்திக் கிறிஸ்துவின் மார்க்கம் என்றுச் சொல்லவேண்டும்.

8.       முஹம்மது என்ற பெயரில் ஒரு நபி/தீர்க்கதரிசி வருவார் என்று இயேசு முன்னுரைத்தார் என்று அறியாமையில் இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். பரிசுத்த ஆவியானவர் பற்றி இயேசு கூறிய முன்னறிவிப்பை திருத்தி, முஹம்மதுவிற்கு முடிச்சு போட இஸ்லாமியர்கள் முயற்சி எடுக்கிறார்கள், இதுவும் இஸ்லாமியர்களின் தவறான தகவலாகும்.  (யோவான் 14.16-17, 14.26, 15.26 & 16.70)

9.       இயேசு முன்னுரைத்தது முஹம்மதுவை அல்ல, அவர் பரிசுத்த ஆவியானவரைத் தான் என்பதை நிருபிக்க அனேக காரணங்களை காட்டலாம், அவைகளில் சிலவற்றை நான் உனக்காக சுருக்கமாக குறிப்பிடுகிறேன். இயேசு வருவார் என்றுச் சொன்ன 'தேற்றரவாளனை' தம்முடைய சீடர்களுக்கு இயேசு வாக்குபண்ணினார். அதாவது பேதுரு, யோவான், மத்தேயூ போன்ற சீடர்கள் உயிரோடு இருக்கும் போதே 'தேற்றரவாளனை'  அனுப்புவேன் என்று இயேசு சொன்னாரே தவிர, 600 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அரேபிய மக்களுக்காக 'தேற்றரவாளனை'  அனுப்புவேன் என்று கூறவில்லை.

10.    உங்களோடு கூட அவர் (தேற்றரவாளன்) எப்போதும்  இருப்பார் என்று இயேசு கூறினார். இயேசுவின் காலத்தில் முஹம்மது வரவில்லை மற்றும் அவர் எப்போதும் மக்களோடு இருக்கப்போவதுமில்லை. 63 ஆண்டுகள் வாழ்ந்து முஹம்மது மரித்துவிட்டார். ஆகையால் இயேசு கூறியது பரிசுத்த ஆவியானவரைத்தான், முஹம்மதுவை அல்ல என்பது திண்ணம்.

11.    இயேசு சீடர்களிடம் கூறும் போது, அவர் உங்களுக்குள் வாழுகிறார், உங்களோடு இருக்கிறார் என்று கூறினார். முதல் நூற்றாண்டின் சீடர்களுக்குள் எப்படி 7ம் நூற்றாண்டில் வந்த முஹம்மது வாழமுடியும் அல்லது அவர்களோடு இருக்கமுடியும்?

எந்த வசனங்களை இஸ்லாமியர்கள் மேற்கோள் காட்டுகிறார்களோ அதே வசனங்களைக் கொண்டு இயேசு முன்னறிவித்தது பரிசுத்த ஆவியானவரைத் தான் முஹம்மதுவை அல்ல என்று தெளிவாக முடியும்.

எனவே, பரிசுத்த ஆவியானவர் பற்றிய முன்னறிவிப்பை, முஹம்மதுவிற்கு முடிச்சுப்போடுவது அறியாமையாகும். மேலும், கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி தான் இஸ்லாம் என்றுச் சொல்வதும் அடிப்படையிலிருந்தே தவறானதாகும்.

 தம்பி, இதைப் பற்றி மேலும் அறிய நீ ஆவலாக இருந்தால், ஒரே ஒரு முறை புதிய ஏற்பாட்டை படித்துப்பார்,  பரிசுத்த ஆவியானவர் பற்றிய ஒரு சில வசனங்களை படித்து ஆராய்ந்துப்பார், உனக்கே உண்மை விளங்கும்.  மேலும் விளக்கம் தேவை என்று விரும்பினால், எனக்கு எழுது, நான் மறுபடியும் உனக்கு அதிக விளக்கங்களைத் தருவேன்.

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.

 

இப்படிக்கு உன் சகோதரன்

தமிழ் கிறிஸ்தவன்.



--
7/24/2012 10:06:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


ரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல

 

 
[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3 ]
 
அன்பு தம்பிக்கு,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

நீ எழுதிய மெயில் (கடிதம்) கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். என்னுடைய மூன்று கடிதங்களுக்கு ஒரு பதிலையாவது நீ எழுதினாய் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.  நீ அந்த கடிதத்தில். பைபிளின் தேவனாகிய "யெகோவா தேவனும், அல்லாஹ்வும் ஒருவரே" என்று குறிப்பிட்டு இருந்தாய். இன்று அதே தலைப்பு குறித்து ஒரு சில விவரங்களை சுருக்கமாக நான் உனக்கு எழுதட்டுமா? நம்முடைய இந்த உரையாடல் மிகவும் உபயோகமான ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒரு தவறான தகவலை முஸ்லிம்கள் உனக்குச் சொல்லியுள்ளார்கள். பைபிளின் தேவனும், குர்-ஆனின் அல்லாஹ்வும் ஒரே நபர் அல்ல, இவர்கள் வெவ்வேறானவர்கள். வானத்துக்கும் பூமிக்கும் எவ்வளவு தூரம் இருக்கிறதோ அவ்வளவு இடைவெளி இவ்விருவருக்கும் இடையே உள்ளது.  நீ சௌதி சென்ற பிறகு பல மாதங்களாக சபை ஐக்கியத்தையும், சகோதர ஐக்கியத்தையும் உதறி தள்ளிவிட்டதினால் தான், நீ இஸ்லாமியர்களின் சொற்களை கேட்டு, அவர்கள் சொல்வது உண்மை என்று நம்பியுள்ளாய். சரி விஷயத்திற்கு வருகிறேன். யெகோவா தேவனும், அல்லாஹ்வும் வெவ்வேறானவர்கள் என்பதை விளக்க ஒரு புத்தகமே எழுதலாம், ஆனால், நீண்ட விளக்கங்களை படித்தால் என் தம்பிக்கு சலிப்பு உண்டாகுமே என்ற எண்ணத்தால்,  சுருக்கமாக சில குறிப்புக்களை எழுதுகிறேன். உனக்கு நேரம் கிடைக்கும்போது நான் சொல்லும் விவரங்களை நீயே படித்து தெரிந்துக்கொள்.

• முதலாவதாக, பைபிளின் இறைவன் தன்னை திரித்துவ தேவனாக வெளிப்படுத்துகிறார், பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராக  இருக்கிறார். ஆனால், அல்லாஹ்வோ ஏக இறைவனாக தம்மை வெளிப்படுத்துகிறார்.

• இரண்டாவதாக, பைபிளின் தேவன் தம்மை ஒரு பிதாவாக அனேக இடங்களில் தம்மை வெளிப்படுத்துகிறார். ஆனால், அல்லாஹ்வோ ஒரு எஜமானன் போல காட்சி அளிக்கிறார். தம்மை பின்பற்றுபவர்களை தன் பிள்ளைகளைப்போல அன்பாக பார்க்காத இறைவனாக அல்லாஹ் இருக்கிறார். உனக்கு சந்தேகம் இருந்தால், இஸ்லாமிய அறிஞர்களை கேட்டுப்பார், அதாவது "நான் அல்லாஹ்வை அப்பா என்று அழைக்கலாமா? அப்பா என்ற உரிமையோடு வேண்டிக்கொள்ளலாமா?" என்று கேட்டு தெரிந்துக்கொள். ஜாக்கிரதை நீ இஸ்லாமியர்களிடம் கேட்கும் கேள்விகள் உன்னை ஆபத்தில் கொண்டுச் சேர்க்கும்.

• மூன்றாவதாக, பைபிளின் தேவன் மக்களின் மீது "நிபந்தனையற்ற அன்பை பொழிகிறார், பாவி மீதும் அன்பு கொள்கிறார், அவன் திருந்தி மறுபடியும் தன்னிடம் வருவதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளார்". ஆனால், அல்லாஹ் இப்படி இல்லை. அவர் தீயவர்களை நேசிப்பதில்லை, பாவிகளை நேசிப்பதில்லை (ஸூரா 28:77, 30:45).  நற்செயல்களைச் செய்து தம்மை தொழுதுக்கொள்கிறவர்களை மட்டுமே நேசிக்கிறார் (ஸுரா 2:195, 2:222, 3:76, 3:146, 3:159, 5:13). நாம் பாவிகளாக இருக்கும் போதே நம் தேவன் நம்மீது அன்பு கூர்ந்து, தம்மைத் தாமே நமக்காக ஒப்புக்கொடுத்தார் (உனக்கு பைபிள் வசனங்களை அதிகமாக மேற்கோள் காட்டவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். இன்னும் உன் பைபிள் உன்னிடம் உள்ளதா? அல்லது அதனை தூக்கி எறிந்துவிட்டாயா?)

• நான்காவதாக, பைபிளின் தேவன்  நம் நிலைக்கு இறங்கிவந்து நம்முடன்  ஒரு நண்பனைப்போல நட்புறவை வைத்துக்கொள்ள  விரும்புகிறார். நாமும் முழு இருதயத்தோடு அவரை நேசிக்கவேண்டும் என்று விரும்புகிறார்.  ஆனால், அல்லாஹ் தன் மக்களிடம் எதிர்ப்பார்ப்பதெல்லாம் 'கீழ்படிதல்' மட்டுமே ஆகும்.  இயந்திரங்களைப் போல மக்கள் தன்னை தொழுதுக்கொள்ள வேண்டும், புரிந்தாலும், புரியாவிட்டாலும் தன் வேதத்தை படிக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார். கிறிஸ்தவர்களுக்கு தேவன் ஆறுதல்படுத்தும் பிதாவாகவும் உற்ற நண்பனாகவும் இருக்கிறார். ஆனால், முஸ்லிம்களுக்கு அல்லாஹ் அதிகாரம் செலுத்தும் ஒரு எஜமானனாக இருக்கிறார்.

• ஐந்தாவதாக,  பைபிளின் தேவன் அன்பானவர் மட்டுமல்ல, அவர் பரிசுத்தராகவும் பரிபூரண நீதியுள்ளவராகவும் இருக்கிறார். அதாவது நாம் பாவம் செய்யும் போது நம் தேவனுக்கு அவமானத்தை கொண்டு வருகிறோம், அவருக்கு எதிராக செயல்படுகிறோம், இதற்காக நீதியுள்ள தேவனிடமிருந்து நமக்கு தண்டனை காத்திருக்கும். அவர் நீதியுள்ளவர் என்பதால் தண்டனை நமக்கு தப்பாது.  அதே நேரத்தில் அவர் அன்புள்ளவராக இருப்பதினால், நம்முடைய தண்டனையை  அவர் தம்முடைய வார்த்தையை குமாரனாக அனுப்பி தாமே அதனை சுமந்தார். ஆனால், மக்கள் பாவங்கள் செய்து அல்லாஹ்வை அவமானப்படுத்தினாலும் சரி, சில சடங்காச்சாரங்களை செய்து மன்னிப்பு கேட்டால் அதனை அல்லாஹ் மன்னித்துவிடுகிறார், தன் நீதி பற்றி தனக்கே அக்கரையில்லாத இறைவனாக அல்லாஹ் காணப்படுகிறார்.  தம்மை மக்கள் அவமானப்படுத்தினதை காற்றில் விட்டுவிட்டார். எனவே அல்லாஹ் "பரிபூரண நீதியுள்ள நியாயாதிபதி" அல்ல. பைபிளின் தேவன் பரிபூரண நீதியுள்ள நியாயாதிபதியாகவும் இருக்கிறார், அதே நேரத்தில் அன்பாகவும் இருக்கிறார்.

• ஆறாவதாக பைபிளின் தேவன் தம்மை விட பெரியவர் யாரும் இல்லை என்பதால் தம்மீது மட்டுமே சத்தியம் செய்வார். ஆனால், அல்லாஹ் அனேக காரியங்கள் மீது சத்தியம் செய்வார், அதாவது இரவின் மீதும், மலையின் மீதும், நட்சத்திரங்கள் மீதும், நகரத்தின் மீதும், காலத்தின் மீதும் இன்னும் அனேக விஷயங்கள் மீதும் சத்தியம் செய்கிறார்.  இவ்விருவருக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தைப் பார்.

• ஏழாவதாக, பைபிளின் தேவனின் பரலோகம் அல்லது சொர்க்கம் ஆவிக்குரிய சொர்க்கமாகும். பரலோகில் திருமணம் இல்லை, உடலுறவு இல்லை என்று வேதம் தெளிவாகச் சொல்கிறது. ஆனால், அல்லாஹ்வின் சொர்க்கமோ, மோகம் நிறைந்த ஒரு இடமாக காட்சி அளிக்கிறது. குறைந்த பட்சம் ஒரு முஸ்லிம் சொர்க்கத்தில் தன் மனைவியோடு உடலுறவு கொள்கிறார் என்று சொன்னாலும் ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அல்லாஹ்வின் சொர்க்கம் கிட்டத்தட்ட ஒரு விபச்சார விடுதி போல காட்சி அளிக்கிறது (தம்பி இந்த வார்த்தையை பயன்படுத்த எனக்கு வேதனையாக உள்ளது, ஆனால் வேறு வழியில்லை, உண்மை கசக்கத்தான் செய்யும்). அனேக கன்னிப்பெண்கள் முஸ்லிம்களுக்கு கிடைப்பதாகவும், அவர்களோடு முஸ்லிம்கள் உடலுறவில் ஈடுபட்டு இருப்பதாகவும் இஸ்லாம் கூறுகிறது. நீ சிந்தித்துப்பார், பைபிளின் தேவனின் சொர்க்கத்திற்கும், அல்லாஹ்வின் சொர்க்கத்திற்கும் இடையே எவ்வளவு பெரிய இடைவெளி, இவ்விருவரும் ஒருவராக இருக்கமுடியுமா? நிச்சயமாக இல்லை.

இப்படி அனேக வித்தியாசங்களைச் சொல்லிக்கொண்டு போகலாம். ஒரு சில மாதங்களாக இஸ்லாமியனாக இருக்கின்ற நீ, நிச்சயம் இஸ்லாமிய சொர்க்கம் பற்றி, அல்லது இஸ்லாமியர்களுக்கு சொர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் பெண்கள் பற்றிய ஒரு பிரசங்கத்தையாவது (பயானை) கேட்டு இருப்பாய் என்று நிச்சயமாக நான் நம்புகிறேன். 

ஆகவே, தம்பி நீ நினைப்பதுபோல, பைபிளின் தேவனும் குர்-ஆனின் அல்லாஹ்வும் ஒருவரல்ல என்பதை நீ புரிந்துக்கொள்ளவேண்டும்.

இதைப் பற்றி இன்னும் அதிகமாக உனக்கு விவரம் தேவைப்பட்டால் எனக்கு தெரிவிக்க மறந்துவிடாதே.

அடுத்த கடிதத்திலுல் உன்னை சந்திக்கிறேன்.

இப்படிக்கு
உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்.



--
7/23/2012 11:21:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


முன் பக்கம் செல்ல

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்